#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

30 செப்டம்பர், 2011

மனிதநேய மக்கள் கட்சி: உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி ஏன்?

 கடந்த சட்டமன்ற தேர்தலில் மிகவும் பலகீனமான நிலையில் அ.இ.அதிமுக&வின் அரசியல் களம் இருந்தது. அப்போது செல்வி.ஜெயலலிதா அவர்கள் அதிமுக சார்பில் மனிதநேய மக்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். ஒன்றல்ல. இரண்டுமுறை!

திருமங்கலம், பெண்ணாசரம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக டெபாஸிட் இழந்திருந்த நிலையில், அதிமுக இனி தேறாது என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று மு.க.அழகிரி கர்ஜித்தார். அதிமுகவின் பல இரண்டாம் கட்டத் தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிமுகவிலிருந்து விலக திமுகவல் ஐக்கியமாகிக் கொண்டிருந்தனர்.

29 செப்டம்பர், 2011

கொள்ளுமேடு மமக ஊராட்சிமன்ற வேட்பாளர் மனுதாக்கல் செய்தார்.


                                    அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)


கொள்ளுமேடு மமக ஊராட்சிமன்ற வேட்பாளர் இன்று(28.09.2011) காட்டுமன்னார்குடி பாஞ்சாயத் யூனியனில் மனுதாக்கல் செய்தார்.அவருடன் மமக மாவட்ட  தலைவர் மெஹ்ராஜ்த்தின்,தமுமுக மாவட்ட செயலார் அமானுல்லாஹ்,கொள்ளுமேடு ஜமாத்தார்கள் ,கிளைகழக நிர்வாகிகள்,பொதுமக்கள் பெரும்திரளாக சென்று மனுதாக்கல் செய்தார்.


" இன்ஷா அல்லாஹ் வெற்றிபெற தூவா செய்வோமாக"





27 செப்டம்பர், 2011

கொள்ளுமேடு மமக வேட்பாளர் ஷபிக்குர்ரஹ்மான் மனுதாக்கல் இன்று செய்கிறார்

                                       அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)


                                                                                                             வேட்பாளர்   ஷபிக்குர்ரஹ்மான்

 

இன்று (28.09.2011)மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்  கொள்ளுமேடு  ஊராட்சிமன்ற தலைவர் பதிவிற்கு   காட்டுமன்னார்குடி பஞ்சாயத்யூனியன்க்கு மனுதாக்கல்செய்ய செல்ல இருக்கிறார். இன்ஷா அல்லாஹ் வெற்றிபெற வல்ல இறைவனிடம் தூவா செய்யுமாறு   கொள்ளுமேடு மமக சார்பாக  அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

25 செப்டம்பர், 2011

அப்பாவி இளைஞர் தீவிரவாதியா​க கைது – போராட்டத்துக்குப் பின் விடுதலை


புதுடெல்லி:ஆஜம்கர் நகரைச் சேர்ந்த மஃபூஸ் அஹமது என்ற வாலிபர் ஒரு கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் காணாமல் போனார். தீவிரவாத எதிர்ப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்பு குற்றமற்றவர் என்று கடந்த சனிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புரட்சியில் அன்னியத் தலையீடு கூடாது’: ஐ.நா.வில் மன்மோகன்சிங் வலியுறுத்த​ல்

Manmohan_-_UNGA_790920eஐ.நா.சபை:சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை

நேபாள விமான விபத்து: பலியான 8 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள்!


நேபாள விமான விபத்தில் பலியானோரில் 8 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இருவர் முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள் தகவல்கள் கூறுகின்றன.

நேபாளத்தில் இன்று காலையில் இமய மலையின் மீது விமானம் மோதியதில் 19 பேர் பலியானார்கள். பலியானவர்களில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. விபத்தில் பலியான மீனாட்சி சுந்தரம் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் ஆவார். மற்றொருவர் முன்னாள் அமைச்சர் செல்வராஜின் உறவினர் ஆவார்.

மீனாட்சி சுந்தரத்துடன் சென்ற மணிமாறன், மருதாச்சலம், புகழேந்தி, கனகசபேசன், தியாகராஜன், காட்டூர் மகாலிங்கம்,ஆகியோரும் சென்று இருந்தனர். அவர்களும் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.

இமயமலையை சுற்றிப் பார்க்க திருச்சியில் இருந்து இவர்கள் நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள். அனைவரும் திருச்சி கட்டுமான சங்க உறுப்பினர்கள் ஆவார்கள்.

நெல்லை மாநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதர்பீவி!

 
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக காதர் பீவி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார். இவரது கணவர் பெயர் சேக் செய்யது அலி. இவருக்கு ராஹீனா என்ற மகளும், முகமது கனி என்ற மகனும் உள்ளனர். காதர் பீவி கட்சியின் மகளிர் அணி செயலாளராக உள்ளார்.
மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாட்டப்பத்து முகமது அலியின் மகளான இவர், துபாயில் உள்ள பன்னாட்டு சாப்ட்வேர் நிறுவன ஆராய்ச்சி பிரிவில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் 10 வார்டுகளுக்கு போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

கேப்டன் மன்சூர் அலிகான் மரணம்!


சுவாசக்கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி, டெல்லி மருத்துவமனை ஒன்றில் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி, சுவாசக்கோளாறு காரணமாக டெல்லியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிட்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவருக்கு 70 வயதாகிறது.
1961 முதல், 1975 ம் ஆண்டு வரை, 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பட்டோடி, அவற்றில் 40 போட்டிகளுக்கு கேப்டனாக பணிபுரிந்திருக்கிறார். துடுப்பாட்டத்தில் மாத்திரமல்லாது, களத்தடுப்பிலும் 'புலி' என வர்ணிக்கப்படுபவர் பட்டோடி. வெளிநாடொன்றில் இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றியை தேடி தந்தவர் அவரே. தனது 21 வயதில், 1961ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக முதன் முதலில் களமிறங்கினார்.

60 களில் புகழ்பெற்ற இந்திய சினிமா நடிகை ஷர்மிலா தாகூரை 1969ம் ஆண்டு மணம்முடித்தார். அந்நாளில் மிக பிரபலம் வாய்ந்த ஜோடியாக இவர்கள் திகழ்ந்தனர். 1993-96 வரையான காலப்பகுதியில் ஐசிசியின் போட்டி நடுவர் குழுவிலும் பட்டோடி கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

18 செப்டம்பர், 2011

நமதூர் இருளில் மூல்கி கிடந்த தெருக்கள் இப்பொழுது ஒளிவெள்ளத்தில்

                                      அஸ்ஸலாமு அழைக்கும்(வராஹ்)





  நமதூரில்  கடந்த இரண்டு மாதங்களாக தெரு  விளக்குகள் எரியாததால் தெருக்கள்  இருளில் மூல்கி கிடந்தது தமுமுகவின் சேவையின் அடிப்படையில் அனைத்து தெரு கம்பங்களுக்கும் விளக்குகள் புதியதாகவும்,பழுது செறிப்பாக்கபட்டது. இந்த சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.மேலும் சில கோரிக்கைகள்  வைத்துயிருக்கின்றனர்.இன்ஷா அல்லாஹ் அனைத்து கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்யப்படும்.





                                ''எல்லாப்புகழும் இறைவனுக்கே''  

 

17 செப்டம்பர், 2011

மோடிக்கு எதிரான வாஜ்பாயின் கடிதத்தால் பரபரப்பு!

கொள்ளுமேடு தமுமுக&மமகவின் பொதுக்குழு


                                    அஸ்ஸலாமு அழைக்கும்(வராஹ்) 

கொள்ளுமேடு தமுமுக&மமக பொதுக்குழு கூட்டம்(17/09/2011) தமுமுகவின் மாவட்ட செயலாளர் சகோ.அமானுல்லாஹ் முன்னிலையிலும் ,கொள்ளுமேடு தமுமுககிளை  மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.ஜாக்கிர் ஹுசைன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

15 செப்டம்பர், 2011

ஜமா அத்துல் உலமா சபைதேர்தல் பொதுக்குழு கூட்டம்

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் கடலூர் மாவட்ட ஜமா அத்துல் உலமா சபையின் தேர்தல் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் நூருல் அமீன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவர் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மாவட்ட கவுரவத் தலைவராக நூருல் அமீன், மாவட்டத் தலைவராக சபியுல்லா மன்பயீ, பொதுச் செயலராக அப்துல் ரஜாக், பொருளாளராக சைபுதீன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.மதுரையில் நடந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட அப்துல் ரஹ்மான், அப்துல் காதர், முஹம்மது தாஹா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


நன்றி.தினமலர்

13 செப்டம்பர், 2011

என்னுடைய குடும்பம் கொடூரமாக கொல்லப்பட்டது – மோடி தண்டிக்கப்பட வேண்டும்

 

 imthiazபுதுடெல்லி:குஜராத் கலவரத்தில் தங்களின் குடும்பத்தினர் தன்னுடைய கண்ணெதிரே கொடூரமாக கொலைச் செய்யப்பட்டதை நேரில் கண்டவர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் நடக்கும் கலவரம் தொடர்பான வழக்கில் எதிர்பார்ப்பு அதிகம்.
ஏனெனில் குல்பர்க் கூட்டுப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஒன்பது வருடங்களாக நீதிவேண்டி காத்து கிடக்கின்றனர். இதில் இம்தியாஸ் பதான் என்பவரும் ஒருவர். இவர் தன்னுடை எட்டு குடும்ப உறப்பினர்களை தன் கண்முன்னே பலி கொடுத்தவர்.

அதிரையில் 95வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அதிரை கிளை சார்பில் 11.09.2011 அன்று மாபெரும் சமய நல்லிணக்க பெருவிழா மற்றும் அவசர கால ஊர்தி(ஆம்புலன்ஸ்) அர்பணிப்பு விழா நடைபெற்றது.

நகர த.மு.மு.க தலைவர் உமர் தம்பி தலைமைஏற்க  சகோதரர் யி.கலந்தர் (முன்னாள் மாவட்ட செயலாளர் ம.ம.க) தொகுத்து வழங்கினார்.

அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து : 10 பேர் பலி

சென்னை: அரக்கோணம் அருகே, சிக்னலுக்காக நின்றுக் கொண்டிருந்த ரயில் மீது, மற்றொரு ரயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் பத்து பேர் பலியானார்கள்.

அரக்கோணத்திலிருந்து, நேற்று இரவு, காட்பாடி சென்ற பயணிகள் ரயில், சித்தேரி அருகே, சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது, சென்னை,

மாலேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்கள் அப்பாவிகள்! என்.ஐ.ஏ

மும்பை: கடந்த 2006 ஆம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டு சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 9 முஸ்லிம்கள் குண்டு வெடிப்பில் தொடர்பில்லாத அப்பாவிகள் என என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

11 செப்டம்பர், 2011

அதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது "Islam Oppresses Women" என்பது. இஸ்லாத்திற்கு எதிரான வாதங்கள் எப்படி ஒன்றுமில்லாமல் ஆகின்றனவோ அது போல தான் இந்த வாதமும் காணாமல் போகின்றது. 

அமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா? 
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் சென்ற வருடம் அமெரிக்க முஸ்லிம்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று. 

இதற்கான பதில் -
ஆம் - 80%

இரோம் ஷர்மிளாவின் போரட்டத்திற்கு ஆதரவாக நாடு தழுவிய கையெழுத்து போராட்டம் மற்றும் விழுப்புணர்வு பிரச்சாரம்

sharmila_250இரோம் ஷர்மிளா, இந்திய அரசின் அடக்குமுறைச் சட்டமான “ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1958′ நீக்கப்பட வேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பட்டினிப் போராட்டம் நடத்தும் மணிப்பூர் பெண்.
அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு செவி சாய்த்த மத்திய அரசு, சர்மிளாவின் 11 ஆண்டு போராட்டத்தை கண்டுக்கொள்ளவில்லை, இதைதான் பல மனித உரிமை

உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் - சவுதி அரேபியாவில்

உலகிலேயே  மிக உயர்ந்த கட்டிடம்  சவுதி அரேபியாவின்  ஜித்தாவில், ரெட் சீ சிட்டியில் இக்கட்டிடம் கட்டப்படவிருக்கிறது.2008 இல் இதற்கான திட்டப்பணிகள்  தொடங்கப்பட்ட போதும், தற்போது இக்கட்டிடத்துக்கான முழு வடிவமைப்பும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் (852 மைல்) உயரத்தில் இந்த  ஹோட்டல் உருவாக்கப்படவுள்ளது. சேவை நிறுவனங்கள், ஆடம்பர பங்களாக்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள இக்கட்டிடத்தின் அடியிலிருந்து மேல் உச்சிக்கு லிப்ஃட்டில் செல்லவே 12 நிமிடம் வேண்டுமாம்.

உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமாகத் தற்போது துபாய் நகரின் பூர்ஜ் கலிஃபா கட்டிடம்.திகழ்ந்து வருகிறது.
 
 
 
 
 
நன்றி.இந்நேரம்.காம்

திருமணத்திற்கு பெண் தேடும் குரங்கு மனிதன்!8


உலகிலேய உடலில் அதிகளவு உரோமம் கொண்ட நபர் தான் திருமணம் செய்துகொள்ள மணப்பெண் தேடுகிறார்.சீனாவை சேர்ந்த யூ சின்குன் எனும் 33 வயது மனிதரே உலகிலேயே அதிகளவு உரோமங்களை கொண்ட மனிதராவார்.
இவரது உடலில் 96 வீதத்துக்கு உரோமம் மண்டிக் கிடக்கிறது. இவர் உலகிலேயே அதிகளவு உரோமம் உடைய நபரென 2002 ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

09 செப்டம்பர், 2011

எள்ளேரியில் மனிதநேய மக்கள் கட்சி சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்




































எள்ளேரியில் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் மமகவின் சார்பில் மிகவும் சிறப்புடன் மாவட்ட தமுமுக&மமகவின் தலைவர் மெஹ்ராஜ்த்தீன் தலைமையில்  நடைப்பெற்றது.

சிறப்பு அழைப்பாளர்கள்: மமகவின் து.பொதுசெயலாளர் சகோ.தமிமுன் அன்சாரி,மமகவின்.பொருளாளர்.சகோ.ஹாரூன்ரஷித் வருகை தந்தனர். 

08 செப்டம்பர், 2011

பொடுகுத் தொல்லை நீங்க

senbaha poo
செண்பக மரப்பட்டையும் வேப்ப மரப்பட்டையும் சம அளவு எடுத்து இடித்து, 4 மடங்கு நீர்விட்டு, காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி காலை, மாலை இரண்டுவேளை குடித்துவர குளிர் சுரம் தீரும்.
செண்பக மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து 20 பங்கு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி தினமும் இருவேளை குடித்துவர நாட்பட்ட குன்மம் (வயிற்றுப்புண்) குணமாகும்.

06 செப்டம்பர், 2011

மரணித்தவருக்காக என்ன செய்ய வேண்டும்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஒரு முஸலிம் மரணித்து விட்டால் அவரை நல்ல முறையில் குளிப்பாட்டி கபனிட்டு , தொழுவித்து அடக்கம் செய்ய வேண்டும் மரணித்தவருக்காக முஃமின்கள், குடும்பத்தார், பிள்ளைகள் செய்ய வேண்டிய இன்னும் சில கடமைகளும் இருக்கின்றன அவையாவன :-
01. பாவமன்னிப்புத் தேடுதல்
எங்கள் இறைவனே முன் ஈமான் கொண்ட சகோதரர்களுக்கும் மன்னிப்பை அருள்வாயாக (குர்ஆன ;59:10)
மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த அனைத்து அமல்களும் அவனை விட்டும் நின்று விடுகின்றன மூன்றைத் தவிர 1.அவன் செய்த நிலையான தர்மம்
(ஸதகா)

05 செப்டம்பர், 2011

இலவச லேப்டாப்களில் ஆப்ரேடிங் சிஸ்டம் தமிழில் இருத்தல் வேண்டும்-அஸ்லம் பாஷா MLA

2011-12 ஆம் ஆண்டிற்கான தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா சட்டபேரவையில் பேசியது:
தகவல் தொழில்நுட்பத் துறை மானியம் தொடர்பாக ஒரு அவசியமான கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். குணினித் தமிழுக்கென சீரான முறையோ, உலக அரங்கில் ஒருங்கிணைப்போ, வளர்ச்சி திட்டமோ, பன்னாட்டு நிறுவனங்களில் கூட்டுப் பணியோ இல்லை, ஒரு கணினியில் பயன்படுத்திய உரையை, பிற கணினியில் பார்க்க பொதுவான எழுத்துரு தேவைப்படுகின்றது. பதிப்பு மற்றும் அச்சுப் பணிக்கும் அது தேவைப்படுகிறது. இணையத்தை அனைவரும் பார்வையிட எழுத்துருவைக் கண்டிப்பாகப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நிலையுள்ளது.

புதிய பாதையில் சேது சமுத்திர திட்டம்?: ராமேஸ்வரத்தில் பச்செளரி குழு ஆய்வு

03-sethusamudram-project300ராமேஸ்வரம்: சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைப்பது குறித்து ஆர்.கே.பச்செளரி தலைமையிலான மத்திய அரசுக் குழுவினர் ராமேஸ்வரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த சர்வதேச அரசுக் குழுமத்தின் இந்தியப் பிரிவின் தலைவரான பச்செளரி மற்றும் அதிகாரிகள் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வை நடத்தினர்.

ராஸ்-அல்-கைமாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இந்தியர் தற்கொலை

imagesCAJIZAO3
துபாய்:ஐக்கிய அரபு குடியரசின் ராஸ்-அல்-கைமாவில் வசித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் வீட்டுக்குள் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

ஒரு கொருவர்த்திச் சுருள் 100 சிகரெட்டுகளுக்குச் சமம்: அதிர்ச்சிகர தகவல்

828B135_500
புதுதில்லி:ஒரு கொசுவர்த்திச் சுருள் உமிழும் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்குச் சமமானது என்றும், இது இந்தியாவில் ஏராளமானோரைப் பாதிக்கிறது என்றும் ஒரு நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஓர் வபாத் செய்தி

 நமதூர்  காயிதேமில்லத் தொருவில் இருக்கும் ஹளிளுல்லாஹ்வின் மனைவி முஹமுதாபிவி அவர்கள்  இன்று   (05.09.2011)    தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.                                       
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை     தந்தருளவேண்டும் என.  கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

04 செப்டம்பர், 2011

இதயம் பலவீனமானவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்.


resize_201108240316021. மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும் தவிர்த்தல் நல்லது.
2. ஒரு முட்டையில் 210 மி.கி கொலஸ்ட்ரால் இருக்கின்ற காரணத்தினால் அது கூடவே கூடாது.
3. பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்னில் அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ப்ரோஸன் உணவுகள் – அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.

நெல்லிக்குப்பம் அருகில் புதிய பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி

 

நெல்லிக்குப்பத்திற்கு அருகில் உள்ள வாழப்பட்டு திருக்கண்டேஸ்வரத்தில் கடந்த ஞாயிறு அன்று அல் ஹக்கீம் மஸ்ஜித் திறப்பு விழா நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட தமுமுக செயலாளரும், நெல்லிக்குப்பம் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லீஸ் தலைவருமான சகோ. ஷேக் தாவூத் தலைமை தாங்கினார்.

கொள்ளுமேடு தமுமுகாவின் நோன்பு பெருநாள் பித்ரா விநியோகம்


கொள்ளுமேடு தமுமுகவின் இந்த ஆண்டும் பித்ரா என்னும் தர்ம்மம் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. 







122 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பொருள்கள்;அரிசி,சினி து.பருப்பு ,ரீபைண்டு ஆயில் ,கோதுமை
சேமியா ,டால்டா ,கடலை , முந்திரி திராட்சை , கறிமசாலா ,கடலைமாவு , மேற்கண்ட உணவு பொருள்கள் அனைத்து குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது .ரமலானில் அறிந்தும் அறியாமலும் செய்த நம்முடைய 'பாவங்களை வல்ல இறைவன் மன்னித்து அருள் புரிவானாக"ஆமின் " 




 ,