
திருப்பூர், நல்லூர் சிறுநகர் காலனியில் 107 வயது பாட்டி ஜெஹராவியுடன், ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்த குடும்பத்தினர். (உள்படம்: ஜெஹராவி பாட்டி).
திருப்பூரைச் சேர்ந்த 107 வயது பாட்டி ஜெஹராவி, தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை தனது 189 வாரிசுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை பூர்விகமாகக் கொண்டவர் எஸ்.ஆர். சையத் அப்துல் லத்தீப். இவரது மனைவி பூமா என்ற ஜெஹராவி (107). கடந்த 1951 ஆம் ஆண்டு குடும்பத்துடன் திருப்பூர் வந்த சையத் அப்துல் லத்தீப், ஜெஹராவி தம்பதி பனியன் நூல் பிரிக்கும் வேலை செய்து, குழந்தைகளை வளர்த்தனர். 40 ஆண்டுகளுக்கு முன் சையத் அப்துல் லத்தீப் இறந்து விட்டார். இப்போது, 107 வயதான ஜெஹராவி தன் வாரிசுகளின்