மறைவாக உள்ள பொருட்களை எடுக்க முடியாது. காரணம் அப்பொருட்களில் இருந்து பட்டுத்தெறிக்கும் ஔிக்கதிர்கள் கமெராவை வந்து அடைவதில்லை. இதனால் பொருள் கமெராவிற்கு புலப்படாது.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
26 மார்ச், 2012
எதிர்பார்ப்புகளை ஏமாற்றியது பட்ஜெட் ,மனிதநேய மக்கள் கட்சி
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2012&2013ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வருடந்தோறும் சமர்ப்பிக்கப்படும் மற்றொரு பட்ஜெட் என்ற அளவிலேயே உள்ளது.
பாராட்டப்பட சில அம்சங்களும், வருத்தமளிக்கும் சில அம்சங்களும் சமஅளவில் கலந்திருக்கின்றன.
25 மார்ச், 2012
பிரதீபா பாட்டீல்.. 12 வெளிநாட்டு டூர், 22 நாடுகளில் பயணம், செலவு ரூ. 205 கோடி!

டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றது முதல் இதுவரை 22 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து அரசு செலவிட்ட தொகை ரூ. 205 கோடியாகும் என்று ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
மொத்தம் 12 முறை அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளாராம். கடும் முயற்சிகளுக்குப் பின்னர் கிடைத்த ஆர்.டி.ஐ. தகவல்கள் மூலம் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.
மொத்தம் 12 முறை அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளாராம். கடும் முயற்சிகளுக்குப் பின்னர் கிடைத்த ஆர்.டி.ஐ. தகவல்கள் மூலம் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.
24 மார்ச், 2012
தலைவலியால் உசுரே போகுதா? வயிறுமுட்ட சாப்பிடாதீங்க !
தலைவலி உயிர் போகுதே என்று துடிக்கிறீர்களா? வீட்டிலேயே இருக்கிறது இதற்கு வைத்தியம். அதற்கு முன் தலைவலி எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் !!!
தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்.பி.ஜி என்னும் சமையல் எரிவாயுவின் பற்றாக்குறை இருக்கிறது.விலை உயர்ந்து கொண்டே போவதும் நேர்கிறது. இந்த நிலையில் மாற்று எரிபொருளை தேடி வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இயற்கையில் பூமியில் கிடைக்கும் இந்த எரிவாயுவும் இன்னும் சில கால அளவுக்கு மேல் கிடைக்க போவதில்லை. இதனால் வருங்காலத்தில், எதையெல்லாம் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.23 மார்ச், 2012
உத்தரப்பிரதேசம்: சாதனைப் படைத்தது பீஸ் பார்ட்டி
முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கென ஒரு கட்சி தேவை என்பதற்காக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் பீஸ் பார்ட்டி. இந்தக் கட்சியின் தலைவராக டாக்டர் முஹம்மது அய்யூப் உள்ளார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தக் கட்சியில் அனைத்து சமுதாய மக்களும் உறுப்பினராகவும், நிர்வாகிகளாகவும் உள்ளனர்.

முதன்முறையாக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பீஸ் பார்ட்டி போட்டியிட்டது. பீஸ் பார்ட்டியின் வேட்பாளராக முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து சாதிய சமுதாய சகோதர, சகோதரிகளும் களம் கண்டனர்.உத்தரப்பிரதேசத்தில்
20 மார்ச், 2012
தடம் மாறும் இளைய தலைமுறை!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த மருத்துவ பரிசோதனையில் 320 மாணவிகள் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்துள்ளது. அதை விட அபாயகரமான அறிக்கை ஒன்றை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு உள்ளது. இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,379 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது அந்த அறிக்கை.
19 மார்ச், 2012
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகப் பாலில் ஐஸ் கிரீம்
துபை,மார்ச் 19: ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முதலாக ஒட்டகப் பாலில் ஐஸ் கிரீமைத் தயாரித்து சந்தையில் வெளிவிட அல் அய்ன் டெய்ரி எனும் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஒட்டகப் பால், அரேபியப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரும்பும் முக்கிய உணவுப் பொருளாகும். பசும்பாலை விட ஒட்டகப் பாலில் சிறிது உப்புச்சுவை அதிகமாக இருக்கும்.
நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா :
நீடூர் -நெய்வாசலில் த மு மு க வின் 98.வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது .த மு மு க வினர் தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தி வருகின்றனர் .அந்த வகையில் நேற்று நீடுரின் வரிசை எண். 98.இந்த ஆம்புலன்சை அற்பனிபதர்க்காக மாபெரும் எழுச்சியுடன் விழா நடைபெற்றது .இவ்விழாவில் த மு மு க வின் மூத்த தலைவர் ஜவஹிருல்லாஹ் .M.L.A.அவர்களும் ,ம ம க வின் மாநில பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களும் தமுமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் சகோ .கோவை ஜாகிர் மாயவரம் அமீன் கடலூர் ஜின்னாஅவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் .மேலும் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை M.L.A.,திரு .பால அருள்செல்வன் மயிலாடுதுறை ஒன்ரியசேர்மன் அதிமுக சந்தோஷ்குமார் அவர்கள் கலந்துகொண்டார் . இவ்விழவிர்க்காக த மு மு க வினர் நீடுரை நோக்கி திரண்டனர் .இவ்விழாவில் ஆயிரத்திருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
