
தமிழக முதலமைச்சர் டாக்டர் ஜெயலலிதா அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி மற்றும் ஆம்பூர் தொகுதி ம.ம.க. எம்.எல்.ஏ. அஸ்லம் பாஷா ஆகியோர் சந்தித்து வாழ்த்துக் கூறினர்.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, திருமணப் பதிவுச் சட்டம், உருது மொழி உள்ளிட்ட சமுதாயக் கோரிக்கைகளை முதல்வரிடம் தமுமுக தலைவர்கள் வலியுறுத்தினர்.
மீனவர் பிரச்சினை உள்ளிட்ட இராமநாதபுரம் தொகுதி மக்களின் தேவைகளை இராமநாதபுரம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா முதல்வரிடம் எடுத்துரைத்தார்.
ஆம்பூர் தொகுதிப் பிரச்சினைகளை ஆம்பூர் எம்.எல்.ஏ. அஸ்லம் பாஷா முதல்வரிடம் எடுத்துரைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக