சென்னை: மழையால் வீராணம் எரி நிரம்பி வழிகிறது. இதனால் வீராணத்தில் இருந்து வெளியேறும் நீரால் 25 கிராமங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 6000 கன நீர் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தொடர் மழையால் நெய்வேலி நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலக்கரி போதிய கையிருப்பு உள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்படாது என்.எல்.சி. தெரிவித்துள்ளது.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக