#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

29 நவம்பர், 2013

28 அக்டோபர், 2013

சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் சபீகுர் ரஹ்மான்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ் ) கொள்ளுமேடு தமுமுகவின் பொதுக்குழு இன்று ம ஃரிப்க்கு பிறகு நடைப்பெற்றது . 
  

சில தினங்களுக்கு முன்பு முகநூலில் கொள்ளுமேடு தமுமுகவின் முக்கிய நிவாகி ஷபிக்குர் ரஹ்மான் தமுமுகவிட்டு விலகி TMJK யில் இணைந்தார் என்று சில சகோதர்களால் முகநூல் வாயிலாக செய்திகள் பரப்பபட்டது அவருக்கு TMJK யில் மாவட்ட துணைச்செயலாளர் பதவி தரப்பட்டு உள்ளது என்று செய்திகள் வந்தது.

16 அக்டோபர், 2013

ஈதுல் அழ்ஹா தியாகப்பெருநாள் வாழ்த்துக்கள்

இன்று 16.10.2013 தியாக திருநாளாம் ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடிகொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் அனைவர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

ஈதுல் அழ்ஹா தியாகப்பெருநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் உங்கள்மீதும் , உங்கள் குடும்பத்தார்கள்மீதும் ஏக இறைவனின் கருணையும் ரஹ்மத்தும் என்றென்றும் பொழிந்துகொண்டிருக்கட்டும் என பி

10 அக்டோபர், 2013

ஓர் வபாத் செய்தி


கொள்ளுமேடு காயிதே மில்லத் தெருவில் இருக்கும் அன்சாரி,பலுல்லா ஆகியோரின் சகோதரர்  முஹம்மது பாரூக் (த/பெ மர்ஹூம் ஹாமிது) அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி  ராஜிஊன்.அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்கு பின்னர் கொள்ளுமேட்டில் நல்லடக்கம் செய்யப் படுகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது குற்றம் குறைகளை மன்னித்து அவருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சொர்கத்தை வழங்குவானாக.அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை தந்தருள்வானாக என கொள்ளுமேடுஹைராத்கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.  

04 அக்டோபர், 2013

ஓர் வபாத் செய்தி



கொள்ளுமேடு கூபா த்தெருவை சேர்ந்த முஹிபுல்லாஹ் அவர்களின் தகப்பனார் அப்துர் ரஹ்மான்  அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை     தந்தருளவேண்டும் என.  கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

17 செப்டம்பர், 2013

கொள்ளுமேடு தமுமுகவின் கிளை பொதுக்குழு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய,அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்)…


‘அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ”அல்லாஹ்”விற்கே புகழ் அனைத்தும்..

அன்பார்ந்த சகோதர்களே !!
அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

கடலூர் மாவட்டம் விராணம் கரையோரம் உள்ள கொள்ளுமேடு தமுமுகவின் கிளை பொதுக்குழு கூட்டம் இன்று 17.09.2013. மிகவும் எழுச்சியுடன் நடைப்பெற்றது.

தமுமுக மாவட்ட பொறுப்பாளர் சகோ.யாசிர் அரபாத் தலைமையிலும், சகோ. ஷபி முன்னிலை வகிக்க ,சகோ.ரியாஸ் இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார் .

10 செப்டம்பர், 2013

முஹம்மத் – யார் இவர்?


From:
www.suvanacholai.com

நேர்மை : 
இவர் ஒரு நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று இவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கூறும் அளவிற்கு நற்பெயர் பெற்றிருந்தார்கள். அரசு கருவூலத்தில் இருந்து ஒரு துண்டு பேரிச்சம்பழத்தை தனது பேரன் வாயில் போட, இறைத்தூதரோ பதறிப்போய், வாயிலிருந்த பேரிச்சம்பழத்தை வலுக்கட்டாயமாக துப்ப வைத்து அரசு பணத்தில் எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல என்று கூறினார்கள்.

கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்?

மதினாவில் தொழுவதற்காக பள்ளிவாசல் தேவைப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்காக இரு இளைஞர்கள் இலவசமாகவே இடம் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் இறைத்தூதரோ இலவசமாக வேண்டாம் என்று கூறி பணம் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்கள்.

அவர் இலவசமாகவே அந்த இடத்தை பெற்றிருக்க முடியும்… செய்தார்களா ?

ஏழ்மை வாழ்க்கை : 
இறைத்தூதர் குடும்பத்தினர் தொடர்ந்து மூன்று நாட்கள் எந்த உணவையும் வயிறார உண்டதில்லை. மற்றவர்கள் பரிதாபம் கொண்டு விருந்துக்கு அழைக்கும் நிலையிலேயே தன் வாழ்நாளை பட்டினியுடன் கழித்துள்ளார்கள். இறைத்தூதரிடம் ஒரு பாய் விரிப்பு மட்டுமே இருந்துள்ளது. அதை பகல் நேரத்தில் படுக்கைக்கு விரிப்பாகவும், இரவு நேரத்தில் வீட்டை மறைக்கும் கதவாகவும் பயன்படுத்தினார்கள். பாயின் மீது எவ்வித விரிப்பும் இல்லாமல் படுப்பதால் அவரது உடலில் பாயின் தடம் பதிந்திருக்கும். சாதாரண தலையனையையே பயன்படுத்தினார்கள்.

 ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஆளக்கூடிய ஆட்சியாளர், மாளிகையில் வாழ்ந்திருக்க முடியும். கருவூல பணத்தில் தன் வாழ்நாளை சுகபோகத்தில் கழித்திருக்க முடியும்… செய்தார்களா?

மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் :
மக்களிடத்தில் எவ்வித மரியாதையையும், தனிப்பட்ட கவனிப்பும், சிறப்பும் பெற அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளரான இறைத்தூதரை காண்பதும், கேள்வி கேட்பதும், பேசுவதும், பழகுவதும், ஒன்றாக உணவு அருந்துவதும் அந்தப்பகுதி மக்களுக்கு பெரிய விஷயமாக இருக்கவே இல்லை.

முன்பு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க தாமதமானதால் கோபம் கொண்டு நபியை ஏசுகிறார் ஒரு யூதர். ஆனால் இவரோ பொறுமையாக கடன் கொடுத்தவருக்கு உரிமை இருக்கிறது. அவரை துன்புறுத்த வேண்டாம் என தன்  தோழர்களுக்கு கட்டளையிடுகிறார்கள். இறைத்தூதர் நினைத்திருந்தால் ஆட்சித்தலைவராக தண்டனை வழங்கியிருக்கலாம்.

அதற்கான அதிகாரமும் இவருக்கு உண்டு. ஆனாலும் செய்தார்களா ?
தனக்கு அன்பளிப்பாக வந்த ஆட்டை வைத்து ஏற்பாடு செய்த விருந்திற்கு பொதுமக்கள் அனைவரையும் அழைத்து மக்களோடு ஒன்றாகவே அமர்ந்து உணவருந்தினார்கள்.

அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் அல்லாஹ்  என்னை ஆக்கவில்லை என்றார்கள். இத்தகைய ஆட்சியாளர்களை கண்டதுண்டா ?

தனக்கு கொடுக்கப்பட்ட பரிசை தானே முழுமையாக அனுபவித்திருக்க முடியும். செய்தார்களா ?

மரியாதை காரணமாக நடுக்கத்துடன் இறைத்தூதரை காண வந்தார் ஒருவர். அதைக்கண்ட தூதர்  அவரிடம், “சாதாரணமாக இருப்பீராக.. சாதாரண குரைஷி குலத்துப்பெண்ணுடைய மகன்தான் நான்” என்று கூறி சகஜ நிலைக்கு அந்த நபரைக்கொண்டு வருகிறார்கள். பள்ளிவாசல் கட்ட கல் சுமப்பதும், அகழ்  வெட்டுவதும் என மக்களோடு மக்களாக தாமும் இணைந்தது செயல்பட்டார் இந்த மாமனிதர்.

தன் ஆட்சிக்குட்பட்ட சாதாரண மக்களின் பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பவராகவும், குடும்பங்களில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் நேராக அவர்கள் வீட்டிற்கே சென்று விசாரிப்பதுமாக மக்களோடு ஒன்றிணைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள் இந்த உத்தம மனிதர் !

அனைவரும் சமமே : 
பள்ளிவாசலை கூட்டி சுத்தம் செய்யக்கூடியவர் எங்கே ? என கேட்க, அப்போது அவர் இறந்த விஷயத்தை சொல்கிறார்கள். இதனை ஏன் எனக்கு முன்பே கூறவில்லை என கடிந்து கொண்டதோடு அந்த சாதாரண வேலையாளின் அடக்க ஸ்தளத்திற்க்குச் சென்று பிரார்த்தனை செய்தார்கள். இறைத்தூதரின் பணியாளர் அனஸ் (ரழி) அவர்களின் பாட்டி இறைத்தூதரை விருந்துக்கு அழைக்க, மறுப்பு சொல்லாமல் அந்த ஏழை வீட்டு விருந்தை ஏற்றுக்கொண்டார் இந்த வல்லரசின் ஆட்சியாளர்.

புகழுக்கு ஆசைப்படாத மாமனிதர் :
ஒரு நபர் இறைத்தூதரை புகழ்ந்து கொண்டிருக்க, அதை நிறுத்தச்செய்து, என்னை வரம்பு மீறி புகழாதீர்கள். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஆவேன் மற்றும் அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதரும் ஆவேன். அல்லாஹ் தந்த  இந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன் என்றார்கள் அந்த அற்புத மனிதர்.

ஹியாரா எனும் பகுதி மக்கள் தன்  தலைவருக்கு சிரம் பணிவதை கண்ட நபித்தோழர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் சிரம் பணிந்திட அதிக தகுதியுடையவர் நீங்கள் தாம் என்றார். அதை மறுக்கும் விதமாக “நான் இறந்த பின் என் அடக்கத்தலத்தில் சிரம் பணிவீரா? என திருப்பிக் கேட்டார் இறைத்தூதர் அவர்கள். அதற்கு அவர் ” இல்லை… அவ்வாறு செய்ய மாட்டேன்”  என்றார்.  ஆம்.. அவ்வாறு செய்யக்கூடாது என்றும், தமக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டுமென யார் விரும்புகிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும் ” என்று கூறினார்கள்.

சலுகை பெறாத உத்தம மனிதர் : 
நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமான தோட்டம் ஒன்று இருந்தது. அத்தோட்டத்தின் உரிமையாளருக்கும் அத்தோட்டம் பிடித்தமானது. ” நீங்கள் விரும்பும் பொருளிலிருந்து செலவு செய்யாதவரை நன்மையை அடைய மாட்டீர்கள் ” என்று திருக்குர்-ஆனின் வசனத்தை குறிப்பிட்டு, அதை நபியவர்களுக்கே பரிசளிக்க, நபியோ அதை ஏற்காமல், உமது உறவினர்களுக்கே அதை வழங்குங்கள் என்று சொன்னார்கள். நபியவர்கள் தனது சொத்துக்கள்அனைத்தையும் பொதுவுடமையாக்கிவிட்டு இறக்கும் தருவாயில் அடமானம் வைக்கப்பட்டிருந்த தனது கேடயத்தை மீட்க வசதியில்லாத நிலையில்தான் இறந்தார்கள்.

பிற மதத்தவர்கள் மீதான அன்பு : 
மரணித்த ஒருவரின் சடலம் அடக்கம் செய்ய எடுத்துச் செல்வதைக்  கண்ட நபியவர்கள் எழுந்து நின்றார்கள். அதைக்கண்ட தோழர்கள் அவர் மாற்று மதத்தவர் என்று சொன்னார்கள். அதற்கு இந்த மாமனிதரோ அதுவும் ஓர் உயிரல்லவா … ? என்று பதிலளித்தார்கள்.

இஸ்லாத்தை ஏற்காத எனது தாய் வந்திருக்கிறார். அவரை நான் என்னுடன் வைத்துக்கொளலாமா? என்று ஒரு பெண் இறைத்தூதரிடம் கேட்டபோது, அவர் உனது தாயல்லவா…? அவரை உம்முடனே வைத்துக்கொள்வீராக !  என்றார்கள்.

எதிரியிடத்திலும் கனிவு : 
தன்னை விருந்துக்கு அழைத்து, இறைச்சியில் விஷத்தை கலந்து கொடுத்த யூதப்பெண்ணை, தான் வேதனையை அனுபவித்தபோதும் மன்னித்தார்கள். போரில் கைப்பற்றப்பட்ட கைபர் பகுதியை தனக்குரியதாக ஆக்கிகொள்ளாமல் அங்கு வசித்த யூத மக்களுகே உரிமை கொடுத்தார்கள்.

போர்க்களத்தில் பெண் இறந்து கிடப்பதைக்கண்ட இறைத்தூதர், பெண்களையும் சிறுவர்களையும், முதியோர்களையும் கொள்ளக்கூடாது என எச்சரித்தார்கள். போரின்போது முகங்களை தாக்ககூடாது, இறந்த உடலை சிதைக்கக்கூடாது, நீள் நிலைகள், நிழல் மற்றும் பயன் தரும் மரங்களை சேதப்படுத்தக்கூடாது என கடுமையான விதிகளை விதித்தார்கள்.

வாழ்வில் ஒவ்வொரு தருணங்களிலும், ஒவ்வொரு செயல்களிலும் எப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் …

அறிவுரைகளோடு மட்டும் நிறுத்தாது தன்னிலிருந்தே நடைமுறைபடுத்தி, தானும் கடைப்பிடித்து, மக்களையும் கடைபிடிக்கச் செய்து நல்வழிப்படுத்தியவர் …

வாய்ப்புகள் நிறைய இருந்தும் சுகபோகத்தில் வாழாத, அதிகாரம் இருந்தும் சலுகைகள் பெறாத,

அரசு சொத்துக்களை தனதாக்கிக் கொள்ளாத,

தனது வாரிசுகள்கூட அரசு பணத்தை அனுபவிக்க விடாத,

தனக்கான சிறப்பான இடத்தை பயன்படுத்தி மக்களை தனக்குக்கீழ் பணிய வைக்காத,

மாற்றுமதத்தவரை மதித்த,

பேதம் கடைபிடிக்காத,

எல்லா வித மக்களையும் சமமாக பாவித்த, எதிரிகளிடத்திலும் நேர்மையை கடைபிடித்த, போர்களத்திலும் விதிமுறைகளை வகுத்த,

தன் வாழ்நாள் முழுவதையும் வறுமையிலேயே கழித்த,

பெண்கள் ஒருபோதும் ஆண்களுக்கு அடிமை அல்ல எனக்கூறி பெண்களை சிறப்பித்த,

அப்பழுக்கற்ற, நற்பண்புகள் பொருந்திய இந்த மாமனிதரை இஸ்லாமிய மக்கள் ஏன் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கின்றார்கள் என்பதை இப்போது உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம் …

நேர்மை : 
இவர் ஒரு நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று இவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கூறும் அளவிற்கு நற்பெயர் பெற்றிருந்தார்கள். அரசு கருவூலத்தில் இருந்து ஒரு துண்டு பேரிச்சம்பழத்தை தனது பேரன் வாயில் போட, இறைத்தூதரோ பதறிப்போய், வாயிலிருந்த பேரிச்சம்பழத்தை வலுக்கட்டாயமாக துப்ப வைத்து அரசு பணத்தில் எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல என்று கூறினார்கள்.

கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்?

01 செப்டம்பர், 2013

கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியாக லால்பேட்டை அரபுக்கல்லுரி முதல்வர் தேர்வு…!














தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தீன் நெறி கோட்டை லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லுரியின் முதல்வர் ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்களை  கடலூர் மாவட்ட தலைமை காஜியாக   தமிழக அரசு அறிவித்துள்ளது.

 லால்பேட்டைக்கும், மன்பவுல் அன்வாருக்கும் மேலும் பெருமை

30 ஆகஸ்ட், 2013

"ஒவ்வொரு துளி மதுவும் விஷமே..



"மது மதியை மட்டுமின்றி மனிதனையும், மனிதநேயத்தையும் ,இழைக்க செய்யும் " பணத்தையும் மட்டுமின்றி பண்பையும் ,பணிவையும் ,இழைக்க செய்யும் " உலகத்தையும் மட்டுமின்றி உண்மையும் ,உடமையும் இழைக்க செய்யும் " உடலையும் மட்டுமின்றி உறவுகளையும் , உயிரையும் இழைக்க செய்யும் " விழித்து கொள் தோழா விலையில்லா உயிர்களை காப்போம் " வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்வதற்கு மட்டுமே மண்ணில் வீழ்வதற்க்கில்லை

"ஒவ்வொரு துளி மதுவும் விஷமே.. உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்துக்கும் ..உங்கள் எதிரே வருபவர்களுக்கும்தான்"...

21 ஆகஸ்ட், 2013

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் தானமும் இஸ்லாமியர்களின் மதஉணர்வும்...!!!



பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தை ஒட்டி அவர் உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பது என்ற அவரின் குடும்பத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் நடந்து கொண்ட விதம், மிகுந்த மரியாதைக்குரியது.

18 ஆகஸ்ட், 2013

டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் மறைந்தார்.





இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இந்து வைதீக குடும்பத்தில் பிறந்து, நாத்திகக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பௌத்தம் தழுவி பின்னர் தூய இஸ்லாத்தினை வாழ்க்கை நெறியாக ஏற்று முஸ்லிமான நாளிலிருந்து உடல் நலம் நன்றாக இருக்கும் வரை அயராமல், தளராமல் இறைமார்க்கம் இஸ்லாத்தின் பால் அழைத்தவர்.

இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயாக !
இவரது பிழைகளை பொறுத்து சுகமளிப்பாயாக !
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக !
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக !
பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக !

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக !
வல்ல ரஹ்மான் அவரது மண்ணறையை ஒளிமயமாக்கி வைப்பானாக.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை     தந்தருளவேண்டும் என.  கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

01 ஆகஸ்ட், 2013

இசுலாமில் வட்டி ஏன் தடுக்கப்பட்டது?



பொருளாதாரக் காரணங்கள்

1. வட்டித் தொழிலில் கடன் வாங்கியவன் இலாபமடைந்தாலும் நட்டமடைந்தாலும், கடன் கொடுத்தவன் ஒரு குறிப்பிட்ட இலாபத்திற்கு உரியவனாகிறான். ஆனால், வியாபாரம் அல்லது கைத்தொழில் அல்லது வேளாண்மை போன்ற விவகாரங்களில், வாங்குவோனுக்கும் விற்பவனுக்குமிடையில் சமமான இலாபம் இருக்கிறது.

அல்லாவின் திருப்பெயர்கள்

அல்லாவின் திருப்பெயர்கள்


அல்லாஹ் ஒருவனே அவனுக்கு இணை இல்லை. துணை இல்லை. பெற்றோர் இல்லை. பிள்ளைகள் இல்லை. தனியானவன். தன்னிலே நிலையானவன். அனைத்துப் படைப்புகளும் அவன் ஆதரவில் நிலை பெற்றிருக்கின்றன. அவன் சர்வ வல்லமை பெற்றவன். உள்ளும் புறமும் உள்ள அனைத்தையும் அறிபவன். உருவம் இல்லாதவன். ஐயறிவுகளால் அறிய முடியாதவன். உள்ளத்தில் அமையாதவன். மிகுந்த கருணையுள்ளவன். தாயினும் மிக்க அன்புள்ளவன். அவனை நம்புவோரையும், நம்பாதோரையும் உணவு கொடுத்துப் பாதுகாப்பவன். அவன் நீதிமான். ஆகையால், இவ்வுலகில் நற்செயல் செய்வோருக்கு அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு மறு உலகில் நல்ல சன்மானம் அளிக்கின்றான். தீமை செய்தோரைத் தண்டிக்கின்றான். அவன் மிகுந்த இரக்கமுள்ளவன். ஆகையால், பாவம் செய்தோர் அதற்காக வருத்தமடைந்து அவனிடம் மன்னிப்பு கேட்டால் அவன் பாவங்களை மன்னிப்பான்.

30 ஜூன், 2013

கொள்ளுமேடு தமுமுகவின் மாணவர் அணி பொதுக்குழு

30.06.2013இன்று   கொள்ளுமேடு தமுமுகவின் மாணவர் அணி பொதுக்குழு நடைப்பெற்றது. ஜூலை 6 சம்மந்தமாக கலந்தாய்வு செய்யப்பட்டது  மாணவர் அணினர் பெரும்திரளாக கலந்துக்கொண்டனர். கோரிக்கை பேரணியில் மாணவ அணி சார்பாக அதிகயளவில் கலர்ந்துக்கொள்ளவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
 

29 ஜூன், 2013

மலர இருக்கும் கொள்ளுமேடு .காமை வாழ்த்துகிறேன்

அன்புடையோர்; அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

நமதுருக்கு (கொள்ளுமேடு) சொந்தமாகவும்,பொதுவானதாகவும் ஒரு இணையதளம் அமையவில்லையே என்ற ஏக்கத்தை   வருகிற 01.07.2013 அன்று துவங்க இருக்கும் கொள்ளுமேடு .காம் என்ற இணையதளம் துவங்க இருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

 சமுதாய  மீது ஆர்வம் உள்ள எந்த ஒரு படைப்பாளிக்கும் ,தானும் ஏதாவது எழுதி தனது கட்டுரை பத்திரிகையிலோ ,இணையத்தளத்திலோ

28 ஜூன், 2013

சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

1. அநாதையைப் பொறுப்பேற்றல்:
"அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி).

சகோதரியே!

 
நமக்கு நாணம் வேண்டும்.
நாணம் தான் 
நம் பெண்மையின் அடையாளம்!
அந்த நாணமே..
நம் ஈமானின் கவசமும் கூட..!
(அ)நாகரீக வளர்ச்சியில்..
மற்றவர்களைப் போல நீயும் போதை கொண்டால்.....
அது 

19 ஏப்ரல், 2013

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?


ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,


அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்


பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ....

Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு'ல ன்னு சும்மா இருக்காம... setting correct'ah பண்ணுங்க...

நண்பர்களிடமும் share பண்ணுங்க...










நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் 
பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி 
என்று பார்க்கலாம் .

...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து 
Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

18 ஏப்ரல், 2013

அன்பார்த்த கொள்ளுமேடு சகோதர்களே நமதூரில் அமைதியும்,ஒற்றுமையும் எங்கே சென்றது ?


அன்பிற்கினிய கொள்ளுமேடு சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ் 

இந்த கடிதம் இஸ்லாமிய சிந்தனையோடும், பொதுநலத்தோடும், நடுநிலை சிந்தனையோடும் உங்கள் அனைவரையும் சந்திக்கட்டுமாக.

அன்பு சகோதரர்களே!

இந்தச் சமுதாயம் கருத்துவேறுபாடுகள் நிறைந்த சமுதாயமாகும். முஸ்லிம்களுக்கிடையிலான இந்த கருத்து வேறுபாடுகள் கியாமத் நாள்வரை இருக்கக்கூடியது! அனைவரும் ஒருமித்தக் கருத்தையுடைய சமுதாயமாக மாறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதன்று! எனவே எனது கருத்துக்கு ஒருவர் மாறுபட்டிருக்கின்றார் என்பதற்காக அவர் ஏக இறைவனை மட்டுமே வழிபடும் முஸ்லிமாக இருந்தும் அவரை கேவலமாக விமர்சிப்பது என்பது ஒரு உண்மையான முஃமினுக்கு உரிய பண்பாக இருக்கமுடியாது! ‘ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுடைய கண்ணியத்தைக் களங்கப்படுத்துவது ஹராமாகும்’ என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் எக்கணமும் மறந்துவிடக்கூடாது.

28 மார்ச், 2013

வியக்க வைக்கும் மனிதர் !

வியக்க வைக்கும் மனிதர் !தனது அழகிய பிரசாரத்தால் 1,08,000 பேரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்த முன்னாள் ஹிந்து பெரியவர் !

Meet The Ex-Hindu Who Converted 108,000 People To Islam

http://muslimvillage.com/2013/02/12/35423/meet-the-ex-hindu-who-converted-108000-people-to-islam/


நன்றி : muslimvillage.com

25 மார்ச், 2013

உங்க தொகுதி எம்.எல்.ஏவின் இ.மெயில் முகவரி இது தான்!

நெல்லை: தொகுதி தொடர்பான புகார்களோ, நலத்திட்ட உதவி கோரிய மனுவோ உங்கள் தொகுதி எம்.எல்.ஏக்களிடம் கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம். 

ஒரே ஒரு மெயில் தட்டி விடுங்கள். அப்புறம் பாருங்கள் அவர்களின் சுறுசுறுப்பான நடவடிக்கையை. பேப்பரில் எழுதி கொடுக்கப்படும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ. இப்போது எம்.எல்.ஏக்கள் லேப் டாப் சகிதம் இருப்பதால் கண்டிப்பாக இ.மெயில் பார்த்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறுகின்றனர். 

தமிழக அரசு இ.மெயில் முகவரி

02 மார்ச், 2013

உம்ரா செய்வது எப்படி? (உம்ரா கையேடு)

அளவற்ற அருளாளன்... நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
umra guide

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல் குர்ஆன் 2 : 196) அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். (அல் குர்ஆன் 3 : 96, 97)


head
ஹஜ், உம்ராவின் அவசியத்தையும் சிறப்புகளையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். பணம் மற்றும் உடலால் நாம் செய்யும் தியாகம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் இப்புனித வழிபாட்டை குர்ஆன் மற்றும் நபி வழி முறைப்படி நிறைவேற்ற வேண்டும். எனவே ஹஜ், உம்ராவின் முறைகளை எளிதாகவும் சுருக்கமாகவும் இதில் கூறியுள்ளோம். இதனைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். அல்லாஹ் நம் அனைத்து வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வானாக!

உம்ரா செய்யும் முறை:-

எல்லையிலிருந்து இஹ்ராம் அணிந்து கொள்ளவேண்டும்.
தவாஃப் செய்ய வேண்டும்.
ஸயீ செய்ய வேண்டும்.
மொட்டையடிக்க வேண்டும்.
பெண்கள் ஆண் துணை அதாவது மஹ்ரம் (மணமுடிக்க விலக்கப்பட்டவர்கள்) இல்லாமல் ஹஜ், உம்ரா செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

இஹ்ராம் அணியும் முறை:-


white-dress

இஹ்ராம் அணிவதற்கென எல்லைகள் உள்ளன. அந்த இடம் வந்தவுடன் குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும்.


விமானத்தில் வருபவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும்.

ஆண்களுக்கு இஹ்ராமுடைய ஆடை, தைக்கப்படாத இரு வெள்ளை துணிகள் ஆகும். அதில் ஒன்றை வேட்டியைப்போல் உடுத்திக்கொள்வது, மற்றொன்றை மேனியில் போர்த்திக்கொள்வது.



இஹ்ராமின்போது பெண்கள் தாம் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். ஆனால் உடலை சரியாக மறைக்காமலோ, அழகை வெளிக்காட்டும் விதமாகவோ இருக்கக்கூடாது. மேலும் முகத்தையும் முன்னங்கைகளையும் மறைக்கக் கூடாது.

தல்பிய்யா:-
எல்லை வந்ததும் உம்ராச் செய்பவர், லப்பைக்க உம்ரதன் arabic1  என்று நிய்யத் சொல்லி உம்ராவை துவக்கிவிட்டு தல்பிய்யாவை தொடர்ந்து கூறவேண்டும்.
arabic2

லப்பைக், அல்லாஹ§ம்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க் லாஷரீக லக்.
பொருள் : உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். அல்லாஹ்! உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். இணை துணையற்ற உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். நிச்சயமாக புகழனைத்தும் உனக்கே உரித்தாகும்! மேலும் அருட்கொடையும், அரசாட்சியும் உன்னுடையதே! உனக்கு எவ்வித இணை துணையில்லை.
தல்பியாவை இஹ்ராம் அணிந்ததிலிருந்து கஃபாவிற்குள் நுழையும் வரை சொல்ல வேண்டும். ஆண்கள் தல்பியாவை சத்தமாகவும், பெண்கள் மெதுவாகவும் கூறவேண்டும். இஹ்ராமின் எல்லைக்கு உட்பகுதியில் இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும்.

இஹ்ராம் அணிந்துள்ளவர் செய்யக் கூடாதவைகள்:-
  • திருமண ஒப்பந்தம் மற்றும் அது சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபடுவது.
  • மனைவியுடன் கூடுவது. (உடலுறவு கொள்வது).
  • வேட்டையாடுவது.
  • உடலுக்கோ, ஆடைக்கோ நறுமணம் பூசுவது.
  • தலையில் படக்கூடிய தொப்பி, தலைப்பாகை போன்றவற்றைக் கொண்டு தலையை மறைப்பது.
  • முடி, நகம் வெட்டுவது.
  • கெட்டவார்த்தைகள், வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.
  • தைக்கப்பட்ட ஆடை மற்றும் காலுறை அணிவது.

கஃபத்துல்லாவை அடைந்தவுடன்...
arabic3

பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் அல்லாஹீம்மஃப்தஹ் லீ அபுவாப ரஹ்மதிக

என்று கூறிய பின்பு தவாஃப் செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஆரம்பிக்கும் முன் தோளில் உள்ள துண்டை வலப்புற அக்குளின் கீழாக விட்டு இடப்புற தோள் மேலாக விட வேண்டும். வலதுபுற தோள் புஜம் திறந்தும், இடப்புற தோள் புஜம் மூடியும் இருக்க வேண்டும்.

தவாஃப் செய்யும் முறை:-
கஃபாவை ஏழு முறை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். கஃபாவில் ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல்லிலிருந்தோ அல்லது அதற்கு நேராக நின்றோ சுற்ற ஆரம்பித்து மீண்டும் அதனை வந்தடைவது ஒரு சுற்றாகும்.
arabic4பிஸ்மில்லாஹி அல்லாஹ§அக்பர் என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் (வாய்ப்பு இருந்தால்) ஹஜ்ருல் அஸ்வத் கல்லைjahrul aswathமுத்தமிடவேண்டும். முடியவில்லையெனில் அதனை நோக்கி வலது கையை உயர்த்தி அல்லாஹ§ அக்பர் என்று கூறவேண்டும். ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடாவிட்டால் தவாஃபில் எந்தக் குறையும் ஏற்படாது. எனவே ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதற்காக போட்டிபோட்டு பிறருக்குத் துன்பம் தரலாகாது.

முதல் மூன்று சுற்றுக்களில் நடையை நெருக்கமாக வைத்து தோள்களை உலுக்கி (விரைவான நடை போன்று) செல்லவேண்டும். (முதல் மூன்று சுற்றுகள் முடிந்ததும் விரும்பினால் தோள்களை மறைத்துக்கொள்ளலாம்) ஏனைய நான்கு சுற்றுக்களை சாதாரணமாக நடந்து செல்லவேண்டும். தவாஃபின் போது நமக்கு தெரிந்த திக்ர், துஆ மற்றும் நம் தேவைகளை
கேட்டு வரலாம். குர்ஆனை ஓதிக்கொண்டும் வரலாம். ஆனால் ருக்னுல் யமானி மற்றும் ஹஜ்ரத் அஸ்வத் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில்...
arabic5

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரத்தி வஹஸனதன் வகினா அதாபன்னார்

பொருள் : 'எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்ற துஆவை மட்டும் ஓத வேண்டும்.இவ்வாறாக ஏறு சுற்றுக்களை முடித்துக்கொண்டு எட்டாவது முறையும் ஹஜ்ரத் அஸ்வத்தை முத்தமிட முடிந்தால் முத்தமிட்டுவிட்டு, முடியாவிட்டால்
arabic6வத்தஃகிதூ மிம்மகாமி இப்றாஹீம முஸல்லாஹ்

என்று ஓதியவாறு மகாமே இப்ராஹீமிற்கு நேர் பின்னே நின்று தொழ வேண்டும். அதாவது நமக்கும் கஃபத்துல்லாவிற்கும் இடையில் மகாமே இப்ராஹீம் இருக்குமாறு தொழ வே
mahamu ibrahimண்டும். இந்த முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல் யாஅய்யுஹல் காபிரூன் -அத்தியாயம் 109 ஐயும், இரண்டாவது ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல்ஹ§வல்லாஹ§ அஹது
(இஃக்லாஸ்) அத்தியாயம் 112 ஐயும் ஓத வேண்டும்.

ஸூரத்துல் காபிரூன்

sura1

ஸூரத்துல் இஃக்லாஸ்
sura2

இவ்வாறாக தொழுகையை முடித்துக்கொண்டு ஸம் ஸம் தண்ணீரை அருந்த வேண்டும். இதன் பின்னர் ஸயீ (தொங்கோட்டம்) செய்வதற்காக ஸஃபா வாயில் வழியாக உள்ளே பிரவேசிக்க வேண்டும்.

ஸஃபா வாயில் வழியாக பிரவேசிக்கும்போது...
arabic7

இன்னஸ்ஸஃபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்

பொருள் : ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்.
என்ற மறைவசனத்தை ஓதிவிட்டு ஸஃபாவின் மீது கொஞ்சம் உயர்ந்து கிப்லாவை முன்நோக்கி அல்லாஹ்வை ஒருமைபடுத்தி
arabic8

அல்லாஹ§ அக்பர் - அல்லாஹ§ அக்பர் - அல்லாஹ§ அக்பர்
arabic9

லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹ§ லாஷரிகலஹ§ லஹ§ல் முல்கு வலஹ§ல் ஹம்து வஹ§வ அலா குல்லி ஷையின் கதீர், லாயிலாஹ
இல்லல்லாஹ§ வஹ்தஹ§, அன்ஜ(ண)ஸ வஃதஹ், வனஸர அப்தஹ், வஹஜமல் அஹ்(ண)ஸாப வஹ்தஹ்

என்ற திக்ரை ஓத வேண்டும். பின்பு இரு கைகளையும் உயர்த்தி இயன்ற அளவு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இவ்வாறு மும்முறை செய்ய வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேலே பச்சை நிற விளக்குகளை அடைகின்ற போது ஆண்கள் விரைந்து செல்ல வேண்டும். யாருக்கும் சிரமத்தை ஏற்படுத்த கூடாது.
அடுத்த பச்சை நிற விளக்குகளை அடைந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். மர்வாவை அடைந்தவுடன் சற்று உயர்ந்து நின்று கஃபாவை முன்னோக்கி இரு கைகளையும் ஏந்தி லாயிலாஹ... என்ற முன்னர் ஓதிய துஆவை மும்முறை ஓதிவிட்டு ஸஃபாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைந்து செல்ல வேண்டும். அடுத்த பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். இவ்வாறாக ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடிவது ஒரு சுற்று, மர்வாவில் ஆரம்பித்து ஸஃபாவில் முடிவது இரண்டாவது சுற்று, இவ்வாறாக ஏழாவது சுற்று மர்வாவில் முடிவடையும். ஸஃபா, மர்வா அனைத்து சுற்றுக்களிலும் நமக்கு விருப்பமான துஆக்களை கேட்கவேண்டும். திருமறை வசனங்களையும் ஓதலாம்.
shabatomarwa
marwatoshaba

ஸயீயை முடித்துக் கொண்ட பின் ஆண்கள் மொட்டையிட்டுக் கொண்டும், பெண்கள் தங்கள் தலைமுடியிலிருந்து ஒரு அங்குலம் அளவிற்கு குறைத்து கொண்டும் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.
(இஹ்ராமிலிருந்து விடுபட) மொட்டையிட்டுக் கொண்டவருக்கு மும்முறை பரக்கத் வேண்டி நபி (ஸல்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள். மொட்டையிடாமல் முடியை குறைத்து hair-removeகொண்டவருக்கு ஒரு முறை மட்டுமே துஆ செய்துள்ளார்கள். எனவே ஆண்கள் மொட்டையிட்டு இஹ்ராமிலிருந்து விடுபடுவதே சிறந்ததாகும்.
இத்துடன் உங்கள் உம்ரா இனிதே நிறைவு பெறுகிறது (இன்ஷா அல்லாஹ்)

26 பிப்ரவரி, 2013

உம்ரா செய்வது எப்படி ?


'ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
'ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஆவார்கள். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: நஸயி, இப்னுமாஜா)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்களும் இன்னும் பல ஹதீஸ்களும் உம்ராவின் சிறப்புகளைக் கூறுகின்றன.
இன்று உம்ரா செல்லக்கூடியவர்கள் அதிகரித்துள்ளனர், ஆனால் உம்ராவிற்கான வழிகாட்டுதல்கள் தனியாகத் தொகுக்கப்படாமல் ஹஜ்ஜுடன் சேர்த்து கூறப்பட்டடிருப்பது புதிதாக உம்ராச் செல்லக் கூடியவர்களுக்கு சிரமமாக இருக்கிறது. இக்குறையை நீக்குவதற்காக இங்கு உம்ராச் செய்வதற்கான வழிகாட்டுதல் சுருக்கமாகத் தரப்படுகிறது.

1. இஹ்ராம் :

மீக்காத் எனும் எல்லையை அடைந்ததும் குளித்து விட்டு இஹ்ராம் உடையை அணிந்து கொள்ள வேண்டும். (மீக்காத்திலிருந்து கஃபாவை தவாஃப் செய்ய ஆரம்பிக்கும் வரை வலது தோளைத் திறந்த வைத்துக் கொள்வது நபிவழிக்கு மாற்றமானது.)
பர்ளுத் தொழுகையின் நேரமாக இருந்தால் அதனைத் தொழுதுவிட்டு அல்லது உளூவுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துக்களைத் தொழுது விட்டு உம்ராவுக்கு நிய்யத் வைக்க வேண்டும். (இஹ்ராமிற்கென்று பிரத்தியேகமான எந்தத் தொழுகைக்கும் நபிவழியில் ஆதாரம் இல்லை.)
உம்ராச் செய்வதாக மனதால் நினைப்பதே நிய்யத் எனப்படும். அவ்வாறு நினைத்து விட்டு لَبَّيْكَ اَللهُمَّ عُمْرَةً (லப்பைக அல்லாஹும்ம உம்ரதன்) என்றோ اَللهُمَّ لَبَّيْكَ عُمْرَةً (அல்லாஹும்ம லப்பைக உம்ரதன்) என்றோ கூற வேண்டும்.

2. உம்ராவுக்கு நிய்யத் வைத்ததிலிருந்து கஃபதுல்லாஹ்வைச் சென்றடையும் வரை தல்பியாவைத் திரும்பத் திரும்பச் செல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் சத்தத்தை உயர்த்தியும் பெண்கள் மெதுவாகவும் தல்பியாவைச் சொல்ல வேண்டும். தல்பியா வாசகங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ
(அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்நிஃமத லக வல் முல்க், லாஷரீக லக்.)

3. தவாஃப் செய்தல்:

மஸ்ஜிதுல் ஹராமை அடைந்ததும் வுழூச் செய்து விட்டு கஃபதுல்லாஹ்வை நோக்கிச் செல்ல வேண்டும். தனது வலது தோளைத் திறந்தவராக ஹஜருல் அஸ்வதின் பக்கம் சென்று, அதனைத் தனது வலது கையினால் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூற வேண்டும். முடிந்தால் அக்கல்லை முத்தமிடலாம். முடியாவிட்டால் கல்லைக் கையினால் தொட்டு கையை முத்தமிட வேண்டும். அதற்கும் முடியவில்லையென்றால் அதனை முன்னோக்கி அல்லாஹுஅக்பர் என்று கூறி தனது வலது கையால் அதன்பால் சுட்டிக்காட்ட வேண்டும். அப்போது கையை முத்தமிடக் கூடாது.

அவ்விடத்திலிருந்து தவாiஃப ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வதிலிருந்து ஆரம்பித்து மீண்டும் ஹஜருல் அஸ்வதை வந்தடைவது ஒரு சுற்றாக கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.

ஒவ்வொரு சுற்றின் ஆரம்பத்திலும் முடிந்தால் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது அல்லது அதனைத் தொட்டு கையை முத்தமிடுவது அல்லது அதனை நோக்கிக் கையைக் காட்டுவது நபிவழியாகும்.

ஆரம்ப மூன்று சுற்றுக்களிலும் தொங்கோட்டமாகவும், ஏனைய நான்கிலும் சாதாரணமாகவும் செல்ல வேண்டும்.

தவாஃபின் போது (ஹஜருல் அஸ்வதிற்கு முன்னாலுள்ள) ருக்னுல் யமானி என்ற மூலையை அடைந்தால் பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூறி அதனைத் தொட வேண்டும். கையை முத்தமிடக் கூடாது. தொட முடியாவிட்டால் அதற்குக் கையைக் காட்டக் கூடாது.

ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வதை அடையும் வரை,
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار
'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' என்று கூற வேண்டும்.
(பொருள்: எங்கள் இரட்சகா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!) இது அல்லாமல் தவாஃபின் போது ஒதுவதற்கென்று எந்த துஆக்களும் ஹதீஸ்களில் வர வில்லை. எனவே தான் விரும்பிய துஆக்களைத் தனக்குத் தெரிந்த மொழிகளில் கேட்கலாம். அல்குர்ஆன் ஓதலாம். மேலும் திக்ருகள் செய்யலாம்.

தவாஃப் செய்து முடிந்ததும் வலது தோளை மூடிக் கொள்ளலாம்.

4. தவாஃப் செய்து முடிந்தால்...?:

தவாஃப் செய்து முடிந்ததும் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். முதலாவது ரக்அத்தில் சூரத்தல் ஃபாத்திஹாவுடன் குல் யா அய்யுஹல் காபிரூன் சூராவையும், இரண்டாவது ரக்அத்தில் சூரதுல் ஃபாத்திஹாவுடன் குல் ஹுவல்லாஹு அஹத் சூராவையும் ஓத வேண்டும்.

இந்த தொழுகையை மாகமு இப்ராஹீமிற்குப் பின்னால் நின்று தொழுவது சிறந்தது. முடியாவிட்டால் பள்ளியின் எந்த இடத்திலும் தொழலாம்.

தொழுது முடிந்ததும் ஸம்ஸம் தண்ணீரை அதிகமாகக் குடிப்பது சுன்னத்.

5. ஸயீ செய்வது:

தவாஃப் செய்து, தொழுது முடிந்தால் ஸயீ செய்வதற்காக ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும்.
ஸஃபாவை நெருங்கும் போது,
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِر الله فَمَنْ حَجَّ الْبَيْتَ أَو اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَّطَّوَّفَ بِهِمَا، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ الله شَاكِرٌ عَلِيْمٌ
'இன்னஸ் ஸஃபா வல்மாவத மின் ஷஆயிரில்லாஹ், ஃபமன் ஹஜ்ஜல் பைத அவிஃதமர ஃபலா ஜுனாஹ அலைஹி அய்யத்தவ்வஃப பிஹிமா, வமன் ததவ்வஅ கைரன் ஃபஇன்னல்லாஹ ஷாகிருன் அலீம்'. (2:158) என்று ஓத வேண்டும்.

பின்னர் கஃபாவைக் காணுமளவுக்கு ஸஃபாவில் ஏறி பின்வருமாறு ஓத வேண்டும்.
لآ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ
'லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யி வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஇலாஹ இல்லல்லாஹுவஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'. பிறகு கையை உயர்த்தி தனக்கு விருப்பமான துஆக்களை (விரும்பிய மொழியில்) கேட்க வேண்டும். துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரைக் கூறிவிட்டு மீண்டும் கைகளை உயர்த்தி துஆச் செய்ய வேண்டும். இரண்டாவது முறை துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரை ஓதிவிட்டு மாவாவை நோக்கிச் செல்ல வேண்டும்.

பச்சை அடையாளம் இடப்பட்ட தூண்களுக்கு இடையில் ஆண்கள் தொங்கோட்டமாகச் செல்ல வேண்டும். (பெண்கள் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.)

மர்வாவை அடைந்ததும் அதில் ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபாவில் செய்தது போன்று (திக்ரு, துஆ) செய்ய வேண்டும்.

ஸஃபாவிலிருந்து மாவாவுக்குச் செல்வது ஒரு சுற்றாகும். மர்வாவிலிருந்து மீண்டும் ஸஃபாவுக்கு வருவது இரண்டாவது சுற்றாகக் கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஏழாவது சுற்று மர்வாவில் முடியும்.

ஸஃபா, மர்வாவில் ஓதுவதற்கென்று ஏற்கனவே கூறப்பட்ட திக்ருகளைத் தவிர ஸயீயில் ஓதுவதற்கென்று குறிப்பாக ஏதும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட வில்லை. எனவே தவாiஃபப் போன்று குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், துஆச் செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.

ஸயீ செய்வதற்கு வுழு அவசியமில்லை.

6. ஸயீ முடிந்ததும்:

ஸயீ முடிந்ததும் தலை முடியை முற்றாக மழிக்க வேண்டும், அல்லது கத்தரிக்க வேண்டும்.
கத்தரியால் சில முடிகளை மட்டும் வெட்டுவது மிகப் பெரிய தவறாகும்.

இத்துடன் உம்ரா நிறைவு பெறுகிறது.



உங்களது உம்ராவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!
‎'


ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
'ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஆவார்கள். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: நஸயி, இப்னுமாஜா)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்களும் இன்னும் பல ஹதீஸ்களும் உம்ராவின் சிறப்புகளைக் கூறுகின்றன.

அல்லாஹ் என்றால் யாருங்க?



(அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்)

அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்

  • நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை வணங்கா விட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும், அவனுக்கு இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும், அவனை வெறுத்தாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா?

அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம்


child%2Bwith%2Bmother.jpg
அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது. பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.

மதுவினால் வீழும் என் தேசம்…

En Desam En Makkal Diseases Liquor Addiction மது அரக்கன் பிடியில் சிக்கி எத்தனையோ இளைய தலைமுறையினர் இன்றைக்கு மண்ணோடு மண்ணாகி வருகின்றனர்.

 எத்தனையோ குடும்பங்கள் அவமானத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். பள்ளிச் சிறுவர்கள் முதல் 80 வயதாகும் தாத்தாக்கள் வரை டாஸ்மாக் கடைகளில் மதுவிற்காக கையேந்தும் நிலை இன்றைக்கு தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. 

04 பிப்ரவரி, 2013

கோவையில் சமுதாய எழுச்சி! “மக்கள் வாழ்வுரிமை மாநாடு”



massமுஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்திதரவேண்டும், இந்தியளவில் இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடுத்து நிறுத்த வேண்டும், தடையில்லா மின்சாரம்வழங்க வேண்டும், என ஐம்பெரும் கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாவட்ட மாநகர மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் மக்கள் வாழ்வுரிமை மாநாடு மாநகர மாவட்ட தலைவர் சகோ.கபீர் தலைமையில் பிப்ரவரி – 03 அன்று நடைபெற்றது.

ஓர் வபாத் செய்தி

திருவாரூர் மாவட்ட பூதமங்கலத்தை  சேர்ந்த  துபாய் பாச்சி கம்பனியில் பணிப்புரியும்  பாருக்கின் மனைவி  மும்தாஜ் அவர்கள் இன்று தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை     தந்தருளவேண்டும் என.  கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

25 ஜனவரி, 2013

அமெரிக்கா அடிமைத்தனத்தில் விஸ்வரூபமாய் கமல்.



 அடிமைகள் எப்போதுமே நல்லப் பெயர் எடுக்க கூடுதலாக ஏதாவது செய்ய நினைப்பார்கள். கூடுதல் விசுவாசம் காட்ட நினைப்பார்கள். அவ்வகையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் அதே வேளையில் அமெரிக்கர்களுக்கு அவர் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் அடிமை குணத்தின் உச்சம். ஒரு காட்சியில் அமெரிக்க இராணுவம் ஹெலிகப்டரில் இருந்தபடி தாலிபான் படையினரைச் சுடும். அதில் ஒரு குண்டு ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அமெரிக்க இராணுவ வீரன் மனம் நொந்து வருந்துவான். தாலிபான் படைக்கு பயிற்சியாளராக வரும் கமல், வீட்டில் இருக்கும் படை தலைவனின் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பான். அதற்கு தாலிபான் தலைவன் சொல்வானே ஒரு பதில்… “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்.”

18 ஜனவரி, 2013

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்


                                   பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
                              கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
                                                 அன்புச் சகோதர சகோதரிகளே!

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!
நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

புதுச்சேரி விமான நிலையம் தொடக்க விழா


AIRPORT6
புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளுக்குமுன்பே விமானநிலையம் அடிக்க நாட்டப்பட்டு கட்டுமானப்பணி மிகவும் மந்தமாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் புதுச்சேரி விமானநிலைய பணிகளை விரைவாக முடித்து உடனடியாக விமான போக்குவரத்து தொடங்கவேண்டும் என்ற பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.