#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

28 ஜூன், 2011

காஸ் சிலிண்டர் விலையில் ரூ.15 குறைப்பு: "வாட்' வரியை நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா

 
 

சென்னை:சமையல் காஸ் மீது, தமிழக அரசு விதிக்கும், 4 சதவீத மதிப்புக் கூட்டு வரியை முற்றிலும் நீக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், தற்போது விற்பனை செய்யப்படும் சிலிண்டர் விலையில், 14 ரூபாய், 73 காசு குறையும். இனி வருங்காலங்களிலும் சமையல் காஸ் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படாது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

சமையல் காஸ் விலையை குறைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் மற்றும் மூத்த அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர்.


இதன்பின், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை, மத்திய அரசால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டதால், பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல், டீசலுக்கான விலையை, லிட்டருக்கு, 3 ரூபாயும், சமையல் காஸ் விலையை, சிலிண்டர் ஒன்றுக்கு, 50 ரூபாயும், மண்ணெண்ணெய் விலையை, லிட்டருக்கு, 2 ரூபாயும் உயர்த்தி, மத்திய அரசு அறிவித்தது.பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட, அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு, அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதிக்கும்.இதிலும், சமையல் காஸ் விலை, சிலிண்டருக்கு, 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால், தாய்மார்கள் விரக்தியில் உறைந்து போயுள்ளனர். உலகளவில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாகக் கூறி, பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டு, மாநில அரசுகள், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டுமென அறிவுரை வழங்குவது வேடிக்கையானது.

நம்நாட்டு தேவைக்கான பெட்ரோலியப் பொருட்கள் அனைத்துமே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மூலம் மட்டும் தயாரிக்கப்படுவது அல்ல. உள்நாட்டில் பெறப்படும் கச்சா எண்ணெய் மூலமும் தயாரிக்கப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் லாப நோக்கு, நிர்வாகத் திறமை, நிர்வாகச் செலவுகளும் பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.இவற்றை கருத்தில் கொள்ளாமல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையை மட்டும் சுட்டிக்காட்டி மத்திய அரசு தன் பொறுப்பை தட்டிக் கழிப்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று. எனவே தான், டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வை கண்டித்ததோடு, இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டுமென கேட்டேன்.

முந்தைய தி.மு.க., ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழகத்தில், கடன் சுமை, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துவிட்டது. இதுதவிர, மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் உட்பட, பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.ஒப்பந்ததாரர்கள், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கிய விவசாயிகளுக்கு எல்லாம், பல மாதங்களாக நிலுவைத் தொகையை வழங்காமல், முந்தைய அரசு விட்டுச் சென்றுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு, பெட்ரோலியப் பெருட்களின் விலை உயர்வை திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகள் இல்லாத நிலையில், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் சமையல் காஸ் விலை உயர்வில் இருந்து அவர்களைப் பாதுகாக்க, தமிழக அரசால் வழங்கக் கூடிய நிவாரணம் அனைத்தையும் வழங்க முடிவு செய்துள்ளேன்.அதனடிப்படையில், மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டு, இனிமேல் குறைப்பதற்கு ஏதுமில்லை என்ற அளவில், சமையல் காஸ் விலையை குறைக்க முடிவு எடுத்துள்ளேன். அதன்படி, சமையல் காஸ் மீது தற்போது விதிக்கப்படும், 4 சதவீத மதிப்புக் கூட்டு வரியை, வரும் ஜூலை 1ம் தேதி முதல், அறவே நீக்க உத்தரவிட்டுள்ளேன்.
இதையடுத்து, தமிழகத்தில் தற்போது விற்கப்படும் ஒரு சிலிண்டர் காஸ் விலை, 404 ரூபாய், 40 பைசா என்ற அளவில் இருந்து, 389 ரூபாய், 67 பைசா என்ற அளவுக்கு குறையும். அதாவது, ஒரு சிலிண்டர் விலை, 14 ரூபாய், 73 காசு அளவுக்கு குறையும். இனி வருங்காலங்களிலும், சமையல் காஸ் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படாது.சமீபத்தில் மத்திய அரசால் உயர்த்தப்பட்ட, 50 ரூபாய் விலை உயர்வுக்கு தற்போதுள்ள மதிப்புக் கூட்டு வரியின்படி, மாநில அரசுக்கு, ஆண்டுக்கு, 16 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்ற நிலையில், ஏற்கனவே சமையல் காஸ் மீதான மதிப்புக் கூட்டு வரி மூலம் ஆண்டுக்கு கிடைத்து வந்த, 104 கோடி ரூபாய் வருவாயையும் சேர்த்து, மொத்தம், 120 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

 நன்றி. தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக