#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

28 ஆகஸ்ட், 2012

அதிவிரைவாக நடக்கும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் – அடுத்த வருடம் சென்னை போக்குவரத்தை எளிதாக்கும் !!!



சென்னையின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் அதி வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 2013 ல் இயக்கத்தை துவங்கும் வகையல் பணிகள் யாவும் விரிவுபடுத்தப்பட்டு நடாத்தப்படுகின்றன.
கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் வழி தடத்தில், கோயம்பேடு, கோயம்பேடு புறநகர், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், கே.கே.நகர், சிட்கோ (கிண்டி), ஆலந்தூர் ஆகிய எட்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன.

26 ஆகஸ்ட், 2012

பிறந்த குழந்தை பேசியதாக வதந்தி தேங்காய் விலை திடீர் உயர்வு

 காற்றை விட வேகமாக பரவும் சக்தி படைத்தது வதந்தி. இதனால் ஏற்படும் விளைவுகள் பல நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்தி விடுவது உண்டு. இப்போது செல்போன் வந்த பிறகு வதந்தி பரவும் வேகம் அதிவேகமாக உள்ளது. சமீபகாலமாக பரவும் வதந்திகள் அகில இந்திய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அசாம் இனகலவரம் வதந்தி இந்தியாவையே புரட்டிப் போட் டது. இதையடுத்து வெளி மாநிலங்களில் வாழும் அசாம்வாசிகள் வேலை, உடமைகளை விட்டு விட்டு சொந்த மாநிலங்களுக்கு கிடைத்த ரயில்களில் ஓட்டம் பிடித்தனர். இந்த வதந்தி வரிசையில் கடந்த 2

டெல்லியில் புதுமை கொசுவை ஒழிக்க சிறப்பு ரயில்

 தலைநகர் டெல்லியில் கொசுவை ஒழிப்பதற்காக மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு தோள் கொடுக்கும் வகையில், வடக்கு ரயில்வே நிர்வாகமும் கொசுவை ஒழிப்பதற்கான சிறப்பு ரயிலை உருவாக்கி உள்ளது. ரயில் பாதைகளின் அருகில் இருக்கும் நீர்நிலைகளில் வாழும் கொசுக்களை ஒழிப்பதற்கான பூச்சி மருந்து, இந்த ரயில் மூலம் நேற்று இருபுறமும் தெளிக்கப்பட்டது. தலைநகரில் உள்ள புதுடெல்லி, நிஜாமுதின், சப்தர்ஜங், குர்கான், டெல்லி கன்டோன்மென்ட், சாராய் ரோகிலா ஆகிய ரயில் நிலையங்களின் வழியாக நேற்று இந்த ரயில் இயக்கப்பட்டு, மருந்து தெளிக்கப்பட்டது. கொசுவை ஒழிக்க இயக்கப்படும் சிறப்பு ரயில் என்பதால், இதற்கு ‘கொசு கொல்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் - மீண்டும் வன்முறை; 5 பேர் குத்திக்கொலை..

அஸ்ஸாம் மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதில் 5 பேர் குத்திக் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, கலவரத்தில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்தது. 

அஸ்ஸாம் மாநிலத்தில் கோக்ரஜார், சிராங் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போடோ இன மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். கலவர பகுதிகளில் மாநில போலீசாருடன் மத்திய படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். என்றாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

1992ல் "பாபரி மஸ்ஜித்" இடிக்கப்பட்டது!...... 2012 ல் "அக்பரி மஸ்ஜித்" இடிக்கப்படுகிறது!!


   உயர்ஜாதி இந்துக்குக்களால் 1992ல் அயோத்தியில் "பாபரி பள்ளிவாசல்" இடிக்கப்பட்டதென்றால்,  2012ல் டெல்லியில் உள்ள "அக்பரி பள்ளிவாசலை" இடித்து தரைமட்டமாக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மசூதி இடிக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு நிலை சீர்கெடும் என்று போலீஸ் எடுத்துக்கூறியும், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் சஞ்சய்கிஷன் மற்றும் ராஜீவ் "எதை பற்றியும் தங்களுக்கு கவலை இல்லை, எப்பாடு பட்டாகிலும் சட்டம் நிலை நாட்டப்படவேண்டும்" என்று

24 ஆகஸ்ட், 2012

ஓர் வபாத் செய்தி


துபையில் (patchi company )எங்கள் கன்பெனியில் பணிபுரிந்த காரைக்கால் அம்பகரத்தூர் (Ambagarathur )சேர்ந்த  நண்பர் ரஹ்மத் அலி இன்று காலை   (24.08.12 )  தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

22 ஆகஸ்ட், 2012

இவர்களின் விவாதங்கள் தேவையானதா ?




அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய,அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்)...

'அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ''அல்லாஹ்''விற்கே புகழ் அனைத்தும்..

அன்பார்ந்த   சகோதர்களே !!

அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

இறைத்தூதர் ஸல்... அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இன்றைய அல்லாஹ்வை நம்பிய சுன்னத் ஜமாஅத்காரர்களை விட மோசமான யூத-கிறிஸ்தவ-முஸ்ரிக்குக்களை சந்தித்தார்கள். அவர்களில் நாம் அறிந்தவரை ஈசா நபி அலை... அவர்கள் தொடர்பாக நஜ்ரான் பகுதி கிறிஸ்தவர்களிடம் ஒரு முபாஹலாவுக்கு தயாரானது நீங்கலாக, வேறு யாருடனும் விவாதம் என்றோ  முபாஹலா என்றோ காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கவில்லை. அழகிய உபதேசங்கள் வாயிலாகவே அல்லாஹ்வின் மார்க்கத்தை வளர்த்தார்கள்.

20 ஆகஸ்ட், 2012

ஓர் வபாத் செய்தி



நமதூர்  மாமரத்தார்   ஜெகரியாவின் மகன் சலாஹுத்தீன் அவர்கள் இன்று (20.08.12 )கத்தாரில் தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள்,தமுமுக கழக சகோதர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது. 

19 ஆகஸ்ட், 2012

கொள்ளுமேடு தமுமுகவின் 2012 பிஃத்ரா விநியோகம்


தமுமுக &அல் ஹைராத் சமுக சேவை மையத்தின் சார்பில் இந்த ஆண்டும் பிஃத்ரா என்னும் தர்ம்மம் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான   குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது . மேலும் இந்த ஆண்டு சிறப்பு அம்சங்களாக காய்கறிகள் சேர்த்து  வழங்கப்பட்டதை  மக்கள் மிகவும் சந்தோசம் வரவேற்றனர் .  இதுவரை யாரும் செய்திடாத வகையில் தமுமுக  சிறப்பாக விநியோகம் செய்துயுள்ளதை தமுமுகவிற்கு நிகர் தமுமுகதான் என்று  மக்கள் பாராட்டினர் .
எல்லா புகழும் இறைவனுக்கே !
















18 ஆகஸ்ட், 2012

இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!

சமுதாய சொந்தங்களுக்கு ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்.. இந்நன்னாளில் இறைவா உலக மக்கள் அணைவரையும் மனதார மகிழ்வுர வைப்பாயாக. ஏழை பனக்காரன் என்ற வித்தியாசத்தை துடைத்து, இயக்க வேறுபாடுகளை மறந்து சகோதர பாசத்தோடு ஒருவரைக்கொருவர் வாழ்த்தி மகிழ்வோம். ஏழை மக்களுக்கு கொடுத்து உதவுவோம் அவர்களின் மகிழ்விலும் பங்கெடுப்போம். நம்மை படைத்த இறைவன் உலக மக்கள் அணைவருக்கும் அமைதியையும், மன மகிழ்வையும் கொடுத்து வேறுபாடுகள் இல்லா மனிதர்களாக வாழ வழிவகுப்பானாக... 


17 ஆகஸ்ட், 2012

இணைந்தது சமுதாயம்..............!! அதிர்ந்தது எதிரிகளின் கூடாரம்.............!!



அல்லாஹு அக்பர்.............!! அல்லாஹு அக்பர்.............!!


இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட பிளவுகளே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் – மன்னர் அப்துல்லாஹ்

சவூதி அரேபியாவின் புனித நகரான மக்காவில் உலகளாவிய அளவில் நடைபெற்ற இஸ்லாமிய எழுச்சி உச்சி மாநாட்டில் இரு புனித பள்ளிகளின் ஊழியரும், சவூதி அரேபியாவின் மன்னருமான அப்துல்லாஹ், இஸ்லாமிய உலகில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்,

13 ஆகஸ்ட், 2012

எங்கள் பாசமிகு தலைவரை

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக ....



நபிகளார் (ஸல்) அவர்களின் தோற்றத்துக்கு முன்னர் ஹாரிஸ் பின் கல்தா என்பவர் அறேபியாவின் முதலாவது வைத்தியராகக் காணப்பட்டார்

  இவர் பாரஸீக ஜுந்த் சாபூர் மருத்துவக் கல்லூரியில் பயின்றவராவார். இதுதவிரவும் சில மூட நம்பிக்கைகள் பரவி இருந்தன. அவை விஞ்ஞான பூர்வமாக இல்லாததால் நபிகளாரின் வருகையை அடுத்து அவை முக்கியத்துவம் இழக்கப்பட்டன.
 
பின்னர் இஸ்லாத்தின் வளர்ச்சியின் போது அல்குர்ஆன் பல மருத்துவ விடயங்களை முன்
வைத்தது. அத்துடன் சுத்தம் சுகாதாரம் போன்ற விடயங்களுக்கு இஸ்லாம் பாரிய முக்கியத்துவம் கொடுத்தது. இதன் காரணமாகவும் பிற்பட்ட காலங்களில் முஸ்லிம்கள் மருத்துவத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏதுவாக அமைந்தது எனலாம்.

ஓர் வாபாத் செய்தி


தமுமுகவின் முன்னாள் மாநில துணைச்செயலாளர் கடலூர் மாவட்டத்தின் முன்னாள் தலைவரமான எங்கள் பாசத்திற்கும் மதிப்புக்குரிய  தலைவர்  S.M. ஜின்னா   அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (13.08.2012) காலை  தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள்.  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள்,தமுமுக கழக சகோதர்கள்  அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை     தந்தருளவேண்டும் என.  கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

10 ஆகஸ்ட், 2012

ஒரு நிமிடம்..! ஒரு துளி கண்ணீர்...! ஒரு வேளை பிரார்த்தனை..!



வண்ண வண்ண மின் விளக்குகளால் 
மின்னும் மினாராக்கள்...
வித விதமான 
அரேபிய பேரீச்சம் பழங்கள், 
பல ரகங்களில் பழ வகைகள் ...
பாத்திரம் வடிய நோன்பு கஞ்சி...
தாகம் தணிக்க குளிர் பழச் சாறு...
இப்தார் விருந்தால் இடமின்றி தவிக்கும்
பள்ளி வாசல்கள்...
அசைவ உணவின்றி முழுமை பெறாத
சஹர் நேர சாப்பாடு...

மியான்மர் மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை சென்னையில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

   
மேற்கு பர்மாவில் முஸ்லிம்கள் திரளாக வசித்துவரும் ராகின் மாநிலத்தில் பௌத்த வெறிக்கும்பல் அரசாங்கத்தின் ஆதரவோடு முஸ்லிம்களை ஈவிரக்கம் இல்லாமல் இனப்படுகொலை செய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் இந்த வெறியாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 

08 ஆகஸ்ட், 2012

மதக்கொள்கைகளை திட்டாதீர்கள்(‘Respect For all religions’)




மத இழிவு கூடாது

உணர்வுகளில் மிக மென்மையானது சமய உணர்வு. எளிதில் தூண்டப்படுவது; உணர்ச்சிகளை விரைவாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கலவரங்களைத் தூண்டும் சக்தி படைத்தது.எனவே சமயங்களைப் பழிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.(பார்க்க குர்ஆன் 6:108)..

அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை - அகதி முகாம்களில் 4 லட்சம் பேர்


 
குஜராத் 2002 என்றால் உங்கள் அனைவருக்கும் தெரியும். குஜராத்தைக் குதறிய கொலைக்கூட்டம் ஏறக்குறைய 3 ஆயிரம் சிறுபான்மையினரைப் படுகொலை செய்தது. கொலைப் படைக்கு முதலமைச்சர் நரேந்திர மோடியே தலைமை தாங்கினார் என்பது நீதியை நாடும் நடுநிலையாளர்களின் குற்றச்சாட்டு. குஜராத் இனப்படுகொலை 2002 என அது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஒரு
 மாநில அரசு செயலற்ற நிலையிலும் வன்முறையாளர்களுக்கு ஆதரவான நிலையிலும் செயல்பட்டதாக மனிதஉரிமை ஆர்வலர்களின் அசைக்க முடியாத வாதம்.

07 ஆகஸ்ட், 2012

சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் ம.ம.க. பொதுச் செயலாளர் சந்திப்பு

 

சிங்கப்பூர் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பாக இந்திய முஸ்லிம் பேரவை (திமிவி) செயல்படுகிறது. அக்கூட்டமைப்பு சார்பில் கடந்த 3.8.2012 அன்று சிங்கப்பூர் பென்கூலின் பள்ளிவாசல் அருகே நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரின் துணைப் பிரதமர் டியோ சீ ஹீயான் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்ச
ியில் பங்கேற்க வருமாறு கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் தீன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரிக்கு அழைப்பு விடுத்தார். அதன்பேரில் எம். தமிமுன் அன்சாரி கலந்துகொண்டார்.

கண்ணியமிக்க லைலத்துல்கத்ர் இரவு :


லைலதுல் கத்ர்

இந்த ரமளான் மாதத்தில் அருட்கொடையாக திருக்குர்ஆன் இறக்கப்பட்ட லைலத்துல்கத்ர் எனும் பரக்கத் நிறைந்த இரவை அல்லாஹ் பொக்கிஷமாக கொடுத்திருக்கிறான்.ஆயிரம் மாதங்களை விட இந்த ஒரு இரவு சிறப்பு மிக்கதாக அல்லாஹ் தன் திருமறையில் அறிவிக்கின்றான்.

திருக்குர்ஆன் ஓத நேரமில்லை..! :


புனிதமிக்க ரமலான் மாதம் ஒவ்வொன்றாக நம்மை விட்டு சென்றுகொண்டிருக்கிறது, இனியும் சில நாட்கள் மட்டுமே நமக்காக உள்ளது, அனால் நம்மில் பலர் நோன்பை நோற்பவராக இருந்தாலும் திருக்குர்ஆனுடன்  தொடர்பு மிக மிக குறைவாகவே உள்ளது. நேரமில்லை என்ற காரணமும், சரியாக ஓதத் தெரியாது என்ற ஒரு மனநிலையும் நம்மில் பலபேருக்கு உள்ளது.

05 ஆகஸ்ட், 2012

மீனவர் கொலை. இது தான் கேரளா அரசுக்கும் தமிழக அரசுக்கும் வித்தியாசம் - ஜவாஹிருல்லா கண்டனம்



அமெரிக்க கடற்படையால் சுடப்பட்ட மீனவருக்கு அற்ப இழப்பீட்டை பெற்று வழங்கிய தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜவாஹிருல்லா வெளியிடுட்டுள்ள அறிக்கையில்… 

துபாயில் கடந்த ஜுலை 16 அன்று அமெரிக்கப் போர் கப்பலான ரேப்பஹன்னோக் சுட்டதில் பலியான எனது தொகுதியைச் சேர்ந்த மீனவர் சேகர்
குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் காயமடைந்த முத்துக்கண்ணன், பாந்துவநாதன் மற்றும் முத்து முனிராஜ் ஆகியோரின் குடும்பத்திற்கு ரூ50 ஆயிரம் என அமெரிக்க அரசின் சார்பாக வழங்கப்பட்ட அற்பமான இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது வேதனைகுரியதும் வன்மையான கண்டனத்திற்குரியதுமாகும். 

04 ஆகஸ்ட், 2012

செல்வந்தர்களே!


 Post image for செல்வந்தர்களே!செல்வந்தர்களே! நீங்கள் சேமித்து வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்மையில் அனுபவிப்பது எவற்றை என்பதை நிதானமாகச் சிந்தியுங்கள். எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் மனிதன் ஒரு வயிற்றுக்குத்தானே சாப்பிட முடியும். இரண்டு வயிற்றுக்கு சாப்பிட முடியுமா? இரண்டு வாகனங்களில் தான் பிரயாணம் செய்ய முடியுமா? மனிதன் அனுபவிப்பதற்கென்று அல்லாஹ் ஒதுக்கியதற்கு மேல் ஒரு ஊசி முனை அளவுதானும் அனுபவிக்க முடியுமா? இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு ஏழை நடுத்தர வர்க்கத்தினன் அனுபவிக்கும் உலக சுகங்களைக்கூட அனுபவிக்க விடாமல் உங்களது செல்வம் உங்களைத் தடுத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

இணைப்பதும் பிளப்பதும் நாவுதான்!


 Post image for இணைப்பதும் பிளப்பதும் நாவுதான்!சுப்யான் பின் அப்துல்லாஹ் ஸகஃபி(ரலி) அறிவிக்கின்றார்கள்: நான்  நபிகளாரிடம், “”ஆபத்துமிக்கவையாக எனக்கு நீங்கள் எடுத்துரைத்தவற்றில் எல்லாவற்றையும் விட மிக அதிக ஆபத்துமிக்கது எது?” எனக் கேட்டேன்.  நபி(ஸல்) அவர்கள் தம்முடைய நாவைப் பிடித்துச் சொன்னார்: “இது’        நூல் : திர்மிதி

நாவைத் தவறாகப் பயன்படுத்துவதால் விளைகின்ற குழப்பமும் கலகமும் மிகக் கொடியவை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதனை எவரும் மறுக்கவும் மாட்டார்கள். ஒருவர் நாவால் மொழிகின்ற ஒவ்வொரு சொல்லும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதே. அது ஏற்படுத்துகின்ற பாதிப்பைப் பொறுத்து அது தேனாகவும் இனிக்கும்; விஷமாகவும் கொட்டும். தேனாக இனிக்குமா, விஷமாகக் கொட்டுமா என்பதைத் தீர்மானிப்பது நாவின் மூலம் சொற்களை மொழிகின்ற மனிதர்தான்.

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்


Post image for பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

03 ஆகஸ்ட், 2012

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் குடும்பத்தோடு கோர்ட்டில் ஆஜர்


 Asset Case Mrk Paneerselvam Family Appear Before Court கடலூர்: சொத்து குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது மனைவி செந்தமிழ் செல்வி, மகன் கதிரவன் ஆகியோருடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். அவர் மீதும், அவரது மனைவி செந்தமிழ் செல்வி, மகன் கதிரவன் ஆகியோர் மீதும் வருவமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 3.10.2011 அன்று வழக்கு தொடர்ந்தனர்.

01 ஆகஸ்ட், 2012

குஜராத் முஸ்லிம்கள் இப்பொழுதும் பீதியில் வாழ்கின்றார்கள்! – அமெரிக்காவின் அறிக்கை!

Gujarat Muslims still live in fear, says US reportவாஷிங்டன்:குஜராத்தில் முஸ்லிம் சமூகம் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் தற்பொழுதும் வேட்டையாடப்படுவோம் என்ற பீதியில் வாழ்வதாக அமெரிக்காவின் மத சுதந்திரம் குறித்த அறிக்கை கூறுகிறது.
2002 குஜராத் இனப் படுகொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன்ன்னால் கொண்டு வருவதிலும் தாமதம் ஏற்படுவது குறித்து அவ்வறிக்கை கவலை தெரிவிக்கிறது.

சவுதி அரேபியாவில் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை !


பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதன் மூலம் அந்த புகையை சுவாசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொது இடங்களில் சிகரெட் பிடிக்க பல நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில், தற்போது சவுதி அரேபியாவும் இதற்கு தடை விதித்துள்ளது. அதன்படி அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக்கூடாது. மேலும், ஓட்டல்கள், காபி ஷாப்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பெரு வணிக

பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்...

பெங்களூர் மாநகரம். 

1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்".

பித்ரா (தருமம்) கொடுத்த பின்புதான் நோன்பு வானகம் செல்கிறது.


ரமலான் மாத நோன்பு குறித்து, அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்!
* ரமலான் பிறை பார்த்து நோன்பு வைய்யுங்கள்(ஷவ்வால்) பிறை பார்த்து நோன்பை நிறுத்துங்கள் (வானம் மேகத்தால் மறைக்கப்படுமானால்) எண்ணிக்கையை முப்பதாக முழுமைபடுத்திக் கொள்ளுங்கள்!
* ரமலான் மாதம் வந்து விட்டால் வானங்களின்(ரஹ்மத்தின்) கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கெல்லாம்