நைப்பியித்தௌ: கடந்த புதன்கிழமை (25/07/2012) மியன்மார் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ "சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிகாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தித் தன்னுடைய கன்னி உரையை நிகழ்த்தினார்.அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
30 ஜூலை, 2012
சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஆங் சான் சூகி
நைப்பியித்தௌ: கடந்த புதன்கிழமை (25/07/2012) மியன்மார் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ "சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிகாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தித் தன்னுடைய கன்னி உரையை நிகழ்த்தினார்.
மியன்மாரின் 'மக்களாட்சிக்கான தேசிய லீக்' கட்சித் தலைவரும், 1991 ஆம் ஆண்டில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான சூகீ, இராணுவ அடக்குமுறை ஆட்சியாளர்களால் சுமார் 15 வருடகாலம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தியாவின் இளம் பஞ்சாயத்து தலைவர் /(வி) அப்சானா
ராஜ்கோட் : இந்தியாவின் இளம் பஞ்சாயத்து தலைவர் எனும் அந்தஸ்தை பெற்றுள்ளார் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாகாணத்திலுள்ள கான்கோட் கிராமத்தை சார்ந்த முஸ்லீம் பெண்ணான அப்சானா படி. இக்கிராமம் வான்கனேரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.28 ஜூலை, 2012
ரமளானும் அல்குர்ஆனும்

( மவ்லவி அல்ஹாஃபிழ் டி.எம். முஜிபுர் ரஹ்மான் சிராஜி � திருப்பூர் )
சங்கை மிகுந்த ரமளான் மாதம் நம்மிடையே வருகை புரிந்துள்ளது. குறைந்த காலத்தில் குறைந்த செயலின் மூலம் அதிகமான நன்மை களை நமக்கு பெற்றுத்தரும் மாதமாகும் இது. இம்மாதம் குறித்து அல்லாஹு தஆலா,
�ரமளான் மாதம் எத்தகையது என்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிருந்தும் சத்தியத்தையும் அசத்தியத்தை யும் பிறித்தறிவிக்க கூடியதிலிருந்தும் தெளிவான விளக்கமாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.�
உங்களது தர்மம் ! ! !
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
அன்புள்ளம் கொண்ட என் சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய அஸ்ஸலாமு அழைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரஃஆத்துஹ்

3:109 وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ
3:109 வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை; எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.
ஸஹீஹுல் புகாரி 4797
27 ஜூலை, 2012
நோன்பா...? பட்டிணியா...?
- அபு ஷம்ஷீர்
எதையும்
உண்ணாமல் இருப்பது
மட்டும் நோன்பல்ல...
கண்டதையும்
எண்ணாமல் இருப்பதே
நோன்பு...
ஏழையின் பசி அறிய
இந்த நோன்பென்றால்...
இம்மாதத்தில், ஏழைகளும்
நோன்பிருக்கும் காரணம் என்ன...?
கடை வீதிகளில் கழியும் கண்ணியமிகு ரமளான்..!
ஹாஜியா S.சான் பேகம்
ஒன்றுக்கு அடுத்தது இரண்டு. இரண்டுக்கு அடுத்தது மூன்று. இது யாருக்குத்தான் தெரியாது.
ஒன்றுக்கு அடுத்தது இரண்டு. இரண்டுக்கு அடுத்தது மூன்று. இது யாருக்குத்தான் தெரியாது.
இது எல்லோருக்கும் தெரியும் என்றால், ரஜப் அடுத்தது ஷஅபான், அடுத்தது ரமளான். இதுவும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதானே. இங்கே மட்டும் தெரியாதது போல ஏன் நடந்து கொள்கிறீர்கள். புரியவில்லையே?
நம்மில் பலர் ஏதோ ரமளான் திடீர் என முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் வந்து விட்டது போல, ரமளானில் நோன்பிருந்து, இபாதத் செய்து, குர்ஆன் ஓத வேண்டிய நேரத்தில் கடை வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறார்களே, அது ஏன்? ஈகைப் பெருநாளைக்கு ரமளான் மாதத்தில்தான் கடைக்குச் சென்று துணிமணிகள் வாங்க வேண்டுமா? பெருநாளைக்குக் குறைந்த பட்சம் ஒரு மாதம் முன்பாகவே துணிமணிகள் வாங்கி விடலாமே. கடைசி நேரத்தில் தான் மக்களைக் கவர பெருநாள் ஸ்பெஷல்னு புதுவகைகள் வரும் என்று சொல்லுகிறார்கள். புதுவகை துணிகள் போடுவதால் அதிக நன்மைகள் கிடைக்குமா?
புனித ரமளானில் தொழுது, ஓதி, துஆ கேட்பதால் அதிக நன்மைகள் கிடைக்குமா? யோசியுங்கள்!
25 ஜூலை, 2012
திருந்த மாட்டீர்களா சகோதரிகளே ???
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்..)
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் இந்த பதிவு..ஃபேஸ்புக் மூலம் நடந்த மற்றொரு பலாத்காரமும், கொலையும்..!
பிரமீளா என்ற இளம் பெண் அவர் வீட்டில் தனியாக இருக்கும் போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்டு கிடந்தார், என்பது தான் அச் செய்தி..போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்த தந்தை தன் மகள் வெளியில் எங்கும் போகாதவள் என்றும் அவளிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் எந்நேரமும் ஃ பேஸ்புக்கில் இருப்பதும் தன்னுடைய ஒவ்வொரு செய்கைகளையும், அதில் பதிவு செய்வது மட்டும் தான் என்பது..
நானா அஸ்மா...
நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.
18-ஆம் நூற்றாண்டு...
இன்று நைஜீரியா என்று அழைக்கப்படும் நிலப்பகுதி அது. மிக பரந்த அந்த நிலப்பரப்பை பல்வேறு ஆட்சியாளர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தான் உஸ்மான் டான் போடியோ. தன்னுடைய சிறிய பகுதியை சிறப்பான முறையில் நிர்வகித்து கொண்டிருந்தார் உஸ்மான். இஸ்லாம் குறித்த அவருடைய தெளிவான பார்வை மக்களுக்கு சிறந்ததொரு நிர்வாகத்தை அளிக்க ஏதுவாய் இருந்தது.
‘ஜகாத்’ செலுத்தாதவர்களின் நிலை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

