#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

31 ஜனவரி, 2012

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை:இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த அணுஉலை தொடர்பான கூட்டத்திற்கு சென்றிருந்த அணுஉலை எதிர்ப்புக் குழுவினர் மீது இந்து முன்னணியினரும், இந்து மக்கள் கட்சியினரும் நடத்திய கொலைவெறித் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

உறவுகளைப் பேணவேண்டியதின் அவசியம் பற்றி இஸ்லாம்



ஈமானுடன் சம்பந்தப்பட்டது:

“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்


அல்லாஹ்வுடன் தொடர்பு :

வெளிநாட்டில் வசிப்போர் இந்தியாவுக்கு மிக எளிதாய் பணம் அனுப்ப புதிய வசதி


 
ICICI Transfer Money to India
 
Money2India.காம் மூலம் இந்தியாவுக்கு பணம் அனுப்புவது எளிதானது, வசதியானது மட்டுமல்ல, செலவும் குறைவானது.

Money2India.காமில் ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேசனை ஒரே ஒரு முறை செய்துவிட்டால் போதும், இந்தியாவில் நீங்கள் விரும்புவோருக்கு உடனடியாக பணம் அனுப்பலாம்.

Money2India சேவையை சுமார் 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். பணத்தை அனுப்புவதோடு மட்டுமல்லாமல், அந்த பரிவர்த்தனை எந்த நிலையில் உள்ளது என்பதை எப்போது வேண்டுமானாலும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளதால், உலகெங்கும் இந்த சேவையை மிக விரும்பி பயன்படுத்துகின்றனர்.

30 ஜனவரி, 2012

தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒன்று இணைந்தால் மாபெறும் அரசியல் சக்தி,திருமா

 பழனி அருகே ஆயக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசினார்.
கூட்டத்தில் மேலும் அவர், பெரியார் பிறந்த மண்ணில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் அமைச்சர் ஆக முடியவில்லை. ஆனால் பெரியார் பிறக்காத மண்ணில் பிறந்த மாயாவதி உத்திரப்பிரதேச மாநிலத்தில் 4 முறை முதல் அமைச்சர் ஆகி உள்ளார்.

இஸ்லாமியர்கள் குறித்து துவேஷத்தைத் தூண்டும் வழக்கு.சாமி மன்னிப்பு கடிதம்


முஸ்லிம்களைப் பற்றி இனி துவேஷமாக எழுதமாட்டேன்: சு.சாமி!
சுப்ரமணியசாமி
"இனிமேல் முஸ்லிம்கள் குறித்து துவேஷமாக எதுவும் எழுத மாட்டேன்" என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கொடுத்துள்ளார்.
"முன்னர் முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்கவேண்டும்" என்று அவர் எழுதியிருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிணை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவ்வாறு அவர் எழுதிக்கொடுத்ததால், அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

முஸ்லிம்கள் இட ஒதுகீடு கவர்னர் உரையில் இடம்பெறவில்லை வருத்தமளிக்கிறது. Dr,ஜாவாஹிருல்லா M.L.A


இதை ஏற்று கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில்  சேதமடைந்த குடிசைகளுக்குப் பதில் ஒரு இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் ரூ. 1000  கோடியில் செயல்படுத்தப்பட
எனினும், தமிழக அரசால் ஏற்கெனவே எசயல்படுத்தப்படும் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.1.80 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு தலா ரூ.1 இலட்சம் மட்டும் ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானது அல்ல.

29 ஜனவரி, 2012

உப்பு கலந்த நொறுக்குத்தீனி இதயத்தை பாதிக்கும்!–மருத்துவர்கள் எச்சரிக்கை


  • Salty Snack 

அதிக உப்பு நிறைந்த பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை உட்கொள்வது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பாக்கெட் ஃப்ரெஞ்ச் ப்ரை சாப்பிடுபவர்களுக்கு சரியாக 30 நிமிடத்தில் அதற்கான பாதிப்பு தெரியவரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

28 ஜனவரி, 2012

தமிழ்நாடு முஸ்லீம்முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி புதிய தலைவர்கள்

தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு......



ஆடம்பரத்துக்காக படித்த பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்களே...! - உச்சநீதிமன்றம் கவலை


 
Cover Story Prostitution
 
டெல்லி: பட்டதாரி பெண்களும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பணத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கு, உச்சநீரிமன்றத்தில் நீதிபதிகள் அல்டமஸ் கபீர், கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

26 ஜனவரி, 2012

கோவை பள்ளிவாசல் மீது கல்வீச்சு தமுமுக மாவட்ட துணைத்தலைவர் கார் கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைப்பு பதட்டம்


கோவை பள்ளிவாசல் மீது கல்வீச்சு தமுமுக மாவட்ட துணைத்தலைவர் கார் கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைப்பு பதட்டம்.
கோவை குனியமுத்தூர் மூவேந்தர் நகர் பகுதியில் தாஜீல் இஸ்லாம் ஹனிபி சுன்னத் ஜமாத் கிளை பள்ளிவாசல் உள்ளது.
நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் பள்ளிவாசல் முன்புறம் உள்ள ஜன்னல் கண்ணாடியை கல்வீசி தாக்கினர். பள்ளிவாசலில் தங்கியிருந்த மோதினார் நூர்முகமது சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது சிலர் அங்கிருந்து ஒடியுள்ளனர்.

ஷார்ஜாவில் 25 மாடி குடியிருப்பில் தீ-125 குடும்பங்கள் தப்பின-ஆனால் உடமைகள் நாசம்!


Sharjah fire
 
ஷார்ஜா: ஷார்ஜா அல் தவுன் ஏரியாவில் உள்ள 25 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு திடீர் என்று தீப்பிடித்தது. இதனால் அங்கு தங்கியிருந்த 125 குடும்பங்கள் வீடுகள், சொத்துக்களை இழந்து தவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக அந்த குடும்பங்கள் உயிர் தப்பியுள்ளன.

ஷார்ஜா அல் தவுன் ஏரியாவில் உள்ள 25 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு திடீர் என்று தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இறுதியாக காலை 9.15 மணி அளவில் தான் தீயை அணைக்க முடிந்தது.

கேரள ஆளுநரும், முன்னாள் புதுவை மாநிலருமான பரூக் மரைக்காயர் மரணம்


 
Farooq Maraikayar
 
சென்னை: கேரள மாநில ஆளுநரும், முன்னாள் புதுவை முதல்வருமான பரூக் மரைக்காயர் நேற்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74.

புதுச்சேரி மாநில முதல்வராக பரூக் மரைக்காயர் இருந்தபோது அனைத்துத் தரப்பினரின் அன்பையும், மதிப்பையும் பெற்றுத் திகழ்ந்தார். மூ்ன்று முறை புதுவை முதல்வராக இருந்துள்ள இவர், புதுவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கும் 3 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முஸ்லீம் குழுக்களால் வீடியோ கான்பரன்ஸ் ரத்தானது அச்சமளிக்கிறது : சல்மான் ருஷ்டி


புது தில்லி : ஜெய்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டி பங்கேற்பதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுவதாக இருந்ததும் முஸ்லீம் குழுக்களின் எதிர்ப்பால் ரத்தானது அச்சமளிக்கும் சூழல் என்று சல்மான் ருஷ்டி கூறியுள்ளார்.

ஜெய்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவர் ஏற்கனவே முஸ்லீம்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சாத்தானின் கவிதைகள் எனும் புத்தகம் எழுதியதால் அப்புத்தகம் தடை செய்யப்பட்டது. எனவே அவரை இவ்விழாவில் அனுமதிக்க கூடாது என்று எதிர்ப்பு எழுந்தது. 

டென்ஷனைக் குறைங்க, வழுக்கை சரியாகும்!


அழகுக்கு ஆதாரமாக திகழ்பவை கூந்தல் என்பது பலரது எண்ணம். இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் கூட தலைமுடி கொட்டி வழுக்கையினால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம் கடையில் ரசாயனங்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உள்ளிட்டவைகளை கூந்தலுக்குப் போடுவதுதான் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். தலை முடி கொட்டிவிட்டாலே பாதி அழகு போய்விட்டது என்ற வருத்தத்திலேயே எண்ணற்றோர் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.

25 ஜனவரி, 2012

இதுபோன்ற செய்திகள் எந்த செய்திதாள்களிலும் இடம்பெறாது.

நமது கடமை – குடியரசு தினம்





இந்திய சுதந்திரத்திற்கு முன் 1946

டிச. 9ல் அரசியல் நிர்ணய சபை

கூட்டப்பட்டது. அதன்

தற்காலிகதலைவராக சச்சிதானந்த

சின்கா

தேர்வானார். இந்திய சுதந்திரசட்டம் 1947 ஜூனில் நிறைவேறியது. 1947

 ஆக.15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

24 ஜனவரி, 2012

இந்தியாவின் விசா கட்டுப்பாட்டை எதிர்த்து உக்ரைன் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்!

 
இந்திய தூதரகம் உக்ரைன் நாட்டுப் பெண்களுக்கு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளைக் கண்டித்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலக கட்டடத்தில் ஏறி மேலாடைகளைக் கழற்றி விட்டு நான்கு உக்ரைன் பெண்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்களது மேலாடைகளைக் கழற்றி விட்டு இவர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இவர்கள் பெமென் எனப்படும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

19 ஜனவரி, 2012

இராமநாதபுரத்தில் இரயில்களின் சேவையை அதிகப்படுத்த வேண்டும் - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை


இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
இராமாநாதபுரத்திற்கு வருகைப் புரிந்த தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் இன்று (19-01-2012) 10 கோரிக்கை மனுக்களை அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுக்களில் இடம் பெற்றுள்ளவை

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திர ஜூஸ்" பாஜக தேர்தல் வாக்குறுதி!

பிப்ரவரி மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.
மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. பாஜக தலைவர்கள் மாநிலம் முழுவதிலும் சென்று தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.

17 ஜனவரி, 2012

ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பெண்கள் பெட்டியில் அலாரம் ,ரயில்வே அறிவிப்பு


: ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பெண்கள் பெட்டியில் அலாரம் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
ரயில்களில் பெண்களுக்காக தனிப்பெட்டிகள் ஒதுககப்பட்டுள்ளன. இவற்றி்ல் பயணம் செய்யும் பெண்களுக்கு இரவு நேரத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. கடந்த ஆண்டு எர்ணாகுளத்தில் இருந்து சொரனூருக்கு பயணம் செய்த சவுமியா என்ற இளம்பெண் ஓடும் ரயிலி்ல் இருந்து கீழே தள்ளப்பட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். கேரளாவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே..

பெப்பர் ஸ்ப்ரே...
பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே... திருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம்! பெப்பர் ஸ்ப்ரே..அப்படினா...என்ன.! ? என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் இதோ

"கண்களை எரிய

12 ஜனவரி, 2012

தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு


தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம்அதிகரிக்கப்பட்டு என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விண்ணப்பம் எப்போது?
ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.

இது ஒரு தேசிய அவமானச் சின்னம்.!!!

உலகிலேயே போதிய ஊட்டச்சத்து இல்லாக் குழந்தைகளில் 3-ல் ஒரு குழந்தை இந்தியாவை சேந்ததாக  HUNGaMA (Hunger and Malnutrition) என்ற அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறது.

இது நமது நாட்டிற்கு பெரிய அவமானமாகும், இது ஒரு தேசிய அவமானச் சின்னம் என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
(அய்யா பிரதமர் அய்யா.. வெறும் வார்த்தைகளும், அறிக்கைகளும் இத்தகைய குறைகளை போக்காது என்பது உங்களுக்கும் தெரியும். )

10 ஜனவரி, 2012

புயலில் பாதிக்கப்ட்ட மக்களுக்கு த.மு.மு.க தலைவர் ஜாவாஹிருல்லாஹ் நேரில் உதவி


தானே புயல் மழையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் கடலூர் மாவட்டத்தில் 09/01/2012 இன்று தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் அவர்களும் மமகவின் பொதுச்செயலாளர் அப்துல் சமது  நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்



கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தையும்,

06 ஜனவரி, 2012

அறிவியல்பூர்வமாகவே சிந்திப்போம்,மதரீதியாகப் பார்ப்பதைவிட


முல்லைப் பெரியாறு பிரச்னை, "தானே' புயல் பாதிப்புகள் இரண்டுமே ஒருபுறம் இருக்க, இப்போது சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
சேது சமுத்திரத் திட்டத்தில், ராமர் பாலம் பாதிக்கப்படாமல் தனுஷ்கோடி வழியாக புதிய கால்வாய் அமைத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா என்பதை அறிவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் 2008 ஜுலை மாதம் அமைத்த வல்லுநர் குழுவின் அறிக்கையை கொடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் தற்போது கேட்டுள்ளது.

அமெரிக்காவின் போர்க் கப்பல் மீண்டும் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது.ஈரான் எச்சரிக்கை


ஹோர்முஸ் நீரிணை வழியாக ஓமன் வளைகுடாவுக்குச் சென்றுள்ள அமெரிக்காவின் போர்க் கப்பல் மீண்டும் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது என ஈரான் எச்சரிக்கை
பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடைப்பட்ட குறுகலான கடல்வழிப் பாதை ஹோர்முஸ் நீரிணை என அழைக்கப்படுகிறது. இதன் வழியாக உலகின் 20 சதவீத எண்ணெய்க் கப்பல்கள் சென்று வருகின்றன.
ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் அடுத்தடுத்து பொருளாதாரத் தடைகளை விதித்ததை அடுத்து இந்த நீரிணையை மூடப் போவதாக ஈரான் மிரட்டியது. தொடர்ந்து அப்பகுதியில் கடந்த 10 நாட்களாக ஈரானின் கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டது.

05 ஜனவரி, 2012

மருந்து மாத்திரைகள் வாங்கும் போது… சில எச்சரிக்கை குறிப்புகள்!!


மருந்து வாங்கும் போது… கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.
1. மருத்துவரின் சீட்டு இல்லாமல்வாங்காதீர்கள்!
தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன… கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல்
நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!

04 ஜனவரி, 2012

உ.பி.,யில் காங்கிரசுக்கு ஆதரவு இல்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கருத்து


"ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்திருந்தது. ஆனால், உத்திர பிரதேச சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்படபோவது முஸ்லிம்கள்தான். எனவே ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரசை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம்,' என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

03 ஜனவரி, 2012

ஈராக் போரில் 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் பலி: இங்கிலாந்து நிறுவனம் தகவல்


ஈராக் போரில் 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் பலி: இங்கிலாந்து நிறுவனம் தகவல்
 

ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியது. இதை தொடர்ந்து கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நுழைந்து போரிட்டது. பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

நெல்லை பாஸ்போர்ட் பிரிவு அலுவலகம் மூடல் ம.ம.க., கண்டனம்

திருநெல்வேலி: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிய பாஸ்போர்ட் பிரிவு அலுவலகம் மூடப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்தது. 

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரசூல்மைதீன் அறிக்கை:தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பாஸ்போர்ட் குறைதீர்க்கும் பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில் புதிய பாஸ்போர்ட் பெறுதல், புதுப்பித்தல், பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.

நியூயார்க்கில் , இஸ்லாமிய மையங்கள் மீது தாக்குதல்


   நியூயார்க்கில் , இஸ்லாமிய மையம் உட்பட 4 இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் அருகில் உள்ளது குயின்ஸ் நகரம். இங்கு நேற்று முன்தினம் இரவு 4 இடங்களில் அடுத்தடுத்து மர்ம ஆசாமிகள் நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.

மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கைஎடுக்க மாவட்ட ஆட்சியாளாருடன் பேரா. ஜவாஹிருல்லா சந்திப்பு


மக்கள் குறை தீர்க்கும் முகாம் - சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது








மக்கள் குறை தீர்க்கும் முகாம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது
இராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் குறைகளை நீக்க, மக்கள் குறை தீர்க்கும் முகாம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. அம்முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்து உரிய நடவடிக்கைக்காக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராய் அவர்களிடம் நேரில் வழங்கி உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வலியுறுத்தப்பட்டது.

நன்றி  .மக்கள் மனசு 

02 ஜனவரி, 2012

மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக புலம்பித் திரியும் பரிதாப நிலை கடலூரில்



கடலூர்: தானே புயலால் சீரழிந்து போயுள்ள கடலூர் மாவட்டத்தில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ. 60க்கு விற்கப்படுவதால் வாங்க முடியாமல் ஏழைகள் பரிதவித்துப் போயுள்ளனர். அதை விடக் கொடுமையாக மெழுகுவர்த்தி கூட கிடைக்காத நிலை காணப்படுகிறது.
புயலால் சிதிலமாகியுள்ள கடலூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். அரசு சார்பில் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கூறினாலும் உண்மை நிலை நேர் மாறாக உள்ளது.

திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


முல்லை பெரியாறு அணை விவகாரம் - திருச்சியில் மமக ஆர்ப்பாட்டம்.
   
முல்லை பெரியாறு அணை விவகாரம் - திருச்சியில் மமக ஆர்ப்பாட்டம்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் பாரபட்சத்தையும், கேரள அரசின் தான்தோன்றித்தனத்தையும் கண்டித்து திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 1.1.2012 அன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துணை பொதுசெயலாளர் M. தமிமுன் அன்சாரி கண்டன உரையாற்றினார். மாவட்ட தலைவர் ஹக்கீம், மமக மாவட்ட செயலாளர் பைஸ் அகமது, தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம்சா, மாவட்ட பொருளாளர் இந்தியாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நன்றி.மக்கள் மனசு 

. சவூதி அரேபியாவில் சிக்கிய தமிழக மீனவர்கள் தமுமுக துணையுடன் மீட்பு


சவூதி அரேபியாவில் சிக்கிய தமிழக மீனவர்கள் தமுமுக துணையுடன் மீட்பு
.இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 16 பேர் கொண்ட மினவர்கள் சவூதி அரேபியா ஜிஸான் என்ற பகுதியில் மீன்பிடி பணிக்கு வந்துள்ளனர் அவர்கள் தனது ஸ்பான்சரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பளம் மற்றும் உணவு தங்குமிடம் போன்ற வசதிகளின்றி மிகவும் கஸ்டப்படுவதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரி  கோரிக்கை வைத்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் உத்தரவின் பேரில் ரியாத் மத்திய மண்டல தமுமுக உடனடியாக களத்தில் இறங்கியது தூதரகத்தின் துணையுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டு இப்போது அவர்கள் பணிக்குச் செல்கின்றனர்.ரியாத் மத்திய மண்டல பொதுச் செயலாளர் ஹூஸைன்கனியிடம் தொலைபேசியில் கண்ணீர் மல்க நன்றி கூறினர்

நன்றி.மக்கள் மனசு