கீழக்கரையில் குறை கேட்கும் நாளை இராமாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஏற்பாடு செய்து இருந்தார்.


அந்நிகழ்ச்சி கீழக்கரை நகராட்சியில் நடைபெற்றது. இதில் ஊரின் பல அமைப்புகள், ஜமாஅத்துக்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் குறைகளை எம்.எல்.ஏவிடம் கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட ஜவாஹிருல்லாஹ் அவர்கள், உரிய அதிகாரிகளிடம் அதற்கான தீர்வை பெற்று வழங்கினார்.  கீழக்கரையின் சுகாதாரம், மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை போக்குவரத்து சம்பந்தமான பிரச்னைகளை கோரிக்கை மனுவாக கொடுத்தனர். கூட்டத்திலும் கேட்டனர். அதற்கு முறையான பதிலை உரிய அதிகாரிகளிடம் கேட்டு பெற்று தந்தார்.