#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

26 நவம்பர், 2012

நானுற்றி இருபது (420) ஆண்டு பாரம்பரியத்தை சிதைக்கும் மதவெறி அமைப்புகள்....!!


நானுற்றி இருபது (420) ஆண்டு பாரம்பரியத்தை சிதைக்கும் மதவெறி அமைப்புகள்....!!

60 ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்படம் எடுக்கப்பட்ட சார்மினார். சார்மினார் அருகில் கட்டப்பட்டுள்ள பிரச்சனைக்குரிய சிறிய கோவில். நன்றி : ‘தி இந்து’ (நவ. 21)

-420 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சார்மினாரின் பாரம்பரியத்தை சிதைக்கும் விதமாக அதன் அருகிலேயே இந்துக்கோவில் கட்டப்பட்டிருப்பது குறித்தும், அதனால் ஏற்படும் சர்ச்சை குறித்தும் தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 4 கூம்பு கோபுரங்களை கொண்ட சார்மினார் கட்டுமானத்திற்கு அருகே, மிகச்சிறிய அளவிலான பாக்யலட்சுமி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில், பழமை வாய்ந்தது என்று இந்து அமைப்புகள் கூறினாலும், 60 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட சார்மினாரின் புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, அதில், இந்த பாக்யலட்சுமி கோவில் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்குள் திடீரென முளைத்த இக்கோவிலைச் சுற்றி காவிக் கொடிகள் சார்மினாரின் பாரம்பரியத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. கோவில் நிகழ்ச்சியின் போது, அங்கு போடப்படும் தார்பாலின்பாய் சார்மினார் கட்டிடத்தில் சேர்த்து கட்டப்படுகிறது. இதனால் சமீபத்தில் இது குறித்து சர்ச்சை எழுந்து, பதற்றம் ஏற்பட்டது.இந்தநிலையில், கடந்த 10 நாட்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டன. அந்த வழியே செல்லும் மக்களும் தாக்கப்பட்டதுடன் கடைகளும் நொறுக்கப்பட்டன.

சார்மினார் விவகாரத்தில், ஆந்திராவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என மஜிலிஸ்-எ-இதாதுல்-முஸ்லீமின் (எம் ஐஎம்) கட்சி மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது. சார்மினார் பாரம்பரியம் பாதிக்கப்படக்கூடாது என போராட்டத்தை முன்னின்று நடத்தும் அமைப்பாக எம்ஐஎம் உள்ளது. ஹைதராபாத்தின் பாரம்பரிய கட்டிடம் சிதைக்கப் படுவது குறித்து, எதிர்த்து பேச யாரும் தயாராகாத நிலையில் இந்து அமைப்புகள், அந்த இடத்தை ஆக்கிரமிப்பதில் தீவிரம் காட்டுகின்றன. சார்மினாரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்தியத் தொல்லியல் துறைக்கு உள்ளது. 1951ம் ஆண்டு முதல் இந்த நானூறு ஆண்டு கட்டிடம், தேசிய நினைவுச் சின்னமாக ஆனது. ஹைதராபாத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க இந்திய தொல்லியல் துறை தவறியுள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது.60 ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்படம் எடுக்கப் பட்ட சார்மினார் கோபுர வடிவத்தை பார்க்கும், அந்த கால கட்டத்தில் பயன் படுத்தப்பட்ட கார்கள் சாலையில் ஓடுவதை காண முடிகிறது. அந்த புகைப்பட ஆதாரம் மூலம் சார்மினார் அருகே பாக்ய லட்சுமி கோவில் இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. பழமையான வழிப் பாட்டுத் தலம் என இந்து அமைப்புகள் கூறும் வாதம் நம்பகத்தன்மையை இழந்து விட்டது. மிகச்சிறிய அளவில் வைக்கப்பட்ட பாக்ய லட்சுமி கோவில் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து, தனது கட்டிடப் பகுதியை விரிவுப் படுத்திக் கொண்டிருக்கிறது.இந்தக் கோவிலால், சார் மினாருக்கு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தல் நீடிக்கவே செய்கிறது.

நன்றி தீக்கதிர் நாளிதழ்.












60 ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்படம் எடுக்கப்பட்ட சார்மினார். சார்மினார் அருகில் கட்டப்பட்டுள்ள பிரச்சனைக்குரிய சிறிய கோவில். நன்றி : ‘தி இந்து’ (நவ. 21)

 420 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சார்மினாரின் பாரம்பரியத்தை சிதைக்கும் விதமாக அதன் அருகிலேயே இந்துக்கோவில் கட்டப்பட்டிருப்பது குறித்தும், அதனால் ஏற்படும் சர்ச்சை குறித்தும் தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 4 கூம்பு கோபுரங்களை கொண்ட சார்மினார் கட்டுமானத்திற்கு அருகே, மிகச்சிறிய அளவிலான பாக்யலட்சுமி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில், பழமை வாய்ந்தது என்று இந்து அமைப்புகள் கூறினாலும், 60 ஆண்டுகளுக்கு
முன்னர் எடுக்கப்பட்ட சார்மினாரின் புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, அதில், இந்த பாக்யலட்சுமி கோவில் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்குள் திடீரென முளைத்த இக்கோவிலைச் சுற்றி காவிக் கொடிகள் சார்மினாரின் பாரம்பரியத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. கோவில் நிகழ்ச்சியின் போது, அங்கு போடப்படும் தார்பாலின்பாய் சார்மினார் கட்டிடத்தில் சேர்த்து கட்டப்படுகிறது. இதனால் சமீபத்தில் இது குறித்து சர்ச்சை எழுந்து, பதற்றம் ஏற்பட்டது.இந்தநிலையில், கடந்த 10 நாட்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டன. அந்த வழியே செல்லும் மக்களும் தாக்கப்பட்டதுடன் கடைகளும் நொறுக்கப்பட்டன.

சார்மினார் விவகாரத்தில், ஆந்திராவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என மஜிலிஸ்-எ-இதாதுல்-முஸ்லீமின் (எம் ஐஎம்) கட்சி மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது. சார்மினார் பாரம்பரியம் பாதிக்கப்படக்கூடாது என போராட்டத்தை முன்னின்று நடத்தும் அமைப்பாக எம்ஐஎம் உள்ளது. ஹைதராபாத்தின் பாரம்பரிய கட்டிடம் சிதைக்கப் படுவது குறித்து, எதிர்த்து பேச யாரும் தயாராகாத நிலையில் இந்து அமைப்புகள், அந்த இடத்தை ஆக்கிரமிப்பதில் தீவிரம் காட்டுகின்றன. சார்மினாரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்தியத் தொல்லியல் துறைக்கு உள்ளது. 1951ம் ஆண்டு முதல் இந்த நானூறு ஆண்டு கட்டிடம், தேசிய நினைவுச் சின்னமாக ஆனது. ஹைதராபாத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க இந்திய தொல்லியல் துறை தவறியுள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது.60 ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்படம் எடுக்கப் பட்ட சார்மினார் கோபுர வடிவத்தை பார்க்கும், அந்த கால கட்டத்தில் பயன் படுத்தப்பட்ட கார்கள் சாலையில் ஓடுவதை காண முடிகிறது. அந்த புகைப்பட ஆதாரம் மூலம் சார்மினார் அருகே பாக்ய லட்சுமி கோவில் இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. பழமையான வழிப் பாட்டுத் தலம் என இந்து அமைப்புகள் கூறும் வாதம் நம்பகத்தன்மையை இழந்து விட்டது. மிகச்சிறிய அளவில் வைக்கப்பட்ட பாக்ய லட்சுமி கோவில் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து, தனது கட்டிடப் பகுதியை விரிவுப் படுத்திக் கொண்டிருக்கிறது.இந்தக் கோவிலால், சார் மினாருக்கு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தல் நீடிக்கவே செய்கிறது.

நன்றி தீக்கதிர் நாளிதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக