#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

30 ஆகஸ்ட், 2013

"ஒவ்வொரு துளி மதுவும் விஷமே..



"மது மதியை மட்டுமின்றி மனிதனையும், மனிதநேயத்தையும் ,இழைக்க செய்யும் " பணத்தையும் மட்டுமின்றி பண்பையும் ,பணிவையும் ,இழைக்க செய்யும் " உலகத்தையும் மட்டுமின்றி உண்மையும் ,உடமையும் இழைக்க செய்யும் " உடலையும் மட்டுமின்றி உறவுகளையும் , உயிரையும் இழைக்க செய்யும் " விழித்து கொள் தோழா விலையில்லா உயிர்களை காப்போம் " வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்வதற்கு மட்டுமே மண்ணில் வீழ்வதற்க்கில்லை

"ஒவ்வொரு துளி மதுவும் விஷமே.. உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்துக்கும் ..உங்கள் எதிரே வருபவர்களுக்கும்தான்"...

21 ஆகஸ்ட், 2013

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் தானமும் இஸ்லாமியர்களின் மதஉணர்வும்...!!!



பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தை ஒட்டி அவர் உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பது என்ற அவரின் குடும்பத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் நடந்து கொண்ட விதம், மிகுந்த மரியாதைக்குரியது.

18 ஆகஸ்ட், 2013

டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் மறைந்தார்.





இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இந்து வைதீக குடும்பத்தில் பிறந்து, நாத்திகக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பௌத்தம் தழுவி பின்னர் தூய இஸ்லாத்தினை வாழ்க்கை நெறியாக ஏற்று முஸ்லிமான நாளிலிருந்து உடல் நலம் நன்றாக இருக்கும் வரை அயராமல், தளராமல் இறைமார்க்கம் இஸ்லாத்தின் பால் அழைத்தவர்.

இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயாக !
இவரது பிழைகளை பொறுத்து சுகமளிப்பாயாக !
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக !
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக !
பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக !

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக !
வல்ல ரஹ்மான் அவரது மண்ணறையை ஒளிமயமாக்கி வைப்பானாக.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை     தந்தருளவேண்டும் என.  கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

01 ஆகஸ்ட், 2013

இசுலாமில் வட்டி ஏன் தடுக்கப்பட்டது?



பொருளாதாரக் காரணங்கள்

1. வட்டித் தொழிலில் கடன் வாங்கியவன் இலாபமடைந்தாலும் நட்டமடைந்தாலும், கடன் கொடுத்தவன் ஒரு குறிப்பிட்ட இலாபத்திற்கு உரியவனாகிறான். ஆனால், வியாபாரம் அல்லது கைத்தொழில் அல்லது வேளாண்மை போன்ற விவகாரங்களில், வாங்குவோனுக்கும் விற்பவனுக்குமிடையில் சமமான இலாபம் இருக்கிறது.

அல்லாவின் திருப்பெயர்கள்

அல்லாவின் திருப்பெயர்கள்


அல்லாஹ் ஒருவனே அவனுக்கு இணை இல்லை. துணை இல்லை. பெற்றோர் இல்லை. பிள்ளைகள் இல்லை. தனியானவன். தன்னிலே நிலையானவன். அனைத்துப் படைப்புகளும் அவன் ஆதரவில் நிலை பெற்றிருக்கின்றன. அவன் சர்வ வல்லமை பெற்றவன். உள்ளும் புறமும் உள்ள அனைத்தையும் அறிபவன். உருவம் இல்லாதவன். ஐயறிவுகளால் அறிய முடியாதவன். உள்ளத்தில் அமையாதவன். மிகுந்த கருணையுள்ளவன். தாயினும் மிக்க அன்புள்ளவன். அவனை நம்புவோரையும், நம்பாதோரையும் உணவு கொடுத்துப் பாதுகாப்பவன். அவன் நீதிமான். ஆகையால், இவ்வுலகில் நற்செயல் செய்வோருக்கு அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு மறு உலகில் நல்ல சன்மானம் அளிக்கின்றான். தீமை செய்தோரைத் தண்டிக்கின்றான். அவன் மிகுந்த இரக்கமுள்ளவன். ஆகையால், பாவம் செய்தோர் அதற்காக வருத்தமடைந்து அவனிடம் மன்னிப்பு கேட்டால் அவன் பாவங்களை மன்னிப்பான்.