#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

05 பிப்ரவரி, 2012

விபச்சாரம் பற்றி இஸ்லாம்

விபச்சாரம் பற்றி இஸ்லாம் 


விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விலக்கப்பட்டுள்ளன:


அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல் -சுதந்திரமாகப் பழகுதல்


இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:




''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.'' (அஹ்மத்)
''உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.'' (புகாரி, முஸ்லிம்)

பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:-



திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:37)

நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும் பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்இருக்கின்றதோ அத்தகயவன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)

04 பிப்ரவரி, 2012

சிரியாவில் கலவரம்: ராணுவம் துப்பாக்கி சூட்டில் 217 பேர் பலி


சிரியாவில் கலவரம்: ராணுவம் துப்பாக்கி சூட்டில் 217 பேர் பலி
 
சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக பொதுமக்கள் கலவரம் நடத்தி வருகின்றனர். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இருந்தும் இன்னும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று ஹோம்ஸ் நகரில் போராட்டக்காரர்கள் திரண்டனர்.

03 பிப்ரவரி, 2012

முஸ்லிம்களுக்கு இட ஓதுக்கிடு அதிக படுத்த வேண்டும் என்றும் தமிழக மக்களின் வாழ்வாதரம் குறித்து,Dr.ஜவாஹிருல்லா பேச்சு


குறிப்பாக தானே புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ1000 கோடி மதிப்பில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு, இப்பகுதியில் விளை நிலங்கள் ரியல் எஸ்டேட்களாக மாறுவதை தடுக்கும் வகையில் முந்திரி உள்ளிட்ட மரங்களை நட்டுவதற்கும் அவற்றை ஓர் ஆண்டு பராமரிப்பதற்ம் அரசே செலவுகளை அளிக்கும் என்ற அறிவிப்பு, நகர்புற வறுமையை போக்க முழுமையான திட்டம், கணினி வன்பொருள் உற்பத்தியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க நிபுணர் குழு அமைப்பு போன்ற பயனுள்ள அறிவிப்புகளை வரவேற்கிறேன்.

இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு! Read more about இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு!


சவுதி அரேபிய வரலாற்றில் முதன்முறையாக, ரியாதிலுள்ள இந்திய தூதரகம், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவதற்காக நிகழ்ச்சி ஒன்றை 02.02.12 ஏற்பாடு செய்திருந்தது.
தூதரக அதிகாரிகள் சந்திப்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ரியாத் மத்திய மண்டல நிர்வாகிகள் ஹுஸைன் கனி, நூர், ஆஷிக் உள்ளிட்டோரும், தம்மாமிலிருந்து பிலால், அஜ்மல் மற்றும் அப்துல் காதர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அந்நிகழ்ச்சியில், த மு மு க கிழக்கு மற்றும் மத்திய மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு தாங்கள் அரேபிய மண்ணில் செய்து வரும் சமூக நலப்பணிகள் குறித்து எடுத்துக் கூறியதுடன், அதில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கு இந்திய தூதரக அதிகாரிகள் மட்டத்தில் தேவைப்படும் ஆலோசனை மற்றும் உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

கூடங்குளம் அணு உலை விவகாரம்: காங்- மனிதநேய மக்கள் கட்சி மோதல்

சென்னை: கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பாக இருப்பதால் மின் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாததில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்தனர்.

02 பிப்ரவரி, 2012

9/11 அச்சம் – பணியை இழந்த முஸ்லிம் விமானி


sheidayi20120129151006973
லண்டன்:பிரிட்டனின் முக்கிய விமான நிறுவனத்தில் பணிபுரிந்த முஸ்லிம் விமானி ஒருவர் செப்டம்பர் 9/11 போன்ற தாக்குதலை நடத்தக்கூடும் என்று குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இவருக்கு ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டு இருந்தார். ஆனால் இதுவரை எந்த குற்றசாட்டும் பதிவு செய்யப்பட வில்லை.

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் சுயசரிதை – எதிர்ப்புகளுக்கு இடையே வெளியீடு


Supporters express solidarity with Taslima Nasreen at the book fair
கொல்கத்தா:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் சுயசரிதையான ‘நிர்வசன்’(நாடு கடத்தப்பட்டவர்) தொகுப்பு மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொல்கத்தாவில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
அந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புத்தகக் கண்காட்சி அரங்கத்துக்கு வெளியிலேயே புத்தகம் வெளியிடப்பட்டது.

விழுப்புரம் நகராட்சியை முற்றுகையிட்டது. மனிதநேய மக்கள் கட்சி

விழுப்புரம் நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம்விழுப்புரம் நகரம் 6 , 8 , 9 , 16 ஆகிய வார்டுகளில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் குண்டும், குழியுமாக, கழிவு நீர் சாலைகளில் ஓடும் சூழ்நிலை இருக்கிறது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்கிடையே சென்று வருகின்றனர். இந்த வார்டுகளில் கொட்டப்படும் குப்பைகள் அல்லாமல் உள்ளதால், மேலும் அவ்வப்போது பெய்து வரும் மழையால் குப்பைகள் சாலையின் நடுவில் சேர்ந்தும், குழியாக உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கியும் இருப்பதால் பள்ளம் தெரியாமல் நடந்து செல்பவர்கள் கீழே விழுந்தும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளம் தெரியாமல் விழுந்தும் அடிபட்டு வருகின்றனர். கழிவுநீர் தேங்கி இருப்பதால் சுகாதாரக்கேடாகவும், கொசுக்கள் உற்பத்தியாகும் தொழிற்சாலையாகவும் இருப்பதால் இங்கு குடியிருப்பவர்கள் அடிக்கடி ஜுரம் மற்றும் நோயினால் அவதியுற்று வருகின்றனர். எனவே மேற்படி வார்டுகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் செய்து சாலையை சீரமைத்தும், வாய்க்கால்களை தூர்வாரி கொசு மருந்து அடித்தும், குப்பைகளை தினந்தோறும் அள்ளி செல்லவும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் நகராட்சியில், விழுப்புரம் நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பில்02-02-2012 அன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

நீதிமன்றமே நியாயம் இல்லையா?காந்தி தேசமே கேட்பார் இல்லையா?


அன்பார்ந்த சகோதர்களே....
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உரித்தாகுக.கடந்த 1995ல் மார்ச் 3ம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பார்சல் குண்டு சம்பவம் தொடர்பான வழக்கில் ஐந்து பேருக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அதில் ஜே.எஸ்.ரிபாயி அவர்களும் அடக்கம்.

இவ்வழக்கில் நேரடி சாட்சியங்கள் இல்லை. இதை தீர்ப்பில் நீதிபதியே குறிப்பிடுகிறார்.தீர்ப்பின் 49ம் பக்கத்தில் 13ம் பாராவில் கீழ்க்கண்டவாறு நீதிபதி குறிப்பிடுகிறார்.