#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

25 ஜனவரி, 2013

அமெரிக்கா அடிமைத்தனத்தில் விஸ்வரூபமாய் கமல்.



 அடிமைகள் எப்போதுமே நல்லப் பெயர் எடுக்க கூடுதலாக ஏதாவது செய்ய நினைப்பார்கள். கூடுதல் விசுவாசம் காட்ட நினைப்பார்கள். அவ்வகையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் அதே வேளையில் அமெரிக்கர்களுக்கு அவர் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் அடிமை குணத்தின் உச்சம். ஒரு காட்சியில் அமெரிக்க இராணுவம் ஹெலிகப்டரில் இருந்தபடி தாலிபான் படையினரைச் சுடும். அதில் ஒரு குண்டு ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அமெரிக்க இராணுவ வீரன் மனம் நொந்து வருந்துவான். தாலிபான் படைக்கு பயிற்சியாளராக வரும் கமல், வீட்டில் இருக்கும் படை தலைவனின் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பான். அதற்கு தாலிபான் தலைவன் சொல்வானே ஒரு பதில்… “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்.”

18 ஜனவரி, 2013

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்


                                   பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
                              கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
                                                 அன்புச் சகோதர சகோதரிகளே!

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!
நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

புதுச்சேரி விமான நிலையம் தொடக்க விழா


AIRPORT6
புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளுக்குமுன்பே விமானநிலையம் அடிக்க நாட்டப்பட்டு கட்டுமானப்பணி மிகவும் மந்தமாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் புதுச்சேரி விமானநிலைய பணிகளை விரைவாக முடித்து உடனடியாக விமான போக்குவரத்து தொடங்கவேண்டும் என்ற பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தேடிவரும் (மொபைல்) பள்ளி வாசல்!


தேடிவரும் (மொபைல்) பள்ளி வாசல்!
ஜித்தாவில் செயல்பட்டுவரும் இந்த மொபைல் பள்ளிவாசல், வார விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு நம்மைத் தேடி வருகிறது.
20130104_154310.jpg
படத்தில் காணும் இந்த மொபைல் பள்ளிவாசல், ஜித்தாவில் உள்ள’கார்னிச் பீச்’ என்று அழைக்கப் படும், மக்கள் அதிகம் கூடும் கடல் கரைப் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை அன்று எடுக்கப் பட்டதாகும்.

உன் கண்ணை பிடுங்கி எறிந்து விடு!


child%2Bwith%2Bmother.jpg
அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது. பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.

17 ஜனவரி, 2013

பள்ளிவாசலில் கொடுக்கப்படும் மௌலிது சாப்பாடு நபிவழியா?படித்ததில் பிடித்தது



168475 190620467633431_234897_n
    படித்ததில் பிடித்தது என்ற வரிசையில் மௌலவி முஹம்மது யூசுஃப் எஸ்.பி, காரைக்காலை சேர்த்த இவர் மாநில உலாக்கள் அணித்தலைவராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொறுப்பில் உள்ளார்.
  இவர் எழுத்தாளர்க பல இஸ்லாமிய பத்திரிகையில் பணியாற்றிவுள்ளார் 
குறிப்பாக இவர் எழுதிய மணமக்களுக்கு இஸ்லாமிய உடலுறவு சட்டங்கள்' என்ற நூலின் முலமாக பிரமலமடைதவர்.அனுபவரீதியாக எழுதியது போல் எழுதி இருப்பார் அணைத்து தம்பதிகளும் படிக்க வேண்டிய நூல்.இதுபோன்ற திறமைகள் அதிகம் இவரிடம் உண்டு இவருடயா புதிய படைப்புகளை படைக்க இவருக்காக துவா செய்வோமா!!!

16 ஜனவரி, 2013

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார்.


கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். 


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு

வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.

மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்

‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.

இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:

அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.

அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.


இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.
கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார்.


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு

வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.

13 ஜனவரி, 2013

உலகின் அதிக வயதானவராக கருதப்பட்ட 115 வயது 'ஜப்பான் பாட்டி' மரணம்!


www.thedipaar.comஉலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த டினா மான்ஃப்ரெடினி (115 வயது). இவர் கடந்த மாதம் 17-ம் தேதி மரணமடைந்தார்.

இதனையடுத்து, உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமைக்கு உரியவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த கோட்டோ ஒக்குபோ (115 வயது) என்பவர்

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்


www.thedipaar.com

வெடி வைப்பதில் ஜெயலலிதாவை மிஞ்ச யாராலும் முடியாது. ஆனால், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அவர் வைத்த வெடிக்கு, நாடு முழுவதும் நடுங்குகிறது.

 'அம்மாதான் அடுத்த பிரதமர்’ என்று ஓ.பன்னீர்செல்வம் உட்பட கட்சிக்காரர்கள் ஆசைப்படுகிறார்கள். அதனை ஜெயலலிதாவும் நம்ப ஆரம்பித்து இருப்பதன் வெளிப்பாடுதான் 'நாற்பதும் தனியே’ என்ற அறிவிப்பு. வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா இப்படிச் சொன்னார் என்ற தகவல் வந்ததும் யாரும் அதனை நம்பவில்லை.

காரின் என்ஜினுக்குள் மறைந்து 5 கி.மீட்டர் பயணித்த மலைப்பாம்பு

காரின் என்ஜினுக்குள் மறைந்து 5 கி.மீட்டர் பயணித்த மலைப்பாம்பு


 

தென் ஆப்பிரிக்கா நாட்டில் வசிக்கும் ஒரு இளம் தம்பதியர், 19 ஆயிரத்து 485 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட குர்கர் தேசிய வன விலங்கு பூங்காவை சுற்றிப்பார்க்க தங்களது காரில் சென்றனர். பூங்காவில் உள்ள சிங்கங்களின் சாகசங்களை கண்டு ரசித்துவிட்டு அவர்கள் காரை நோக்கி வந்தபோது, புல்தரையில் ஊர்ந்துக்கொண்டிருந்த 5 மீட்டர் நீளமுள்ள மலைப் பாம்பு, இவர்கள் வரும் ஓசையை கேட்டு காரின் அடியில் நுழைந்தது.

சிங்கம் போன்ற சிகை அலங்காரத்துடன் சுற்றித்திரிந்த நாயைக் கண்டு பீதியடைந்த அமெரிக்கர்கள்

சிங்கம் போன்ற சிகை அலங்காரத்துடன் சுற்றித்திரிந்த நாயைக் கண்டு பீதியடைந்த அமெரிக்கர்கள்


 
அமெரிக்காவின் விர்ஜினியா மாநில தலைமை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த செவ்வாய்கிழமை பொதுமக்களிடம் இருந்து எராளமான அவசர உதவி(911) தொலைபேசி அழைப்புகள் வந்தன. காலை 10.20 மணிக்கு வந்த அழைப்பில், நார்ஃபோல்க் பகுதியில் இருந்து மிருகக் காட்சி சாலையில் தப்பிவந்த சிங்கம் தெருக்களில் நடமாடுவதாக ஒரு பெண் புகார் அளித்தார். அடுத்து வந்த அழைப்பில், பிடரியுடன் ஒரு சிங்கக்குட்டி, தங்கள் வீட்டின் அருகே சுற்றித்திரிவதாக ஒருவர் கூறினார். 

நம்பிக்கை இழக்காதீர்கள்!



மனிதர்கள் பெரும்பாலும் பாவங்களைச் செய்ய விரும்பாதவர்களாக, பாவத்தில் ஈடுபட்டாலும் பாவம் என்று அறிந்த நிலையில் அதை செய்தவர்களாக, செய்பவர்களாக, அதை நினைத்து மனம் வருந்திடக் கூடியவர்களாக, அவற்றில் இருந்து எப்படியாவது விரைவில் விடுபட முயல்பவர்களாகவே, (அதில் தோல்வியடைந்தவர்கள் அல்லது வெற்றி பெற்று நேர்வழியில் வாழ்பவர்கள் ஆகிய இரு சாராரும்) இருப்பது யதார்த்தமான ஒரு மனித இயல்பு ஆகும்.

துவக்குவோம்!


நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக மட்டுமில்லாமல், இறைவனும் அவனுடைய
தூதரும் கற்றுத்தந்த வகையில் பயனுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். சூரியோதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய இரு நிலைகளின் மூலமாக இறைவன் தன்னுடைய அடியானுக்கு, அவனின்அருட்கொடைகளை ஞாபகப்படுத்துகிறான். அதிகமனோர் நன்றி செலுத்தாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறான்.
“நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை”(40:61)

11 ஜனவரி, 2013

ஏன் இஸ்லாம்?


ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ( International Union of Muslim Women ). 

ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. சொல்லிமாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம்.

09 ஜனவரி, 2013

எம்.எல்.ஏவை குறை கூறுப‌வ‌ர்க‌ள் உள்ளூர் பிர‌ச்ச‌னைக‌ள் குறித்து சேர்ம‌ன் ம‌ற்றும் க‌வுன்சில‌ர்க‌ளிட‌ம் கேட்டீர்க‌ளா? தமுமுக‌ கீழை இர்பான் அறிக்கை!





பைல் ப‌ட‌ம் :ராம‌நாத‌புரம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ தொகுதிக்கு ஜ‌வாஹிருல்லாஹ் வேட்பு ம‌னு தாக்க‌ல் செய்த‌ போது.....


த‌முமுக‌வை சேர்ந்த‌ கீழ‌க்க‌ரை இர்பான் வெளியிட்டுள்ள‌ செய்தி தொகுப்பில் கூறியிருப்ப‌தாவ‌து,

வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ கீழக்கரையை சேர்ந்தவ‌ன் என்ற அடிப்படையிலும் தமுமுகவின் உறுப்பினரில் ஒருவன் என்ற அடிப்படையிலும் இதனை நான்ஊர் மக்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். தேர்த‌லுக்கு ம‌ட்டும்தான் முந்தைய‌ எம்.எல்.ஏக்க‌ள் வ‌ந்திருப்பார்க‌ள் பேரா.ஜ‌வாஹிருல்லா ம‌ட்டும்தான் தேர்த‌ல் முடிந்தும் ம‌க்க‌ளை தேடி,தேடி வ‌ருகிறார்

கமலின் விஸ்வரூபம் சிறப்பு காட்சி முஸ்லிம் தலைவர்களுக்கு நேற்று காண்பிக்கப்பட்டது!!


ஒரு பிரச்னைக்கு முதலில் தீர்வு
ஒரு பிரச்னைக்கு முதலில் தீர்வு
கமல் தனது விஸ்வரூபம் படத்துக்கு ஒருபுறம் தியேட்டர் அதிபர்கள் சங்கம், மற்றொரு பக்கம் முஸ்லீம் அமைப்புகள் என்று நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், இந்த இரண்டில் ஒன்றை முதலில் சால்வ் பண்ணலாம் என்று முடிவு செய்து, ஓசைப்படாமல் ஒரு காரியம் செய்திருப்பதாக தெரியவருகிறது.

06 ஜனவரி, 2013

எறும்பு மூளையின் சிறந்த முடிவு!



‘மனிதன்’ வரிசையை அடுத்துக் கொஞ்சம் பூச்சி பிடிக்கலாம். பூச்சிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. முக்கியமாக, கூட்டாகச் சேர்ந்து முடிவுகள் எடுப்பது எப்படி ?

ஒரு எறும்புப் புற்றை எடுத்துக்கொண்டால் சில நூறு முதல் பல லட்சம் எறும்புகள் வரை இருக்கலாம். ஒவ்வொரு சிற்றெறும்புக்கும் ஒரு சிற்றறிவு. கால்   மிமீ. அகலத்தில் மூளை. அதிகமில்லைதான்; ஆனால் புற்றில் வசிக்கும் அத்தனை எறும்புகளும் சேர்ந்து செய்யும் சமுதாயச் செயல்கள்

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா !!!


இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.



இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

05 ஜனவரி, 2013

பச்சை நிறம் குறித்து குர்ஆனில் எட்டு இடங் களில் கூறப்படுகின்றன


குர்ஆனில் பச்சை நிறம்
குர்ஆனில் மற்ற நிறங்களை விட பச்சை நிறத்தை மட்டும் சிறப்பித்துச் சொல்லப்படுவதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை உணரலாம்.
பச்சை நிறம் பார்ப்பதற்கு பசுமையானது!கண்களுக்கு குளிர்ச்சியூட்டுவது! மனிதன் பார்த்ததும் பரவசமடையும் இந்த வண்ண நிறம் இறைவனுக்கும் மிகவும் உவப்பான நிறம் என்பதால் தான் அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகவும், சுவர்க்கத்துப் பரிசுப் பொருட்களில் ஒன்றாகவும் சிறப்பிக்கப்   படுவதை குர்ஆனில் காணலாம்.
இந்த  பச்சை நிறம் குறித்து குர்ஆனில் எட்டு இடங் களில் கூறப்படுகின்றன.அவை:-

காலம் பொன்போன்றது


وَالْعَصْرِ

காலத்தின் மீது ஆணையாக ( அல்குர்ஆன்-103:1)
காலம் பொன் போன்றது. விலை மதிப்பற்றது. சென்றுவிட்ட நேரம் மீண்டும் வரப்போவதில்லை. அதன் அருமையை உணர்த்த இறைவனே ஆணையிட்டுக் கூறுவதென்றால் அதன் மதிப்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். ஆணையிட்டு வரும்  92 சொற்களில் இதுவும் ஒன்றாகும். காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த குர்ஆனில் தனி ஒருஅத்தியாயமே   அருளப்பட்டுள்ளது. எனவே,

சுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி!




இணையத்தில் இன்றைய தலைமுறையினர் ஜிமெயில், பேஸ்புக் ஷாட்டுகளில் நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சுவரஸ்யத்தில் முச்சு விடுவதையே மறந்து விடுகிறார்கள். வாயை திறந்து கணினியை திரையை பார்த்துக் கொண்டே இருப்பதால் மூக்கினால் மூச்சு விடுவதை மறந்து பெரும்பாலும் வாயினால் தான் மூச்சு விடுகிறார்கள். இப்படி மூச்சு விடுவதால் என்ன குறைந்து போய்விட போகிறது என்று கேட்கிறீர்களா?? இந்த பழக்கத்திற்குப் பின்னால் பெரும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே என்னுடைய உடற்பயிற்சி சம்பந்தமான பதிவுகளில் சுவாசத்தின் முக்கியதுவத்தை விரிவாக எழுதியிருக்கிறேன் பார்க்க: இங்கே அழுத்துங்கள்


இவர்களை கொல்லாதீர்கள்,திருட்டு மனிதர்களே.




மனிதன் வங்கியில் திருடுவான், வளையலைத் திருடுவான், கிரிக்கெட்டில் திருடுவான். ஆடு மாடுகள் என்று தன்னைவிடக் கீழான பிராணிகளிடமும் பால், தோல் உட்பட அனைத்தையும் திருடிக் கொள்வான். கேவலம் பூச்சிகளிடம்கூட அவற்றின் கடைசிச் சொட்டு உழைப்பு வரை திருடிக் கொள்ளக் கூச்சப்பட மாட்டான் என்பதற்கு வாழும் சாட்சியாக இருப்பவை தேனீக்கள்.