#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

20 நவம்பர், 2010

மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளி சுவாமி ஆசிமானந்த் கைது!

மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படும் சுவாமி ஆசிமானந்தை சிபிஐ வெள்ளிக் கிழமையன்று கைது செய்தது.

சுவாமி ஆசிமானந்த் கடந்த இரண்டு நாள்களாக சிபிஐ மற்றும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தப்பித்து வந்தார்.

குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிமானந்த் ஆசிரமம் நடத்தி வருகிறார். நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கும் இந்த ஆசிரமத்தில் வைத்தே திட்டம் தீட்டப்பட்டது என காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தப் பகுதியில் பழங்குடியினருக்காக பள்ளி ஒன்றையும் ஆசிமானந்த் நடத்தி வருகிறார். கிறிஸ்தவ ஆதிவாசிகளை இந்து மதத்திற்கு மாற்றும் பணியையும் இவர் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

காவித் தீவிரவாத நெட்வொர்க்கின் மூளையாகக் கருதப்படும் சுனில் ஜோஷியுடன் ஆசிமானந்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ முன்னாள் அதிகாரி புரோஹித் மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா ஆகியோருடனும் ஆசிமானந்த்துக்கு தொடர்பு உள்ளதாகக் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நன்றி.இநேரம்.காம்

16 நவம்பர், 2010

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்திய மாநில தலைவர் தியாக திருநாள் வாழ்த்துக்கள்

jinna

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் தியாக திருநாள் வாழ்த்துக்கள் தியாகத் திருநாள கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் .

இத்திருநாள் உணர்த்தும் மகத்தான செய்தியான உண்மைக்காக நீதிக்காக சத்தியத்திற்காக சுதந்திரத்திற்க்காக எத்தகைய தியாகத்தையும் அகில உலகத்தையும் படைத்து இரட்சித்து பாதுகாத்து வரும் அல்லாஹ் வின் திருப்பொருத்தத்தை வேண்டி முஸ்லிம்கள் செய்ய முன் வர வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி அனைத்து மக்களின் நல்வாழ்விற்க்காக பாடுபட இந்நாளில் உறுதி ஏற்போம் .

அனைவருக்கும் பாப்புலர் பிரண்ட் டின் சார்பாக இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் இப்படிக்கு மு . முஹம்மது அலி ஜின்னா மாநில தலைவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

நன்றி.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.காம்


ஊழல் மனப்பான்மை ஒழியட்டும், தியாக மனப்பான்மை வளரட்டும் தமுமுக தலைவர் வாழ்த்து

உலகெங்கும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தமுமுக சார்பாக இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறையன்பிற்காக எதையும் தியாகம் செய்யும் மனப்பான்மை எல்லோரும் பெற வேண்டும் என்பது தான் இருபெரும் இஸ்லாமியத் திருநாற்களின் ஒன்றானத் தியாகத்திருநாளின் நோக்கமாகும்.

இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள், ஏக இறைவன் வழங்கிய வாழ்க்கை நெறியை பூமியில் போதித்தார்கள். அதற்காக அளவிலாத் துன்பங்களையும், சோதனைகளையும் சகித்தார்கள். தனது பேரன்பிற்குரிய மகன் இஸ்மாயில் (அலை) அவர்களையும் தியாகம் செய்ய முன்வந்தார்கள்.

இவ்வுலகின் மீதும், செல்வ சுகங்களின் மீதும் மனிதமனம் கொள்கின்ற வரம்பு கடந்தப் பேராசையின் விளைவாகவே குழப்பங்களும், போர்களும், நிம்மதியின்மையும் ஏற்படுகிறது. பொது வாழ்வில் இலட்சோபலட்சம் கோடிகளில் ஊழல் பெருகுவதற்கும் இத்தகைய மனப்பான்மையேக் காரணமாக உள்ளது. தனியுடமை, பொது உடமை ஆகியக் கொள்கைப் போராட்டங்களினிடையே இஸ்லாம் இறையுடமைக் கோட்பாட்டை வலியுறுத்துகிறது.

நம்மிடம் உள்ள செல்வங்கள் அனைத்துக்கும் நாமே முழு உரிமையாளர்கள் அல்ல, உண்மையில் நாம் அதன் அறங்காவலர்களே... எனவே செல்வத்தின் மீது வரம்பு கடந்த பற்று கொள்ளாமல் அவற்றை அறவழியில் செலவிட வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இருபெரும் இஸ்லாமிய பெருநாள்களான ஈகைப் பெருநாளும், தியாகத் திருநாளும் இப்பண்புகளையே நினைவூட்டுகின்றன.

தியாகத் திருநாள் அன்று சுமார் 25 லட்சம் முஸ்லிம்கள் பல்வேறு தேசங்களிலிருந்தும் வந்து மக்காவில் கூடுகின்றனர். இன, மொழி, நிற வெறிகளை மிதித்துப் புதைத்து விட்டு சர்வதேச சகோதரத்துவத்தை அங்கே பறை சாற்றுகின்றனர். வசதியுள்ள முஸ்லிம்கள் குர்பானி இறைச்சியை ஏழை எளியோருக்கு பங்கிட்டு அளித்து இன்புறுகின்றனர்.

கூடி மகிழ்வதும், கொடுத்து மகிழ்வதும் படைத்த இறைவனை வணங்கி மகிழ்வதும், இந்த நன்னாளின் சிறப்புகளாகும்.

தனிவாழ்விலும், பொது வாழ்விலும், ஊழல் மனப்பான்மை ஒழிந்து தியாக மனப்பான்மை பெருகவும், சகோதரத்துவம் வளரவும் இத் தியாகத் திருநாளில் உறுதிகொள்வோம்.

நன்றி.தமுமுக.காம்

ஓர் மரண அறிவிப்பு

நமதூர் சின்னத்தெருவை சேர்ந்த மைனர் தாஜுத்தினுடைய மனைவி ஹபிபுன்னிஷா அவர்கள் இன்று[16.11.10) காலை மரணம் அடைந்து விட்டார்கள்.இன்ன லில்லாஹி வ இன்ன இலிஹி ராஜுவுன் அன்னாரின் மாப்ராத்திர்க்காக துவா செய்வோமாக . மேலும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு வல்ல இறைவன் மன அமைதி தந்து அருள்வானாக

15 நவம்பர், 2010

ஆ.ராசாவின் கடைசி நேர விலகல் காலதாமதமான முடிவு கடும் நடவடிக்கை தேவை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:-

ஒட்டு மொத்த இந்திய தேசத்தையும் ஆ.ராசாவின் ஊழல் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் நாட்டிற்கு 1.77 இலட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய மிகப் பெரிய ஊழலாக அறியப்படுகிறது. ஆ.ராசாவின் ஊழலால் அரசிற்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதை மத்திய தலைமை கணக்காயம் (CAG) தனது அறிக்கையில் உறுதிபடுத்தியிருக்கிறது அனைத்து எதிர் கட்சிகளும் ஆ.ராசா பதவி விலக வேண்டுமென வலியுறுத்திய போதும் ஒட்டுமொத்த ஊடகங்களும் இந்த ஊழலை அம்பலபடுத்திய பிறகும் கடைசிவரை ஆ.ராசா பதவிலேயே ஒட்டிக் கொண்டிருக்க அனைத்து விதமான முயற்சிகளையும், திமுக எடுத்தது வெட்கத்திற்குரியது.



அதிமுக பொதுச் செயலாளா; ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவும் Times Now ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதை அறிவித்ததும் ராசாவை பதவி விலக செய்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

பதவி விலகலோடு பிரச்சனையை முடித்து விடாமல் நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பிற்கு பரிகாரம் காணும் வகையில் மத்திய அரசு விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும் மீண்டும் தொலைதொடா;புத் துறையை திமுகவிடம் வழங்ககூடாது. 2ஜி அலைகற்றை ஒதுக்கீடு ஊழலை சி.பி.ஐ. விரைந்து விசாhpக்க வேண்டும்

2ஜி அலைகற்றை ஒதுக்கீடு வெளிப்படையான ஏல முறையை வேண்டுமென்றே தவிர்த்து முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற முறையை பின்பற்றி நாட்டிற்கு பேரழிப்பை ஏற்படுத்தியுள்ளவர்களை தண்டிக்காமல் விடுவிப்பது ஊழழுக்கு ஊக்கமளிக்கும் தேச விரோத செயலாக மக்களால் பாh;க்கப்படும் என மத்திய அரசு உணரவேண்டும்.

இந்த ஊழல் விசாரணை குறித்து மத்திய அரசு மற்றும் சிபிஐ வழக்குறைஞ்சர்கள் கூட்டத்தில் ஆ.ராசாவின் வழக்குறைஞ்சரும் கலந்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது இது விசாரணையின் நேர்மை மீதும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய தவறுகள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது 2ஜி அலைகற்றை பெற்ற நிறுவனங்கள் அவற்றின் பிண்ணனி மேலும் இதில் லாபம் அடைந்தவர்கள் பற்றிய விவரமான அறிக்கை நாட்டு மக்களுக்கு சமர்பிக்கப்பட வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது.

(எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்)

நன்றி:தமுமுக.காம்

14 நவம்பர், 2010

தியாகத் திருநாள் வாழ்த்து

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அஸ்ஸலாமு அலைக்கும்,

சமுதாய சொந்தங்கள் அனைவருக்கும் அல் ஹைராத் சமுக சேவை மையத்தின் சார்பாக இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்களை மகிழ்வுடன் உளப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறோம்


"(...ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்" (அல்குர்ஆன் 2:197).

13 நவம்பர், 2010

அறிந்ததும் அறியாததும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...



இஸ்லாத்தின் அடிப்படையான சில விஷயங்கள், உலக அதிசயங்கள் சில இங்கே சிறார்களின் அறிதலுக்காக வேண்டி பதிக்கப்படுகிறது.


1. திருக்குரானில் குறிப்பிடப்பட்டுள்ள நபிமார்கள் யார்?

ஆதம், இத்ரிஸ், நூஹ், ஹூத், ஸாலிஹ், இபுராஹிம், லூத், இஸ்மாயில், இஷ்ஹாக், யாஹிப், யூஸுப், அய்யூப், சுஹைப், மூஸா, ஹாரூண், யூனுஸ், தாவூத், சுலைமான், இல்யாஸ், அல்யஸவு, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மத்(ஸல்), துல்கிப்லு ஆகியோர்.

2. இஸ்லாத்தின் வழிகாட்டிகள் எவை?
இஸ்லாத்தின் வழிகாட்டிகள் இரண்டு.

ஒன்று திருக்குர் ஆன். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய திருமறைதான் திருக்குர்ஆன்.

இஸ்லாத்தின் இரண்டாவது வழிகாட்டி, ஹதீஸ். நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், தம்முன் நடந்தவற்றை தடுக்காமல் அங்கீகரித்தது அனைத்துமே 'ஹதீஸ்' என்று அழைக்கப்படுகின்றது. இறைவனின் வழிகாட்டுதலின் பெயரிலேயே ஹதீஸ் அமைந்துள்ளதால், திருக்குர்ஆனோடு, ஹதீஸ்களையும் பின்பற்றி நடப்பது முஸ்லிம்களின் கடமையாகும்.

3. நபிகள் நாயகம் பெயருடன் (ஸல்) என்று இணைத்து எழுதுவது ஏன் தெரியுமா?

நபியவர்களின் பெயரை எழுதும்போது "ஸல்" என்று சேர்த்து எழுதுவது வழக்கம். "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்பதன் சுருக்கமே 'ஸல்' என்பது. "நாயகம் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக" என்பது அதன் பொருள்.

4. நாயகம் தந்தத் திருமணப்பரிசு எது?
தன் மகள் பாத்திமாவின் திருமணத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தத் திருமணப்பரிசு, தண்ணீர் எடுத்து வரும் தோல்பை, ஒரு குவளை, ஈச்சப்பாயால் பின்னப்பட்ட ஒரு கட்டில், இரண்டு தலையணை, வெள்ளி வளையல், ஒரு மாவரைக்கும் திருகை.

5. உலகின் உயரமான பள்ளிவாசல் எது?
மொராக்கோ நாட்டில், காஸாபிளாங்கோ என்ற இடத்தில் 'கிரேமஹசன்' என்னும் மசூதி உள்ளது. உலகில் உள்ள மசூதிகளிலேயே மிகவும் உயரமானது இதுதான். சுமார் 700 கோடி செலவில் கட்டப்பட்டது. மினாராவின் உயரம் 576 அடி. இது 1993-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அநேகமாக இதுதான் உலகின் எட்டாவது அதிசயமாக இருக்கும்.

6. தானாக பக்கங்களைப் புரட்டிக் கொள்ளும் குர்ஆன் எங்கேயுள்ளது?
இது 700 ஆண்டுகளுக்கு முந்தைய குர் ஆன். கை விரல்கள் பட்டதும் தானாக பக்கங்கள் புரளக்கூடிய அளவிற்கு இதை வடிவமைத்து இருக்கிறார்கள். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இந்த நவீன தொழில்நுட்பக் குர்ஆன் வைக்கப்பட்டுள்ளது.

7. மிகச்சிறிய திருக்குர்ஆன் யாரிடமுள்ளது?
குன்னூரில் வசிக்கும் டாக்ஸி டிரைவர் சிராஜுத்தீன் என்பவரிடம் 40 ஆண்டுகளுக்கு முன் தயார் செய்யப்பட்ட மிகச்சிறிய குர் ஆன் உள்ளது. இக் குர்ஆனை சிராஜுதீன் பல வருடங்களாகப் பாதுகாத்து வருகிறார். இதன் உயரம் கால் செ.மீ மீட்டர், அகலம் 2 செ.மீ., நீளம் 2 3/4 செ.மீ. இதில் மொத்தம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 428 எழுத்துக்கள் உள்ளன. 'பே' என்ற அரபு மொழிச்சொல் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 428 முறை உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 86 ஆயிரத்து 430 வார்த்தைகள் உள்ளன. இறைக் கோட்பாடுகள் மட்டும் 6 ஆயிரத்து 666 உள்ளன. இதில் பதிவாகியுள்ள எழுத்துக்களை வாசிக்க லென்ஸ் தேவைப்படும்.

8. அழிவைத் தரும் 7 பாவங்கள் எவை?
1.அல்லாஹ்விற்கு இணை வைப்பது.

2.சூனியம் செய்வது.

3.அல்லாஹ் எந்த உயிரைக் கொலை செய்வதைத் தடுத்து இருக்கிறானோ அந்த உயிரை நியாயமின்றி கொலைசெய்வது.

4.வட்டியை உண்பது.

5.அநாதைகளின் சொத்துக்களை அபகரிப்பது.

6. போர் நடந்துக்கொண்டிருக்கும் தினத்தன்று புறமுதுகு காட்டுதல்.

7.விசுவாசியான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.

9. நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய மூன்று முக்கிய பண்புகள் எவை?
1.தூய்மை, அவர்களின் தூய உள்ளத்தை உலகுக்குக் காட்டியது.
2.எளிமை, அவர்களின் ஏழ்மை வாழ்வை அகிலத்தாருக்கு அறிவித்தது.
3.பொறுமை, எத்தகைய இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும் இனிய முகத்தோடு ஏற்று, ஈடு இணையற்ற இஸ்லாத்தை உலகிற்கு காட்டியது.

இம்மூன்றும் நாயகம்(ஸல்) அவர்களோடு பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தன. அதிலும் பொறுமை அவர்களின் ஒப்பற்ற வாழ்விற்குப் பெரிதும்
அணிகலனாக விளங்கியது.

10. சுவனம் செல்ல தகுதியானவர்கள் யார் தெரியுமா?

1. "எவர் மூன்று பெண் மக்களையோ அல்லது மூன்று சகோதரிகளையோ அல்லது இரண்டு பெண் மக்களையோ வளர்த்து (அறிவையும்)
நல்லொழுக்கத்தையும் கற்பித்து அவர்களுடன் அழகிய முறையில் நடந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனரோ அவர்களுக்கு
சுவனம் உண்டு" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி:அபுஸஈத்(ரலி) ஆதாரம் : திர்மிதீ

2. "பெருமை, மோசம், கடன் ஆகிய இம் மூன்றை விட்டும் எவர் அப்பாற்பட்டு இருக்கும் நிலையில் இறந்து விடுகின்றாரோ அவர்கள் சொர்க்கம் செல்வார்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார். அறி :ஸவ்பான் (ரலி) ஆதாரம் : திர்மிதீ

11. மறுமை நாளில் அல்லாஹ் நோக்காதவர்கள் எவர் தெரியுமா?
"மூன்று விதமான நபர்கள் இருக்கின்றனர். அவர்கள் பக்கம் அல்லாஹ் மறுமை நாளில் நோக்க மாட்டான்" என்று அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.

1. பெற்றோருக்கு மாறு செய்பவன்.
2. ஆண் உடையை அணியும் பெண்.
3. ரோஷமும், சொரணையும் அற்றவன். அறிவிப்பாளர் :இப்னு உமர் (ரலி) ஆதாரம்: நஸாயி.

12. பெண்கள் பின்பற்ற வேண்டிய 8 கடமைகள் எவை?
1. திருக்குர் ஆனில் கூறப்பட்ட அல்லாஹ்வை மட்டுமே வணங்கிக் கொள்ளுங்கள்.
2. அல்லாஹ்வை இணை வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இணை வைப்பதை அல்லாஹ் ஒருக்காலும் மன்னிக்க மாட்டான் என்பதை நினைவு கூருங்கள்.
3. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத புதியதாக ஒன்றை உண்டாக்கப்பட்டால் அது பித்அத் ஆகும். அதனால் அதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
4. ஐந்துநேர தொழுகையை முழுமையாக பேணிக் கொள்ளுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை தவிர்த்து விடாதீர்கள்.
5. ஹிஜாபினைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.
6. பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் அவர்களை நல்ல முறையில் பரிபாலித்து நல்லதைச் செய்யுங்கள். அவர்களுக்குச் சொல்லாலும், செயலாலும் துன்பம் கொடுக்காதீர்கள்.
7. கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களின் கூற்றினைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.
8. அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள்.

13. நரகவாசிகள் யார்?
"தொழுகையை வீணடிப்பவர்களுக்கு நரகம்தான் என்று அல்லாஹ் கூறுகின்றான். உங்களை "ஸகர்" என்னும் நரகத்தில் புகுத்தியது எது? என்று கேட்பார்கள்" (அதற்கு)தொழுபவர்களில்(உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை" என்று அவர்கள் கூறுவார்கள். அல்குர் ஆன் 74;42,43.

எனவே "உங்கள் குழந்தைகள் ஏழு வயது அடைந்துவிட்டால் தொழச் சொல்லுங்கள். பத்து வயது அடைந்ததும் (அவர்கள் தொழாமல் இருந்தால்) அவர்களை அடியுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அம்ருபின் ஷீஐபு(ரலி). ஆதாரம்: அஹமத், அபுதாவூத்.

14. ஆஷுரா நாளின் நன்மைகளில் இன்னும் ஒன்று!
"எவர் ஆஷுரா நாள் அன்று தம் குடும்பத்தாருக்குத் தாராளமாக செலவு செய்கின்றாரோ அவருக்கு இறைவன் அந்த ஆண்டு முழுவதும் அளவின்றி (வருமானம்) அளிக்கிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் (ரலி).

15. திருக்குர் ஆன் படம் பிடுத்துக்காட்டும் மனிதர்களின் தீய குணங்கள் எவை?
1. தற்பெருமை கொள்ளுதல். 2. பிறரை கொடுமை செய்தல். 3. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு அதற்கேற்ப பாவனை செய்தல். 4. பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல். 5. பொய் பேசுதல். 6. கெட்ட சொற்களைப் பேசுதல். 6. நல்லவர்களைப் போல் நடித்தல். 7. புறம் பேசுதல். 8. பாரபட்சமாக நடத்துதல். 9. தகாதவர்களுடன் சேருதல், அவர்களுக்கு ஆதரவு கொடுத்தல். 10. வாக்குறுதியை மீறல். 11. பொய் சாட்சி கூறுதல். 12. பொருத்தமற்றவர்களை புகழ்ந்து பேசுதல். 13. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல். 14. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல். 15. குறை கூறுதல். 16. வதந்தி பரப்புதல். 17. கோள் சொல்லுதல். 18. பொறாமைப்படுதல் 20. பெண்களைத் தீய நோக்குடன் பார்த்தல். 21. கோபப்படுதல்.

தொகுப்பு: சகோதரி. ஆர். நூர்ஜஹான் ரஹிம். (கல்லை)

நன்றி- சத்தியமார்க்கம்.காம்,

11 நவம்பர், 2010

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.
சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி

ஓர் மரண அறிவிப்பு

நமதூர் சின்னத்தெருவை சேர்ந்த அப்துல் காதருடைய மகன் மசூத்(11.11.2010) இன்று மாலை மரணம் அடைந்து விட்டார் இன்ன லில்லாஹி இன்னா இல்லிஹி ராஜுவுன்.என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் மாப்ரத்திர்க்காக துவா செய்வோமாக 'மேலும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல இறைவன் மன அமைதியை தந்து அருள்வானாக''

09 நவம்பர், 2010

கோவையில் 2 குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொன்ற கொலையாளி என்கவுன்டரில் சுட்டுக் கொலை

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
கோவை: கோவையில் பள்ளி குழந்தைகள் முஸ்கான், ரித்திக்கை கடத்தி சென்று கால்வாயில் தள்ளி கொலை செய்த வேன் டிரைவர் மோகன்ராஜ் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணைக்காக வேனில் அழைத்து சென்றபோது, எஸ்.ஐ.க்களை சுட்டுவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் நடத்திய என்கவுன்டரில் மோகன்ராஜ் பலியானார். கோவை ரங்கே கவுடர் வீதியில் துணிக்கடை நடத்தி வருபவர் ரஞ்சித். இவரது மகள் முஸ்கான்(11), மகன் ரித்திக்(8). காந்திபுரம் சுகுணா ரிப்வி மெட்ரிக் பள்ளியில் முஸ்கான் 5ம் வகுப்பும், ரித்திக் 3ம் வகுப்பும் படித்து வந்தனர். தினசரி மாருதி வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். கடந்த 29ம் தேதி (வெள்ளி) காலை டிரைவர் மோகன்ராஜ் வேனில் முஸ்கானையும், ரித்திக்கையும் அழைத்து சென்றார்.

பள்ளிக்கு செல்லாமல், குழந்தைகளின் தந்தை ரஞ்சித்திடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இருவரையும் கடத்தி சென்றார். பொள்ளாச்சி அங்கலகுறிச்சியில் உள்ள தனது நண்பன் மனோகரனையும் அழைத்துக்கொண்டு உடுமலையில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்கால் பகுதிக்கு சென்றனர். ரஞ்சித்துடன் போனில் பேச முயன்றுள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முடிய வில்லை. பின்னர் சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்கால் பாலத்தில் இருந்து முஸ்கானையும், ரித்திக்கையும் வாய்க்காலில் தள்ளி கொலை செய்தனர். வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தைகளின் பாட்டி கமலாபாய் தெரிவித்த தகவலின் அடிப்படையில் டிரைவர் மோகன்ராஜையும், கூட்டாளி மனோகரனையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிரேதப் பரிசோதனையில் சிறுமி முஸ்கான் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மோகன்ராஜையும், மனோகரனையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, கோவை 5வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் நேற்று மனு செய்தனர். 2 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி கோபிநாத் அனுமதி வழங்கினார். 11ம்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து மோகன்ராஜும், மனோகரனும் நேற்று இரவு 7 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரவு முழுவதும் அவர்களிடம் விசாரணை நடந்தது. உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

குழந்தைகள் கொலை செய்யப்பட்ட உடுமலை சர்க்கார்புதூருக்கு 2 பேரையும் அடையாளம் காட்டச் சொல்வதற்காக அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை 5 மணிக்கு மோகன்ராஜ் ஒரு வேனிலும், மனோகரன் ஒரு வேனிலும் அழைத்து செல்லப்பட்டனர். மனோகரன் சென்ற வேன் முதலில் சென்றது. பின்னால் சென்ற வேனில் மோகன்ராஜுடன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்ஐக்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் இருந்தனர். வேனை டிரைவர் ஏட்டு அண்ணாதுரை ஓட்டினார்.
பொள்ளாச்சி ரோட்டில் ஈச்சனாரி ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால், மாற்றுப்பாதையாக வெள்ளலூர் வழியாக அழைத்து சென்றனர். காலை 5.30 மணிக்கு வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகே சென்றபோது, மோகன்ராஜ் திடீரென எஸ்ஐ முத்துமாலை இடுப்பில் வைத்திருந்த ரிவால்வரை சடாரென உருவி, ‘வேனை திருப்புடா’ என டிரைவரிடம் கூறினான். எஸ்ஐ முத்துமாலை துப்பாக்கியை பறிக்க முயன்றபோது அவரை மோகன்ராஜ் துப்பாக்கியால் சுட்டான். அவரது இடுப்பில் குண்டு பாய்ந்தது. தடுத்த எஸ்ஐ ஜோதியையும் சுட்டான். அவருக்கு இடது கையில் குண்டு பாய்ந்தது. இருவரும் மயங்கி கீழே சாய்ந்தனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தனது துப்பாக்கியால் மோகன்ராஜை சுட்டார். இதில் தலையில் கண் அருகே 2 குண்டும், மார்பில் ஒரு குண்டும் பாய்ந்தது. அதே இடத்தில் மோகன்ராஜ் சுருண்டு விழுந்து இறந்தார். உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே வேனில் மோகன்ராஜ் சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. காயமடைந்த எஸ்ஐக்கள் முத்துமாலையும், ஜோதியும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஆபரேஷன் நடந்தது. பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்த மோகன்ராஜ், சுட்டுக் கொல்லப்பட்டது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.