#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

29 நவம்பர், 2012

இங்கிலாந்தில் எழுச்சி பெறும் இஸ்லாம்................!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..............!! 

இங்கிலாந்தில் எழுச்சி பெறும் இஸ்லாம்................!!

2030-ல் இங்கிலாந்து நாடு ஒரு கிறித்துவ நாடாக இருக்காது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு குறித்து பிரபல டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது,

மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்தவர்களை விட அப்போது அதிக எண்ணிக்கையினராக ஆகிவிடுவார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது,

ஒவ்வொரு ஆண்டிலும் 5 லட்சம் நம்பிக்கையாளர்களை கிறித்துவ மதம் இழந்து வருகிறது, ஆண்டுக்கு 7,50,000 பேர் என்ற அளவுக்கு இறை நம்பிக்கை அற்றவர்களின் எண்ணிக்கைப் பெருகி வருகிறது என்று டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவிக்கிறது,

கிறித்தவ மதத்தவரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மற்ற மதத்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று (காமன்ஸ்) நூலக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் 39 சதவிகிதம் உயர்ந்து 30 லட்சத்தை எட்டியுள்ளது,

சீக்கியர்களும், யூதர்களும் சிறிதளவு குறைந்துள்ளனர் என்றும் டெய்லி மெயில் தெரிவிக்கிறது,

கடந்த ஆறு ஆண்டுகளில் 7.6 சதவிகிதமாக கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து 2010ல் 4.11 கோடி கிறித்தவர்கள் மட்டுமே இருப்பதை நான் கண்டேன், அதே கால கட்டத்தில் இறை நம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை 49 சதவிகிதம் உயர்ந்து 1.34கோடி மக்கள் இருக்கின்றனர் என்று பிரிட்டன் டோரி கட்சியைச் சேர்ந்த முன்னாள் நீதித்துறை அமைச்சர் கேரி ஸ்டிரீட்டர் தெரிவித்த செய்தியையும் டெய்லி மெயில் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது,

இவ்வாறாக ஒரு பக்கம் கிறித்தவம் தேய்ந்து கொண்டு போக போக மறுபக்கம் இங்கிலாந்தில் இஸ்லாம் எழுச்சி பெற்று சென்று கொண்டே உள்ளதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன,

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி வரும் கிறித்தவர்கள்:

பிரிட்டனில் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்,

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent”

என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. (பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)

கிறித்துவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதைப் பார்த்து கிறித்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லிம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால் தற்போது பிரான்ஸைக் காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.

2001-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000வரை இருக்கலாம் என கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லிம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்று கணக்கெடுத்துள்ளனர். அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லிம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாகவும், தனி நபர் மூலமாகவும் இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கணக்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். (அல்ஹம்துலில்லாஹ்).

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்தப் புது ஆய்வின்படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள்தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர் கூறுகையில் நாங்கள் இந்தத் தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், இது முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் எனத்தெரிவித்தார் .

ஏன் முஸ்லிம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தைப் பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வருகின்றது. இந்த பொய்ப் பிரச்சாத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்...............!!











எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..............!!


2030-ல் இங்கிலாந்து நாடு ஒரு கிறித்துவ நாடாக இருக்காது
 என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு குறித்து பிரபல டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது,

மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்தவர்களை விட அப்போது அதிக எண்ணிக்கையினராக ஆகிவிடுவார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது,

28 நவம்பர், 2012

இஸ்லாமிய விரோத காட்சிகளை நீக்க உதவி செய்த முதல்வருக்கு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நன்றி!



சமீபத்தில் வெளியான தூப்பாக்கி எனும் திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவரவாதிகளாக சித்தரித்தது குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியது. இக்காட்சிகளை நீக்க கோரி இப்படக்குழுவினரை இதஜ, தமுமுக, தேசியலீக், SDPI உள்ளிட்ட 24 அமைப்புகள் கூட்டாக சேர்ந்து சந்தித்தது. அதன் அடிப்படையில் இக்குழுவினர் இஸ்லாமிய சமூகத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டனர். சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கி விடுவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.

27 நவம்பர், 2012

தாக்கரே குறித்து பேஸ்புக்கில் கருத்து - பெண்களைக் கைது செய்த எஸ்.பி. சஸ்பெண்ட்


மும்பை: மறைந்த பால் தாக்கரே குறித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காகவும், அதற்கு லைக் கொடுத்ததற்காவும் இரு இளம் பெண்களைக் கைது செய்த மகாராஷ்டிர காவல்துறையினர் மீது மும்பை உயர்நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 10 சிவசேனா கட்சியினரை ஜஸ்ட் 7500 ஜாமீனில் வெளியே விட உத்தரவிட்ட மாவட்ட நீதிபதியையும் தூக்கியடிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

26 நவம்பர், 2012

நானுற்றி இருபது (420) ஆண்டு பாரம்பரியத்தை சிதைக்கும் மதவெறி அமைப்புகள்....!!


நானுற்றி இருபது (420) ஆண்டு பாரம்பரியத்தை சிதைக்கும் மதவெறி அமைப்புகள்....!!

60 ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்படம் எடுக்கப்பட்ட சார்மினார். சார்மினார் அருகில் கட்டப்பட்டுள்ள பிரச்சனைக்குரிய சிறிய கோவில். நன்றி : ‘தி இந்து’ (நவ. 21)

-420 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சார்மினாரின் பாரம்பரியத்தை சிதைக்கும் விதமாக அதன் அருகிலேயே இந்துக்கோவில் கட்டப்பட்டிருப்பது குறித்தும், அதனால் ஏற்படும் சர்ச்சை குறித்தும் தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 4 கூம்பு கோபுரங்களை கொண்ட சார்மினார் கட்டுமானத்திற்கு அருகே, மிகச்சிறிய அளவிலான பாக்யலட்சுமி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில், பழமை வாய்ந்தது என்று இந்து அமைப்புகள் கூறினாலும், 60 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட சார்மினாரின் புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, அதில், இந்த பாக்யலட்சுமி கோவில் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்குள் திடீரென முளைத்த இக்கோவிலைச் சுற்றி காவிக் கொடிகள் சார்மினாரின் பாரம்பரியத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. கோவில் நிகழ்ச்சியின் போது, அங்கு போடப்படும் தார்பாலின்பாய் சார்மினார் கட்டிடத்தில் சேர்த்து கட்டப்படுகிறது. இதனால் சமீபத்தில் இது குறித்து சர்ச்சை எழுந்து, பதற்றம் ஏற்பட்டது.இந்தநிலையில், கடந்த 10 நாட்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டன. அந்த வழியே செல்லும் மக்களும் தாக்கப்பட்டதுடன் கடைகளும் நொறுக்கப்பட்டன.

சார்மினார் விவகாரத்தில், ஆந்திராவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என மஜிலிஸ்-எ-இதாதுல்-முஸ்லீமின் (எம் ஐஎம்) கட்சி மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது. சார்மினார் பாரம்பரியம் பாதிக்கப்படக்கூடாது என போராட்டத்தை முன்னின்று நடத்தும் அமைப்பாக எம்ஐஎம் உள்ளது. ஹைதராபாத்தின் பாரம்பரிய கட்டிடம் சிதைக்கப் படுவது குறித்து, எதிர்த்து பேச யாரும் தயாராகாத நிலையில் இந்து அமைப்புகள், அந்த இடத்தை ஆக்கிரமிப்பதில் தீவிரம் காட்டுகின்றன. சார்மினாரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்தியத் தொல்லியல் துறைக்கு உள்ளது. 1951ம் ஆண்டு முதல் இந்த நானூறு ஆண்டு கட்டிடம், தேசிய நினைவுச் சின்னமாக ஆனது. ஹைதராபாத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க இந்திய தொல்லியல் துறை தவறியுள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது.60 ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்படம் எடுக்கப் பட்ட சார்மினார் கோபுர வடிவத்தை பார்க்கும், அந்த கால கட்டத்தில் பயன் படுத்தப்பட்ட கார்கள் சாலையில் ஓடுவதை காண முடிகிறது. அந்த புகைப்பட ஆதாரம் மூலம் சார்மினார் அருகே பாக்ய லட்சுமி கோவில் இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. பழமையான வழிப் பாட்டுத் தலம் என இந்து அமைப்புகள் கூறும் வாதம் நம்பகத்தன்மையை இழந்து விட்டது. மிகச்சிறிய அளவில் வைக்கப்பட்ட பாக்ய லட்சுமி கோவில் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து, தனது கட்டிடப் பகுதியை விரிவுப் படுத்திக் கொண்டிருக்கிறது.இந்தக் கோவிலால், சார் மினாருக்கு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தல் நீடிக்கவே செய்கிறது.

நன்றி தீக்கதிர் நாளிதழ்.












60 ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்படம் எடுக்கப்பட்ட சார்மினார். சார்மினார் அருகில் கட்டப்பட்டுள்ள பிரச்சனைக்குரிய சிறிய கோவில். நன்றி : ‘தி இந்து’ (நவ. 21)

 420 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சார்மினாரின் பாரம்பரியத்தை சிதைக்கும் விதமாக அதன் அருகிலேயே இந்துக்கோவில் கட்டப்பட்டிருப்பது குறித்தும், அதனால் ஏற்படும் சர்ச்சை குறித்தும் தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 4 கூம்பு கோபுரங்களை கொண்ட சார்மினார் கட்டுமானத்திற்கு அருகே, மிகச்சிறிய அளவிலான பாக்யலட்சுமி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில், பழமை வாய்ந்தது என்று இந்து அமைப்புகள் கூறினாலும், 60 ஆண்டுகளுக்கு

21 நவம்பர், 2012

கமல் உடல்நிலை... மீடியா கிளப்பிய பரபரப்பு!!


Media Reports On Kamal Health விஸ்வரூபம் படம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளால் கமலுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் மீடியாவில் வெளியான செய்திகள் அவரது ரசிகர்களுக்கு பெரும் கோபத்தைத் தந்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்பங்களோடு "விஸ்வரூபம்' படத்தை இயக்கி தயாரித்து, நடித்து பிரமாண்ட படைப்பாக உருவாக்கியுள்ளார் கமல்.

20 நவம்பர், 2012

குறிவைக்கப்படும் "ஜம்யியத்துல் உலமா" : குல்சார் ஆசமி குற்றச்சாட்டு!


  மும்பைபோலீஸ்முஸ்லிம் இயக்கங்களை குறிவைத்து கண்காணிப்பதாகவும், குறிப்பாக "ஜம்யியத்துல் உலமா ஹிந்த்" அமைப்பு குறித்து, துருவித்துருவி விசாரித்து வருவதாகவும் வேதனைதெரிவித்தார், மாநில சட்டத்துறை செயலாளர் குல்சார் ஆசமி.
நேற்று (19/11) ஜம்யியத்தின் "இமாம் பாடா" அலுவலகத்துக்கு வந்த, முஸ்லிம் பிரிவை கவனிக்கும் ("M"பிரான்ச்) போலீசார் இருவர், தன்னிடம் ஜம்யியத் தலைவர்கள் குறித்து சரமாரி கேள்விகள் கேட்டதாக தெரிவித்தார்.

மும்பை : பால் தாக்கரே பாதையில் பயணிக்கும் "பாசிச" போலீஸ்!


  மும்பை ரவுடி பால் தாக்கரே மரணத்தையொட்டி, 2 நாட்களாக நடத்தப்பட்ட கடையடுப்புக்கள், பால் தாக்கரே மீதான மரியாதையால் அல்ல, சிவசேனை ரவுடிகளின் பயத்தினால் தான் என்று, "ஃபேஸ் புக்"கில் கருத்து பகிர்ந்துக்கொண்டதால் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பையை சேர்ந்த 21வயது இளம்பெண் (சிங்கம்) "ஷாஹீன்" என்பவர், தெரிவித்திருந்த கருத்துக்கு "ரேணு" என்ற இன்னொரு இளம்பெண் "Like" கொடுத்த பாவத்துக்காக அவரும் கைது செய்யப்பட்டார்.

19 நவம்பர், 2012

பந்த்தை எதிர்த்து கருத்து சொன்னா அரெஸ்டா?- பாசிஸ்ட் சர்வாதிகார ஆட்சி நடக்குற நாடா?: கொந்தளித்த கட்ஜூ



மும்பை: சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் மறைவையொட்டி மும்பையில் முழு அடைப்பு நடத்தப்பட்டதை விமர்சித்த பெண்ணை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்ததற்கு பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டே கட்ஜூ கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அந்த பெண்ணை விடுதலை செய்வதுடன் அவரை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

14 நவம்பர், 2012

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த 100 அடி நீளம் கொண்ட கார்ர்ர்...!!


100 அடி நீளம் கொண்ட சொகுசு கார் கின்னஸில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது. இந்த சொகுசு காரை கலிபோர்னியாவை சேர்ந்த ஜே ஓபெர்க் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
World Longest Limousine Car
பார்ப்பதற்கு ரயில் போல இருக்கும் இந்த நீளமான

13 நவம்பர், 2012

ஓர் வபாத் செய்தி


கொள்ளுமேடு ....நமதூர் மேலத்தெருவிலிருக்கும் அஷ்ரப் அலி ,மற்றும் என் நண்பர் ஹலிபுல்லாஹ் இவர்களின் தாயாரும் எங்கள் ஊரின்பெண்கள்    மதரஸாவின் நீண்ட காலம்  தலைமை ஆசிரியர்மான ஹஸீனா பூ அவர்கள் இன்று அதிகாலை தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை     தந்தருளவேண்டும் என.  கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

12 நவம்பர், 2012

துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு கண்டனம்


முஸ்லிம் பயங்கரவாதிகள் என்ற வார்த்தையை செய்திகளில் பயன்படுத்தியமைக்காக துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கண்டன அறிக்கை.

அன்புள்ள இயக்குநர் அவர்களுக்கு,

பொருள் : செய்திகளில் கவனம் செலுத்த வேண்டி

தங்களின் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக!
09.11.2012, வெள்ளிக் கிழமை அன்று மதியம் 12.00 மணிக்கு தங்களது ரேடியோ ஹலோ 89.5 அலைவரிசையில் ஒலிபரப்பான தலைப்புச் செய்திகளில் முஸ்லிம் பயங்கரவாதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா ஒடுக்கவேண்டும் என இராமகோபாலன் தெரிவித்தார் என ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. தீவிரவாதமும், பயங்கரவாதமும் எந்த ஒரு மதத்திற்கும், மதத்தினருக்கும் பொதுவானது அல்ல என்று வலியுறுத்தப்பட்டதால் முஸ்லிம் பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்ற வார்த்தைகளை சன் டிவி போன்ற ஊடகங்களே தவிர்த்தவிட்ட சூழ்நிலையில் முஸ்லிம்களின் குணாதிசியங்களையும், பண்புகளையும் அதிகமாக புரிந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புள்ள நாட்டில் அமர்ந்துக் கொண்டு செய்தியின் தரம் அறியாமல் வாசிப்பது தவறு என ரேடியோ ஹலோ உணரவேண்டும்.

09 நவம்பர், 2012

ராமன் மோசமான கணவன், லஷ்மணன் மோசமான தம்பி : ராம் ஜெத்மலானி


ராமன் மோசமான கணவன், லஷ்மணன் மோசமான தம்பி : ராம் ஜெத்மலானி புது தில்லி : ராமர் கோவில் விவகாரத்தை வைத்தே ஆட்சியை பிடித்த பி.ஜே.பியினருக்கு சங்கடத்தை உண்டாக்கும் வகையில் பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் ராம் ஜெத்மலானி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் – பெண் உறவு குறித்த புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பேசிய ராம் ஜெத்மலானி “ ராமனை எனக்கு பிடிக்காது. அவன் மோசமான கணவன். யாரோ சில மீனவர்கள் சொன்னதற்காக அபலை பெண்ணான சீதையை காட்டுக்கு அனுப்பி விட்டான்” என்று சொன்னார்.

கமல்ஹாசனுக்கு த.மு.மு.க கோரிக்கை!


கமல்ஹாசனுக்கு த.மு.மு.க கோரிக்கை!  நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் 'விஸ்வரூபம்' திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தை தங்கள் அமைப்பிற்கு காண்பித்த பிறகே வெளியிட வேண்டும் என த.மு.மு.க கட்சியின் தலைவர் ஜே.எஸ் ரிபாயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

07 நவம்பர், 2012

உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைக் கொண்ட துபாயின் புர்ஜ் கலீபாவில் 2 தளங்களை அப்படியே ஒட்டுமொத்தமாக வாங்கிப் போட்டு அத்தனை இந்தியர்களையும் வாய் பிளக்க வைத்துள்ளார் இந்தியாவின் பி.ஆர்.ஷெட்டி

புர்ஜ் கலீபா என்றால் என்ன?

01 நவம்பர், 2012

மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்


மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற! என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்கள் தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்

தமிழக-மின்வெட்டு-ஜெயலலிதா-கார்டூன்
கடுமையான மின்வெட்டுக்குக் காரணம் என்ன? தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின்வெட்டுக்கே ஆற்காடு வீராசாமியின் பெயரைச் சூட்டி,  ஒரு அமைச்சரின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல்தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பதுபோல பிரச்சினையைச் சுருக்கி சித்தரித்தன ஊடகங்கள். மின்வெட்டு காரணமாக மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்ட ஜெயலலிதா, “ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின் பற்றாக்குறையைப் போக்குவேன்” என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்தார்.

''குழந்தை வளர்ப்பு -ஒரு இஸ்லாமிய பார்வை''

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்....

நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அருட்கொடைகளையும் அனுபவிக்கிறோம்... அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்ததாக இஸ்லாம் கூறுவதுநல் ஒழுக்கமுள்ள மனைவியை.....
பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ  உறவுகளையும், நட்புகளையும் கடந்து வந்தாலும்  மிக நுண்ணியமானதும், உணர்வுப்பூர்வமான  உறவு வாழ்க்கை துணையே. மற்ற உறவுகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.
ஆனால்,வாழ்க்கை துணை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வாழும் உறவு ஆகும். அப்படிப்பட்ட உறவை சரியான முறையில்  தேர்ந்தெடுக்காவிட்டால் சொல்லொண்ணா நஷ்டம்தான்.