அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
31 ஜூலை, 2011
பெண் உருவில் காய் காய்க்கும் அதிசய மரம்!
Nareepol என்றழைக்கப்படும் இந்த வினோத மரம் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் வளருகின்றன. அதனால் தான் இந்த மரம் Nareepol எனப்படுகிறது. Naree என்றால் மலாய் மொழியில் பெண் என்றும் Pol என்றால் மரம் என்றும் பொருள் தருகிறது. இருப்பினும் இது ஒரு கிரப்பிக் வேலை என சிலர் கூறிவருவதும் குறிப்படத்தக்கது.
30 ஜூலை, 2011
தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரம் இல்லாதது : ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா
திண்டுக்கல் : ""தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரமற்றது,'' என மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரமற்றது. அதில் முஸ்லிம்கள் நிர்வகிக்கும் ஒரியண்டல் பள்ளிகளில் உள்ள உருது மொழி படிக்க வாய்ப்பு இல்லாமல் செய்தது. இதை, தமிழக அரசு ஒராண்டு நிறுத்தி வைக்கும் முடிவு வரவேற்க தக்கதாகும்.
29 ஜூலை, 2011
லிபியாவில் கிளர்ச்சியாளர் படை கமாண்டர் சுட்டுக்கொலை
பெங்காசி, ஜூலை. 29-
லிபியாவில் அதிபர் கடாபியின் ராணுவத்தின் மூத்த அதிகாரியாக இருந்தவர் ஜெனரல் அப்துல் பதாயூனஸ். தற்போது இவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்களின் படை கமாண்டராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் பெங்காசி நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். எனவே அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
ரமழானை வரவேற்போம்
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.
கொள்ளுமேட்டில் இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை சார்பில் ரமலான் வசந்தம்
சென்ற புதன்(27/07/2011) இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை மார்க்க சொற்பொழிவு நடைப்பெற்றது.F.ரிபாய் தலைமையில் ,சிறப்பு அழைப்பாளராக கோவை.செய்யது வருகை தந்தார்.ரமளானில் எதிர்பார்ப்பது என்ன என்ற தலைப்பில் கோவை.செய்யதும்,மனிதனை புனிதமாக்கும் ரமலான் என்ற தலைப்பில் மொவ்லவி.சைபுத்தின் ஹஜ்ரத் அவர்களும் மேலும் மொவ்லவி.இஸ்மாயில் ,ஜாமியா மஸ்ஜித் இமாம் இம்தாதுல்லாஹ் ,மதினா ஜாமியா பள்ளி இமாம்.முகமத் ஆதம்,அவர்களும் மிகவும் சிறப்பாகவும் .வரும் ரமலானை வரவேற்ப்பு விதமாகவும் பயன்னுள்ள சொற்பொழிவு என்று பொதுமக்கள் அனைவரும் பாரட்டுதக்க விதமாக அமைந்தது என்று அனைவரும் கூறினர்.பெண்களும் ,அண்களும் பெரும்திரளாக கலந்துக்கொண்டனர் ..எல்லாப்புகழும் வல்ல இறைவனுக்கே''
27 ஜூலை, 2011
பிச்சாவரம் சுற்றுலா மையம்: அமைச்சர் ஆய்வு
சிதம்பரம், ஜூலை 26: சிதம்பரம் அருகே சுரபுண்ணைக் காடுகள் அடங்கிய பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்தை மேம்படுத்துவது குறித்து தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
26 ஜூலை, 2011
இந்தியாவில் முதன் முறையாக ‘டாடாவின்’ அடுத்த அதிரடி – வெறும் 32,000 ரூபாகளில் தரமான வீடு – முன்கூட்டி புனையப்பட்ட (Pre-Fabricated) வீடுகள் !!!
புது டில்லி ஜூலை 20 – பல்வேறு துறைகளில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் ‘டாட்டா’ நிறுவனமானது, தங்களது அலட்டலில்லாத பயங்கர அதிரடிகளுக்கு பெயர் போனது யாவரும் அறிந்ததே.
முன்னதாக, உலகின் அதி விலை குறைவான நானோ காரை மிக குறைந்த விலையில் அதிரடியாக வெளியிட்ட ‘டாட்டா’ நிறுவனம், இப்போது தொட்டிருப்பது உலகின் மிக குறைவான விலையில் தரமான வீடுகளை கட்டி தரும் திட்டமாகும்.
முன்னதாக, உலகின் அதி விலை குறைவான நானோ காரை மிக குறைந்த விலையில் அதிரடியாக வெளியிட்ட ‘டாட்டா’ நிறுவனம், இப்போது தொட்டிருப்பது உலகின் மிக குறைவான விலையில் தரமான வீடுகளை கட்டி தரும் திட்டமாகும்.
‘சமச்சீர் கல்வி’ விடயத்தில் ‘உயர்நீதிமன்ற’ தீர்ப்புக்கு தடை விதிக்க ”உச்சநீதிமன்றம்’ மறுத்து – சமச்சீர் கல்வி புத்தகங்ககளை ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் விநியோகிக்கமாறு தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு!!!
டெல்லி ஜூலை 21 - சமச்சீர் கல்வி விடயத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த ‘தமிழக அரசுக்கு’ சவுக்கடியாக உச்சநீதிமன்ற, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க இயலாது என்று கூறி தீர்பளித்துள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று வரும் 2-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை தமிழக அரசு வினியோகிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுரங்க ஊழல், நண்பனின் மனைவியை கரிபழிக்கும் அமைச்சர், சட்டமன்றத்தில் ஆதரவில்லாமல் ஆட்சி, ஜனநாயகத்தை கேலிசெய்து படுகொலை – இவற்றின் மொத்த உருவம் பாஜக வின் எடியூரப்பா!!
பெங்களூர், ஜூலை.25: கர்நாடகாவில் இன்று நடக்கும் ஜனநாயக படுகொலை, லட்சம் கோடி ரூபாய்கள் பெருமான சுரங்க ஊழல், கற்பழிப்பு பேர்வழிகளை அமைச்சராக்கி வைத்தது போன்ற கிரிமினல் குற்றங்களின் தலைவனாக செல்யல்பட்டு ‘முதலமைச்சர்’ பதவிக்கு இழுக்கு தேடி தருபவர் பாஜக வின் எடியூரப்பா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




