சென்னை, மே 21: மனிதநேய மக்கள் கட்சி சட்டப் பேரவைக் குழுத் தலைவராக பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இக்கட்சி பேரவைத் தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியிட்டு, ராமநாதபுரம் மற்றும் ஆம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றது. ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும் வெற்றி பெற்றனர். கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் கட்சியின் பேரவைக் குழுத் தலைவராக ஜவாஹிருல்லா தேர்வு செய்யப்பட்டார். அஸ்லம் கட்சியின் பேரவைக் குழு செயலாளராகச் செயல்படுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக