#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

28 பிப்ரவரி, 2011

கொள்ளுமேட்டில் தமுமுக& மமக மாவட்ட பொதுகுழு''

 தமுமுக& மமக கடலுர் மாவட்ட (தெற்கு) பொதுகுழு கொள்ளுமேடு            முஸ்லிம் உயர் நிலை பள்ளியின் மைதானத்தில் 20/02/2011 அன்று நடைப்பெற்றது. தமுமுக மாநில துனை.செயளாலர் s.m  ஜின்னா அவர்களின் தலைமையிலும் மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்த்தின் .மா.செயளாலர்.அமானுல்லாஹ்,அரபாத்.இவர்களின் முனிலையில்.சிறப்பாக நடைப்பெற்றது.மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதியில் களப்பணி ஆட்டுவது என முடிவு செய்யப்பட்டது.மேலும் அதிமுக &மமக கூட்டணிக்கு மாவட்டமுழுவதிலும் களப்பணி ஆட்டவேண்டும் என முடிவு செயப்பட்டது.மாவட்ட முழுவதிலிருந்து பொதுக்குழு உற்பினர்கள் பெரும்திரளாக
கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்










27 பிப்ரவரி, 2011

சாதனை படைத்த "காயிதே மில்லத்" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்


 

 இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.
அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.

234 தொகுதிகளிலும் அதிமுக.,கூட்டணி பெறும் : தமுமுக பொது செயலாளர் பேட்டி

புளியங்குடி : "அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்' என தமுமுக மாநில பொது செயலாளர் ஹைதர்அலி தெரிவித்தார்.

புளியங்குடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தமுமுக மாநில பொது செயலாளர் ஹைதர்அலி முன்னதாக நிருபர்களுக்கு அளித்த பேட்டடியில் கூறியதாவது: - தமிழகத்தில் திமுக ஆட்சியில் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. மாநிலம் முழுவதும் உள்ள ஆற்றுப்படுகைகளில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வருகிறது. மேலும் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க இந்திய கம்யூ., கட்சியின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் நல்லகண்ணு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதிமுக ஆட்சியில் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

ஓர் வஃபாத் செய்தி

நமதூர் தெற்கு தெருவில் இருக்கும் பக்கிர்ஷா யாஸின் இவர்களின் தாயார் கதிஜா அவர்கள் இன்று (25.02.2011 ) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு அல்ஹைராத்

இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.






26 பிப்ரவரி, 2011

கோவையில் மனித நேய மக்கள் கட்சியினர் சாலை மறியல்!

 
மனித நேய மக்கள் கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தி வருகிறது.

பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி மாநாடுகள் வாகன பேரணிகள் மேலும் குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மதுக்கடை மறியலில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.


தற்போது கட்சியின் கோவை மாநகர சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரியும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கோவை செல்வபுரம்தெற்கு, கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதி, உக்கடம் பஸ் நிலையம், போத்தனூர் ஆட்டுத்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை (25-02-2011) அன்று மாலை 4 மணிக்கு கோவை செல்வபுரம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை த மு மு க, மற்றும் ம ம க, கட்சியினர் அதுபோல் அருகில் உள்ள பள்ளிகூட ஆசிரியர்கள், மாணவர்கள்,அந்த பகுதி அனைத்து சமூக பொது மக்கள் ஆகியோர்கள் முற்றுகையிட்டார்கள். ஒரு மணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே காவல் துறை உயர் அதிகாரிகள், மாவட்ட துனை ஆட்சியாளர், மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு வந்து பேச்சுவார்த்தை முலம் வருகிற 6ம் தேதி அந்த டாஸ்மாக் கடையை முழுமையாக அகற்றிகிறோம் என்று வாக்கு உறுதி அளித்தார்கள். பின்னா மறியல் செய்த அனைவரையும் கைது செய்தனர் காவல் துறை பிறகு மாலை 8 மணிக்கு விடுதலை செய்தினர். இந்த மறியல் போராட்டத்திற்க்கு த மு மு க. மாவட்ட தலைவர் பர்கத் அலி தலைமையில் நடந்தது. இதில் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், பொருளாளர் அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, அப்பாஸ், சுலைமான், ஜாபர் சாதிக், ரபிக், உள்பட பெண்கள் கலந்து கொண்டார்கள்.
 

25 பிப்ரவரி, 2011

தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது : மனிதநேய மக்கள் கட்சி

மார்த்தாண்டம் : தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் வந்தார். இரவிபுதூர்கடையில் நிருபர்களிடம் கூறியதாவது: மனிதநேய மக்கள் கட்சி 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த பார்லி., தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 15 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறோம். அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்று விஜயகாந்த் கூறி வருகிறார். இதனால் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வருவதை நாங்கள் வரவேற்கிறோம்.

மனிதநேய மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். எங்கள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட உள்ளோம். 1991க்கு பிறகு சிறுபான்மை கட்சிக்கு மூன்று இடம் ஒதுக்கப்படுவது இது தான் முதல் முறை ஆகும்.

அரசியலை சேவையாகவே நாங்கள் கருதுகிறோம். இதனால் வேட்பாளர் செலவை கட்சியே ஏற்றுக்கொள்ளும். தேர்தல் செலவுகள் தனிநபரை சார்ந்து இருக்காது. தமிழகத்தில் எங்கள் இயக்கம் சார்பில் 96 ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி ஏற்பட்ட போது மீட்பு பணியில் எங்கள் பங்கு முக்கியமானதாக இருந்தது.

தி.மு.க., அரசு பல்வேறு துறைகளில் தோல்வி அடைந்துள்ளது. போலீஸ் துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தி.மு.க., நிர்வாகிகள் தலையீடு அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை சதாரண மக்களையும் பாதித்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை, கடத்தல் அதிகரித்துள்ளது. கலைஞர் ஆட்சி மன்னர் ஆட்சி என்று சொன்னாலும் மிகையாகாது.

தொழிற்துறை, டி.வி., சினிமா துறைகளில் முதல்வர் குடும்பத்தின் தலையீடு அதிகரித்து விட்டது. சாதாரண மக்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு நடந்த பிறகும் அதை நியாயப்படுத்துகிறார்கள். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.

அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும். இதற்காக நாங்கள் அயராது பாடுபடுவோம். தி.மு.க., ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தாலும் வெளி மாநிலங்களுக்கு அரிசி கடத்துவது தொடர்கிறது. சிறுபான்மை பள்ளிகளுக்கு 1990ம் ஆண்டு பிறகு மானியம் வழங்கப்படவில்லை. இதற்கு நாங்கள் குரல் கொடுப்போம்.

இலங்கை அரசு தமிழக மீனவர்களை சுட்டு கொன்றுள்ளது. இதற்கு இந்திய அரசு ராணுவ நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மத்திய அரசும், தி.மு.க., அரசும் தமிழக மீனவர் பிரச்னையில் தோல்வி அடைந்துள்ளது. இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் கூறினார்.

பேட்டியின் போது மாநில துணை பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, த.மு.மு.க., மாநில துணைச்செயலாளர் கோவை சாதிக், காதர்மைதீன், மாவட்ட செயலாளர் முகம்மது சபிக், மாவட்ட தலைவர் பீர்முகம்மது, மாவட்ட செயலாளர் செய்யதுஅலி ஆகியோர் உடனிருந்தனர்

நன்றி,தினமலர்

வட்டியின் தீமைகள்

இன்று நம் சமுதாய மக்களிடையே புரையோடிப் போயிருக்கும் பெரும்பாவங்களில், தீமைகளில் வட்டியும் ஒன்று. நம்மில் சிலருக்கு வட்டி மட்டுமே குடும்ப வருவாயாக இருக்கும் அளவுக்கு வட்டியை சாதாரண ஒன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதம் தவறாமல் வரும் வட்டிப்பணத்தில் குடும்பம் நடத்துபவர்களிடம் இப்படி வட்டிப்பணத்தில் சாப்பிடுகிறீர்களே இது பாவம் இல்லையா? என்று நாம் கேட்போமேயானால், ‘நாங்கள் செய்த எங்களுடைய முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்தைத் தான் சாப்பிடுகின்றோம்’ என்று கூறி வட்டியையும், வியாபாரத்தையும் ஒன்றாக ஆக்குகின்றனர். வட்டி வாங்குவது பெரும் பாவம் என்றால் இவ்வாறு அவர்கள் அவ்வாறு கூறியது அதைவிட மிகப்பெரும் பாவமாகும். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று கூறுபவர்களை அல்லாஹ் கடுமையாக குர்ஆனிலே எச்சரிக்கின்றான்.
“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்” (அல் குஆன் 2:275)
மறுமையில் சித்தம் கலங்கிய நிலையில் எழுப்ப வைக்கும் அளவிற்கு மிகக் கொடிய பாவமாகிய வட்டியை வாங்கி அதையே தம் வருமானமாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் கூறுவது என்னவென்றால், நாங்கள் செய்த முதலீடு, வட்டியின் மூலம் பெறுகிக் கொண்டே செல்கின்றது, அதனால் எங்களுக்கு தொடர்ந்து இலாபம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்கின்றனர்.
அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்.
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.” (அல்குஆன் 2:276)
அல்லாஹ்வினால் பரக்கத் கிடைக்காத மலையளவு பொற்குவியலே இருந்தும் என்ன பயன்? வட்டியின் மூலம் பார்ப்பதற்கு (செல்வங்கள்) அதிகரிப்பது போலத் தோன்றினாலும் முடிவில் மிகக்குறைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வின் பரக்கத்தையுடைய செல்வம் சிறிதளவு இருந்தாலும் அதன் மூலம் அபிவிருத்தியும், நிறைய பலன்களும் கிடைக்கும் அல்லவா? மேலும் வட்டி வாங்குவதை வருமானமாக, தொழிலாகக் கொண்டிருப்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் என்றும், அவர்களுடைய அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய அறிவிப்பின் மூலமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
“வட்டியினால் திரட்டப்படும் பொருளையும், அவ்வாறு பொருள் திரட்டுபவனையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். எனவே அப்பொருளின் அபிவிருத்தியைத் தடுத்து அதனை அழித்து விடுகிறான். அவ்வாறே அத்தொழில் புரிவோரின் தர்மத்தையும், ஹஜ்ஜையும், இதர நன்மைகளையும் அவன் ஏற்பதில்லை” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் வட்டியில் சம்பத்தப்பட்ட அத்தனை பேர்களையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்: -
“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.
வட்டி வாங்குவதை ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக கூறிய நபி (ஸல்) அவர்கள் வட்டியின் தீமைகளைப் பற்றி விளக்கிக் கூறும்போது,
வட்டியின் மூலம் கிடைத்த ஒரு திர்ஹம் முப்பத்தி ஆறு விபச்சாரத்தை விட அல்லாஹ்விடம் மிகக் கொடுமையானது என்றும், ஒருவனுடைய மாமிசம், (அல்லாஹ்வால்) தடுக்கப்பட்ட ஒன்றின் (வட்டியின்) மூலம் வளர்ச்சியடைந்தால் அதற்கு நரகமே மிக ஏற்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : தப்ரானி
இரட்டிப்பாகும் என்று நினைத்து வட்டி வாங்காதீர்கள்:-
அல்லாஹ் கூறுகிறான்:-
“ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்” (அல்குஆன் 3:130)
மற்றவர்களின் முதலீடுகளுடன் சேர்த்து வட்டிக்கு விடாதீர்கள்:-
“(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்” (அல்குஆன் 30:39)
எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள்:-
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்” அல்குஆன் 2:278)
இறைவனின் வட்டியைப் பற்றிய தெளிவான “யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்” என்ற இறைவனின் வசனத்தை (2:275) பற்றி நாம் அனைவரும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
அல்லாஹ் முஸ்லிமான நம்மனைவரின் ஈமானையும் உறதிபடுத்தி, இத்தகைய கொடுமையான பாவத்திலிருந்து மீளச்செய்து மீண்டும் வட்டியின் திமைகளில் சிக்காமல் காப்பாற்ற வேண்டும் என பிராத்திப்போம். வல்ல நாயனான அல்லாஹ் அருள் புரிய போதுமானவன். ஆமின்.

24 பிப்ரவரி, 2011

கருணாநிதி அரசின் முஸ்லிம் விரோத போக்கு!!!

 
சென்னை,பிப்.23: கோவை வெடிக்குண்டு நாடக நாயகன் ரத்தின சபாபதிக்கு அரசு பதவி, உயர்வு அளித்தது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி பின்வருமாறு: 'கடந்த 22.06.2007அன்று கோவையை தகர்க்க சதி என தமிழகத்தையே பீதிக்குள்ளாக்கியவர் ரத்தின சபாபதி. இவர் அப்போதைய உளவுத்துறை உதவி ஆணையாளராக பதவி வகித்தவர். சில பொருள்களை கைப்பற்றியதாகக் கூறி சில முஸ்லிம் இளைஞர்களையும் கைதுச் செய்து அவர்கள் மனித நீதிப் பாசறையைச் சார்ந்தவர்கள் என்று அறிக்கையும் விடுத்தார்.


இவ்வழக்கில் உள்ள போலித் தன்மையை உணர்ந்துக் கொண்ட பொதுமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோரிடையே எழுந்த நீதிக்கான குரல்கள் எழுந்தன. இதன் விளைவாக அரசு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஆர்.பாலன் அவர்களுடைய தலைமையில் சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்த உத்தரவிட்டது.


சுமார் ஒருவருடமாக இவ்வழக்கை விசாரித்த எஸ்.ஐ.டி கடந்த 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், "இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட வெடிக்குண்டுகள் காவல் துறையினராலேயே பொய்யாக புனையப்பட்டு இவ்வழக்கில் சேர்க்கப்பட்டவை. மேலும் இவ்வழக்கின் ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு புனையப்பட்டுள்ளன. எனவே இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கூறி இவ்வழக்கை முடிக்கின்றோம்" என எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.


ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் அரசு ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக அவருக்கு கோவை மாநகரிலேயே காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இத்தகைய அரசின் கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும், ரத்தினசபாபதி மீது வழக்குப்பதிவுச் செய்து தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், பொய்வழக்கு புனையப்பட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், பிரச்சாரங்கள், கையெழுத்து இயக்கங்களின் வாயிலாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்தின சபாபதி மீது வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையிலும், ரத்தின சபாபதிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி அளிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கை தெளிவாக உணர்த்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரையிலும், அரசின் இந்த கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து மக்களை திரட்டி போராடும்.' என அவர் தெரிவித்துள்ளார்.


சிந்திக்கவும்; இது போல்தான் கோவை கலவரத்திற்கு காரணமாக அமைத்த போலீஸ் கயவர்களுக்கு பதவி உயர்வு அளித்து மகிழ்ந்தார் இந்த கருணாநிதி. கோவையில் ட்ராபிக் போலீஸ்காரர் விசமிகளால் கொல்லபட்டார். இதில் சம்மந்த பட்டவர்கள் மேல் வழக்கு தொடுக்காமல் போலீஸ் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளோடு கூட்டு சேர்ந்து திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது கலவரத்தை நடத்தி 19 முஸ்லிம்கள் கொல்லபட்டார்கள். இதற்க்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு கருணாநிதி பதக்கம் அணிவித்து பதவி உயர்வு கொடுத்தார். இந்த கருணாநிதி எம்.ஜி.ஆர். இடம் தொடர்ந்து 14 வருடங்கள் தோற்று வனவாசம் இருந்த பொது முஸ்லிம் ஒட்டு வங்கி இல்லை என்றால் இவரது கட்சியே இருந்திருக்காது. இந்த காலகட்டத்தில் முஸ்லிம்களின் 99 சதவிதம் ஓட்டை பெற்றே இவர் தமிழகத்தில் கட்சி நடத்தினார். அப்போது முழுக்க திராவிட சிந்தனை உள்ளவர் போல் காட்டி கொண்டு முஸ்லிம்கள் வாக்குகளை பெற்றார். என்று ஆட்சிக்கு வந்தாரோ அதோடு தோளில் மஞ்சள் துண்டு ஏறிவிட்டது. அதில் இருந்து இதுவரை நோன்பு கஞ்சி குடித்து தொப்பி போட்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருகிறார்.


அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

மோடி தலைமையில் இந்தியாவில் மனுதர்ம ஆட்சி!!

 
கொலை செய்தல், கொலை செய்யத் தூண்டுதல், கலவரம் செய்தல் இபிகோ 147, 153 (ஏ), 153(பி), 295 (ஏ), 505, 102 (பி)) இந்தப் பிரிவுகளின் கீழ்குற்றம் சாட்டப்பட்டவர்களை நினைவில் இருக்கிறதா? சாதாரண மானவர்களா அவர்கள்? இந்தியாவின் உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்கள் ஆயிற்றே! மத்திய தணிக்கைத் துறை அறிக்கை கொடுத்துவிட்டது, அறிக்கை கொடுத்து விட்டது என்று இன்று அலறுகிறார்களே, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அறிவிக்காவிட்டால் நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்று முஷ்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி இருக்கிறார்களே அவர்கள் ஒன்றை சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கிறார்கள்.

லிபரான் ஆணையத்தின் அறிக்கையை ஜமக்காளம் போட்டு மறைக்கப் பார்க்கிறார்கள். 68 பேர்கள் குற்றவாளிகள் என்று லிபரான் ஆணையம் பட்டியல் போட்டுக் கொடுத்து விட்டது.
மிகப் பெரிய மனிதராகத் தூக்கிக் காட்டப்படும் அடல் பிஹாரி வாஜ் பேயும் அந்தப் பட்டியலில் அடங்குவார். எப்படி வாஜ்பேயியை இதில் சேர்க்கலாம் என்று காட்டுக் கூச்சல் போடுகிறார்கள்.

சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு வாஜ்பேயியை எப்படி குற்றவாளி என்று கூறலாம் என்று கேட்பது எந்த ஊர் நியாயம் என்றே விளங்க வில்லை. 19 ஆண்டுகளாக குற்றவாளிகள் ராஜ நடை போட்டுத் திரிகிறார்கள். அரசு நியமித்த ஆணையமும் அவர்கள் குற்றப் புரிந்தவர்கள்தாம் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டது. ஆ. இராசாமீது வழக்கைப் பதிவு செய்து வேகவேகமாக வழக்கை நடத்தும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உலக நாடுகள் முன் இந்தியாவை தலைகுனிய வைத்த பாபர் மசூதியை இடித்தவர்கள் மீதான வழக்கை வேகமாக நடத்த முன் வராதது ஏன்?

19 வருடங்களா ஒரு முக்கியமான வழக்குக்குத் தேவைப்படும்? நீதிமன்றங்கள்தான் ஆகட்டும் மற்ற மற்ற வழக்குகளை விரைவாக நடத்திட வேண்டும் என்று சாட்டையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்களே. இதில் மட்டும் ஏன் பாம்பும் நோகாமல் கொம்பும் நோகாமல் மந்திரித்துக் கொண்டு இருக்கிறார்களாம்? கொலை குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் கொஞ்சம் கூட வெட்கமின்றி ஆனை நடைபோட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். சாட்சியங்கள் எல்லாம் பிறழ்சாட்சியங்களாக ஆகிக் கொண்டு இருக்கின்றன.

நீதிமன்றங்களுக்கு வராமல் வெளியில் ஆட்டம் போட்டுத் திரிகிறார்கள். இந்த வழக்கு விசாரணையை வேகப்படுத்தச் சொல்லி எந்த நீதிமன்றமும் சாட்டையை எடுத்துக் கொண்டு புறப்பட வில்லையே, ஏன்? காலம் கடத்த கடத்த அத்தனை சாட்சிகளும் அந்தர் பல்டி அடிக்கும் நிலைதான்! அதுவரை காவல்துறையும், நீதித்துறையும் காவி வேட்டி சங்கராச் சாரியார்களை விட்டு வைக்கும் என்றே நம்பலாம்.

சங்கரராமன் கொலை மட்டும் தானா? ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டது, திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்டது, காஞ்சிபுரம் சங்கராச்சாரியாருக்குச் சொந்தமான பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவியின் மர்ம மரணம், 1994-இல் சங்கர மடத்தில் வேதம் பயின்று வந்த 15 வயது மாணவன் நாக சுப்பிரமணியம் பிணமாகக் குளத்தில் மிதந்தது, ஜெயேந்திரர் சென்றால் தங்கும் இடமான சூர்யலட்சுமி காட்டன் மில் ஓய்வு விடுதியில் ஜெயேந்திரர் தங்கி இருந்தபோது (18.3.1998) அந்த மில்லில் பணியாற்றிய நிர்மலம்மா (வயது 18) தம்மம்மா (வயது 16) ஆகியோர் கொலை என்று ஒரு பட்டியலே உண்டு. சங்கர மடம் சம்பந்தப்பட்டது என்பதால் வழக்கையும் தண்ணீரில் மூழ்கடித்து விடக் கூடாது.

பாபர் மசூதி காவிக் கும்பலால் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையில் பால்தாக்கரே தலைமையில் வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலை மையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சிவசேனா தலைவர் பால்தாக்கரேமீது பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியது. அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் வற்புறுத்தியிருந்தது. அவர்மீது ஒரு துரும்பையாவது அரசு தூக்கி எறிந்ததுண்டா? மாநிலத்தை ஆண்டு வந்த சிவசேனா, பா.ஜ.க. அரசு 1371 வழக்குகளை ஊற்றி மூடியது. 112 வழக்குகளை மட்டுமே சிறப்புக் குழு மறு ஆய்வு செய்தது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிலுவையில் இருக்கும் வழக்குகளையாவது நாணயமாக நடத்தியிருக்க வேண்டாமா? சிவசேனா தலைவர் என்றால் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? ஊருக்கு இளைத்தவர் ஆ. இராசா மட்டும்தானா? 2002-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் மீது நரேந்திர மோடி தலைமையில் மாநில அரசு நரவேட்டையாடியதே! உச்சநீதிமன்றமே முதல் அமைச்சர் மோடியை நீரோ மன்னன் என்று சாடி யதே! குஜராத் கலவரம் குறித்த விசா ரணை, அவருக்கு எதிராக இருக்கிறதே! அவர் எப்படி முதல் அமைச்சராகத் தொடருகிறார்?
தெகல்கா ஏடு கொலைகாரர்களைக் கூட, பேட்டியளித்து வெளிச்சத்தில் வாரி இறைத்ததே ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை?

டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார், புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்த திராய் போன்றவர்கள் மோடியின் மீதும், நிருவாகத்தினர் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக சொன்னார்களே, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மத்திய அரசின் செயல்பாடுதான் என்ன? ஆ.கே. இராகவன் தலைமையிலான மோடி மீதான சிறப்பு விசாரணைக்குழு மோடியின் முகமூடியைக் கிழிந்து எறிந்து விட்டது. பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டன. சோ ஒரு வரிகூட இதைப்பற்றி எழுதாதது ஏன்?

அரைகுறையாக விசாரணை அறிக்கையிலிருந்து கிடைத்திட்ட தகவல்களை வைத்துக் கொண்டு அத்வானி என்ன சொன்னார் தெரியுமா? வெகு நீண்ட காலத்திற்குப் பிறகு நான் படித்த மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்று ஆனந்தமய மாகிக் குதித்தாரே! ஆனால் உண்மையோ வேறு விதமாக இருக்கிறது. சிறப்பு விசாரணைக் குழுவில் இடம் பெற்ற மோடிக்கு எதிரான தகவல்களை பெரும்பாலும் ஊடகங்கள் வெளியிடாத நிலையில் தெகல்கா இதழ் மட்டும் உண்மையான தகவல்களை வாரிக் கொண்டு வந்து கொட்டிவிட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழு உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்டது. அது 600 பக்கங்களையும் கொண்ட ஓர் அறிக்கையை உச்சநீதி மன்றத்தில் அளித்துள்ளது. கலவர காலத்தில் காவல்துறையின் கம்பியில்லாத் தந்தி போக்குவரத்துப் பற்றிய ஆவணங்களை மோடி அரசு முற்றிலுமாக அழித்து விட்டது. கலவரங்களின் போது சட்டம் ஒழுங்குபற்றி நடத்தப்பட்ட முக்கியமான கூட்டங்கள் பற்றி எந்த ஓர் ஆவணமும், குறிப்புகளும் கிடையாது (அறிக்கை பக்கம் 13)

ஏன் ஆவணங்களை அழித்தார்கள்? அந்த ஆவணங்கள் கிடைக்கப் பெற்றால் மோடி அரசு எப்படி எப்படி யெல்லாம் முஸ்லிம்களை வேட்டையாடியது, அவர்கள் தொழில் நிறுவனங் களையெல்லாம் தீயிட்டு எரித்தனர் என்ற விவரங்கள் தெரிந்து விடுமே. கலவரங்களுக்கு ஒத்துழைத்த அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகளும், சட்டப்படி, நடுநிலையோடு நடந்து கொண்ட கண்ணியமான அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் அற்ற துறைகளும், தண்டனைகளும் கொடுக்கப்பட்டன என்றால்? மோடி அரசின் மோசகரமான, மூர்க்கத்தமான நர வேட்டை எப்படி நடந்திருக்கும் என்று எளிதில் தெரிந்து கொள்ள முடியுமே! கலவரங்களின் போது காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்களுக்கு இடம் ஏன்? அசோக்பட் மற்றும் ஜடஜா ஆகிய இரு அமைச்சர்கள்தான் அவர்கள்.

எந்தவித குறிப்பிட்ட செயல் திட்டமும் இன்றியே இந்த இரு அமைச்சர்களும் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப்பட்டனர். காவல்துறையின் பணியில் குறுக்கிட்டு, அலுவலகங்களுக்கு தவறான முடிவுகளை, கட்டளைகளை அளிக்கவே அமைச்சர்கள் காவல்துறைக் கட்டுப் பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப்பட்டனர். (சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரின் குறிப்பு பக்கம் 12). இதற்குப்பின்னாலும் குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சி தொடருவதற்குக் கிஞ்சிற்றும் நியாயப்படியான சட்டப்படியான தகுதி இருக்கிறதா? இந்த ஆட்சி ஏன் கலைக்கப்பட வில்லை? இந்த முதல்வர்மீது ஏன் சட்டப்படியான நடவடிக்கை இல்லை? இராசாதான் இளக்காரமா? நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது? மனுதர்மம் நடக்கிறதா? என்ற கேள்வி மக்கள் மன்றத்தில் கிளர்ந்து எழ வேண்டாமா? சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!


நன்றி : மின்சாரம், விடுதலை நாளிதழ் (19-02-2011)

23 பிப்ரவரி, 2011

அறிமுகமாகிறது 150 ரூபாய் நாணயம்

புதுடில்லி: நம்நாட்டில் வரிதிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, 150 ஆண்டுகள் ஆனதையொட்டி, 150 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. சர்வதேச நடைமுறைக்கேற்ப, நம்நாட்டில், 1860 முதல், வரிதிட்டம் செயல்படுத்தப்பட்டு, 150 ஆண்டுகள் ஆகிறது. இதை நினைவு கூறும் வகையில், மத்திய அரசு, 150 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது. வரும் 28ம் தேதி பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு முன், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த நாணயத்தை வெளியிடுகிறார். வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு, 150 ஆண்டுகள் ஆவதையொட்டி, ஐந்து ரூபாய் நாணயமும் வெளியிடப்படுகிறது. இந்திய வரலாற்றில், 150 ரூபாய் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. புதிய, 150 ரூபாய் நாணயத்தில், சத்தியமேவ ஜெயதே என்ற வாசகமும், சாணக்கியரின் உருவமும், தாமரையை மொய்க்கும் தேனியும் இடம் பெற்றிருக்கும். வெள்ளி, தாமிரம், நிக்கல், துத்தநாக கலவையால், புதிய நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது.

நன்றி.தினமலர்

8 ஆண்டுகளுக்கு பின் கோத்ரா திரும்பினார்: உசேன் உம்ராஜி


கோத்ரா (குஜராத்): கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கூறப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்ட மவுல்வி உசேன் உம்ராஜி, எட்டு ஆண்டுகளுக்குப் பின், தன் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

கோத்ரா ரயில் நிலையத்தில், 2002ல், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில், 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, 134 பேர் கைது செய்யப்பட்டு, 94 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. சபர்மதி சிறைச்சாலையில், சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டு, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில், 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்தும், மவுல்வி உசேன் உமர்ஜி, கோத்ரா நகராட்சித் தலைவர் முகமது அப்துல் ரகிம் உள்ளிட்ட, 63 பேரை, சிறப்பு கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட மவுல்வி உமர்ஜி உள்ளிட்டோர், எட்டு ஆண்டு சிறைவாசத்திற்குப் பின், நேற்று, தங்கள் சொந்த ஊரான கோத்ராவுக்குத் திரும்பினர். அவர்களை உறவினர்கள் வரவேற்றனர்.

நன்றி.தினமலர்

புற்று நோய் ,இதய நோய்: கறிவேப்பிலை ஒரு மாமருந்து!

http://images.indianewsreel.com/img/February2010/e9809c46-c618-42cd-9dfa-f75ef5d237e9_karuveppilai01.jpg

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

21 பிப்ரவரி, 2011

மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்?

அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி
அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக முஸ்லிம் அரங்கில் எழுச்சி!மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராட்டுகள், வாழ்த்துகள் வரும் வேளையில் ஒரு சிலர் விமர்சனங்களையும் முன் வைக்கின்றனர். பலர் எங்களிடம் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட கேள்விகளைத் தொகுத்து, அதற்கான விளக்கங்களை அளிக்கின்றோம்.


கேள்வி: மாற்று அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?



பதில்: சமுதாயத்தின் அரசியல் தலை நிமிர்வுக்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். அதில் நாங்கள் சமரசம் செய்துகொள்வதில்லை. இப்போது 3 தொகுதிகள் குறித்து ஒரு சிலர் விமர்சிக்கிறார்கள். அதேசமயம் 90 சதவீதம் பேர் பாராட்டுகிறார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். எனினும் விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் என்று சிறு கூட்டமாக இருந்தாலும் அவர்களுக்கும் விளக்கமளிப்பது எமக்கு கடமையாகிறது.

“ஏதோ கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்” என்பதுபோல அந்த சிலர் விமர்சிக்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக குழுவுடன் மமக குழு 5 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்துவிட்டு, அதில் 12 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் 12&ல் இருந்து ஏழு தொகுதிகள் என்ற நிலைக்கு வந்தோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகள் என்ற நிலையில் இதற்கு மேல் எங்களால் இறங்கி வரமுடியாது என கூறிவிட்டோம். பிப்ரவரி 18&ம் தேதி அதிமுக குழுவிடம் எங்களின் நிலைபாட்டை உறுதிபட தெரிவித்துவிட்டோம். அதனாலேயே ஒப்பந்தம் போடுவது ஒத்திப்போய்க் கொண்டிருந்தது. அதிமுக குழு பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறி மூன்று தொகுதிகள் தான் என்ற எண்ணிக்கையை ஏற்கக் கூறி வேண்டிக் கொண்டிருந்தது. ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தார்.

நாம் கடைசியாக 4 தொகுதிகளும், புதுச்சேரி மாநிலத்தில் 1 தொகுதியும் ஒதுக்க வேண்டும் என்று உறுதி காட்டினோம். இதனிடையே மமக மல்லுக்கட்டுவது குறித்து நக்கீரன் உள்ளிட்ட ஏடுகள் செய்தி வெளியிட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே ஜமாஅத்துகள், உலமாக்கள், சமுதாய ஆர்வலர்கள், சமுதாய அறிவுஜீவிகள் என பலதரப்பும் நமக்கு அன்பான வேண்டுகோளை விடுத்தனர். போனமுறை திமுகவிடம் மல்லுகட்டியது போல் வேண்டாம். இம்முறை நமது பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்ற அளவில் சிந்தியுங்கள். கூடுதல் தொகுதிகளை அடுத்தடுத்த தேர்தல்களில் வற்புறுத்துங்கள் என கருத்து தெரிவித்தனர்.

இதே கருத்தை பிப்ரவரி 19 அன்று பல மாவட்ட நிர்வாகிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் நம்மிடம் வலியுறுத்தினர். சமுதாயத்திற்காகத்தான், நாம் கட்சி ஆரம்பித்தோம். சமுதாயத்தின் கூடுதல் பிரதிநிதித்துவத்திற்காகத்தான் போராடுகிறோம். எந்த சமுதாயத்திற்காகப் போராடுகிறோமோ அந்த சமுதாயத்தின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிறது.

அந்த அடிப்படையில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகளுடன் அதிமுக தர முன் வந்த மூன்று தொகுதிகளை இப்போதைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்வது என்றும், மூன்று தொகுதிகளில் வெற்றி வாகை சூடிய பிறகு கூடுதல் தொகுதிகள் என்ற லட்சியத்தை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கேள்வி: நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது, விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்களே..?


பதில்: நாங்கள் கூடுதல் தொகுதிகளுக்காகப் போராடியது வேறு யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, இறைவனுக்குத் தெரியும். கடைசியாக நான்கு தொகுதிகளையாவது பெற்றுவிட வேண்டும் என்று உறுதிகாட்டினோம். ஆனால் இறைவன் நாடவில்லை. சமுதாயத்தின் தலை நிமிர்வுக்காக நாங்கள் போராடியதற்கான கூலி இறைவனிடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளோம். எங்களை விமர்சிப்பவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

கேள்வி: அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?

பதில்: செல்வி ஜெயலலிதாவை சந்தித்தபோது பொதுக்குழுவின் தீர்மானப்படி இடஒதுக்கீடு குறித்தும் விரிவாகப் பேசியுள்ளோம். கல்வி முறையில் உருது, அரபி உட்பட சிறுபான்மை மொழிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாராபட்ச போக்கு குறித்தும், திருமண பதிவுச்சட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்தும், பல்வேறு சமுதாய கோரிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசியுள்ளோம். எல்லாம் நல்லபடியாக நடைபெற அனைவரும் துவா செய்வோம்.

கேள்வி: இந்த மூன்று தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும் ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களே..

பதில்: உண்மைதான்! 1991&க்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்கள் நடத்தும் அரசியல் கட்சிக்கு சொந்த சின்னத்தில் மூன்று தொகுதிகளை திராவிடக் கட்சிகள் ஒதுக்கியது இப்போதுதான்! இக்காலக்கட்டத்தில் அப்துல் லத்தீப் அவர்கள் ஒருமுறை 5 தொகுதிகளை திமுகவிடம் பெற்றார். ஆனால் உதயசூரியனில் தான் அனைவரும் போட்டியிட்டார்கள்.

அப்துல்சமது அவர்கள் முஸ்லிம் லீக்கிற்கு அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களைப் பெற்றார். ஆனால் அவர்களும் இரட்டை இலையில்தான் போட்டியிட்டார்கள்.

ஆனால், அப்துல் சமது, அப்துல் லத்தீப், ஆகியோர் செல்வாக்கோடு இருந்த 1991லிருந்து இப்போதைய 2011 வரை உள்ள இருபது வருடத்தில் தமிழகத்தில்¢மூன்று தொகுதிகளை சொந்தச் சின்னத்தில் பெற்று, மனிதநேய மக்கள¢கட்சி முதல்கட்டமாக நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

கேள்வி: நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக, சொல்லி இருந்தால் நிச்சயம் 12 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும், முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..

பதில்: உண்மைதான். ஆனால் சமுதாயத்தின் தனித்தன்மையும், அரசியல் உரிமைகளும், சுதந்திரப் பேச்சுகளும் முடக்கப்பட்டிருக்கும்.

எந்த பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோமோ அக்கட்சியின் கொறடா அனுமதியில்லாமல், நமது எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் சுதந்திரமாகப் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். கடந்த காலத்தில் காயிதே மில்லத்திற்கு பிறகு பல முஸ்லிம் அமைப்புகள் செய்த தவறுகளை நாமும் செய்ய விரும்பவில்லை.

கூடுதல் தொகுதிகளுக்காகவும், தேர்தல் செலவுகளுக்காகவும் நமது உரிமைகளை முடக்க நாங்கள் விரும்பவில்லை. குறைவான தொகுதிகளாக இருந்தாலும், அவை தனித்தன்மையோடும் தன்மானத்தோடும் இருக்க வேண்டும் என்பதால்தான் மூன்று தொகுதிகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: அதிமுக கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடும்போது மமகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்திருப்பது பரவாயில்லை என பல பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்களே...

பதில்: விபரம் அறிந்தவர்களுக்கு அந்த உண்மை புரியும், போனமுறை அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளைப் பெற்ற வைகோ அவர்களுக்கு இம்முறை 15 தொகுதிகள் பேசப்படுவதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றது. 80 தொகுதிகள் கேட்ட விஜயகாந்துக்கு 41 தொகுதிகள் பேசப்படுவதாக மீடியாக்கள் தெரிவிக்கின்றன.

முன்பு 2001ல் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட வலுவான கட்சியான புதிய தமிழகத்துக்கு இப்போது அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தேவர் சமுதாயக் கட்சியான: மக்கள் அறிமுகம் கொண்ட, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கும், நாடார் சமுதாயப் பின்னணி கொண்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும் புதிய தமிழகத்தின் எண்ணிக்கைகள் தான் பேசப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு லட்சத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங்கிய கொங்கு முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு கூட்டணியிலுமே நான்கு தொகுதிகள்தான் பேசப்படுவதாக செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்ல, மேற்கண்ட அனைவருக்கும் சொந்தச் சின்னங்களில் போட்டியிட அனுமதி கிடைக்குமா? தெரியவில்லை.

இதையெல்லாம் ஒப்பிடும்போது மமகவுக்கு தமிழகத்தில் மூன்று தொகுதிகள் சொந்தச் சின்னத்தில் அளிக்கப்பட்டிருப்பதும், புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதி தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருப்பதும் நல்ல மரியாதையான தொடக்கம் என்பதை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கேள்வி: இப்போது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காய் நகர்த்தும் நீங்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டிருக்கலாமே...


பதில்: அன்றைய அரசியல் சூழலில், எடுக்கப்பட்ட முடிவு அது. 2004&ல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் 2009&ல் திமுக கூட்டணியில் இல்லை. அவர்கள் விட்டுச் சென்ற 14 தொகுதிகள் உபரியாக இருந்தது.

வட மாவட்டங்களில் மட்டுமே உறுதியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அப்போது இரண்டு தொகுதிகளை கொடுத்து, தமிழகம் முழுக்க செயல்படும் நமக்கு ஒரு தொகுதியை மட்டுமே தருவோம் என்று அரசியல் பாரபட்சத்தை திமுக தலைமை வெளிக்காட்டியது.

அவர்கள் தர முன்வந்த ஒரு தொகுதியை கூட, எங்களுடன் கலந்து பேசி தரவில்லை. நாம் விரும்பிய வேலூரை கவனத்தில் கொள்ளாமல், அவர்களாகவே ராமநாதபுரத்தை முடிவு செய்தார்கள். இரண்டும் நமக்கு பலமானவைதான் என்றாலும், ராமநாதபுரம் அழகிரியின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய தொகுதி.

அந்த நேரத்தில் வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக நமக்கும், அழகிரிக்கும் கடும் கருத்து வேறுபாடு இருந்தது. இது திமுக தலைமைக்கு நன்றாகத் தெரியும்.
ஒருவேளை ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு ராமநாதபுரத்தில் போட்டியிட்டு இருந்தால், அழகிரியின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆட்சியில் பங்கு கேட்டதற்காக கூட்டணியில் வைத்தே தங்கபாலுவும், இ.வி.கே.எஸ். இளங்கோவனும் தோற்கடிக்கப்பட்டது போல ‘உள்குத்து’ வேலைதான் நடந்திருக்கும். எது எப்படியோ, கடந்து போன அந்த அரசியல் நிகழ்வுகளை நாம் பெரிதாக்க விரும்பவில்லை. அவற்றை அரசியல் அனுபவங்களில் ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறோம்.

இத்தருணத்தில் ஒரு ஹதீஸை இங்கே நினைவூட்டுகிறோம்.

பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விட சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். இறை நம்பிக்கையாளர் அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்கு பயன்தரும் காரியங்களை அடைய ஆர்வம் கொள். முடியாது என்று எண்ணிவிடாதே. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை. இப்படிச் செய்திருந்தால் அப்படி நடந்திருக்குமே என்று கூறாதே. காரணம் “இப்படிச் செய்திருந்தால்” என்ற வாசகம் ஷைத்தானின் செயலுக்கு வழிவகுக்கும். அல்லாஹ் விதித்தான். அவன் நாடியதை செய்கின்றான் என்று கூறு. (நபிமொழி)

அறிவிப்பாளர்: அபுஹூரைரா ரலி நூல் : முஸ்லிம் (6945)


கேள்வி: என்னதான் நீங்கள் தெளிவாக விளக்கினாலும், ஒரு சிலர் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பார்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?

பதில்: அவர்களெல்லாம் யார் என்று சமுதாயத்திற்கும், பொதுமக்களுக்கும் தெரியும். சமுதாயத்தில் பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி சுயநலத்திற்காக செயல்படுபவர்கள்: இயக்கம் ஒன்றை உருவாக்கி தலைமையேற்க தகுதியில்லாதவர்கள் தற்போது செயல்படும் இயக்கங்களை வலுவூட்டி, சமுதாயத்திற்கு நலன்களைப் பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டாதவர்கள்: தங்கள் இயக்கத்தின் சார்பாக அரசியல் கட்சியை உருவாக்க முடியவில்லையே என பொறாமைப்படுபவர்கள்: சொந்தச் சின்னத்தில் ஒரு தொகுதியைக் கூட பெற வழியில்லாதவர்கள்: அடுத்தவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் எதையாவது பரபரப்புக்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள்: & இப்படி இவர்களின் பட்டியல் நீளும்.

அவர்களைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை. காரணம், முன்பு நாம் தனித்து நின்றபோது இவர்களெல்லாம் நம்மை ஏன் ஆதரிக்கவில்லை. அப்போது எங்கே தொலைந்தார்கள்?

ஒருவேளை மூன்று தொகுதிகளை வாங்காமல், நாம் வெளியே வந்திருந்தால், கொடுத்ததை ஏன் மறுத்தீர்கள் என விமர்சிப்பார்கள். வாங்கிய பிறகு, மூன்று தொகுதிகளை வாங்கியது ஏன் என விமர்சிப்பார்கள்.

ஒரு நிலைப்பாடு எடுத்து அதில் வெற்றி பெற்றால் ஒரு மாதிரி பேசுவார்கள். தோல்வியடைந்தால் உடனே மாற்றி பேசுவார்கள்.

ஒரு வேளை கூடுதலாக மூன்று தொகுதிகளை பெற்றிருந்தால், அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வது போல பேசும் இவர்களெல்லாம்: நாம் சந்தியில் நிற்க வேண்டும் என விரும்பும் நரிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய “விமர்சகர்களின்” முகமும், முதுகும் எப்படிப்பட்டது என்று நமக்கு தெரியும். இவர்களால் எந்த நன்மையும் நமக்கு இல்லை.

நமக்கு சமுதாய மக்களும், இயக்கவாதிகளும்தான் முக்கியம். அவர்களது புரிதல்களும், ஆதரவும், அல்லாஹ்வின் அருளும் இருக்கும்போது நாம் எதைப்பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

நன்றி.தமுமுக

20 பிப்ரவரி, 2011

எஸ்.டி.பி.ஐ.யின் எழுச்சிப் பேரணி மற்றும் மாபெரும் சென்னை மண்டல மாநாடு

 அரசியலை நமதாக்குவோம்! தேசத்தைப் பொதுவாக்குவோம்! எனும் மாபெரும் முழக்கத்துடன் சென்னை இராயப்பேட்டை காயிதேமில்லத் திடலில் (ஒய்.எம்.சி.ஏ. வளாகம்) சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டல மாநாட்டை காலை 9 மணியளவில் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் கொடியேற்றி துவக்கி வைத்தார்.


 அப்போது தேசிய மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ.யின் செயல்வீரர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு எழுச்சிமிகு கோஷங்களை எழுப்பினர்.
Massive Rally Crossing Mount Road in Chennai
Massive Rally Crossing Mount Road in Chennai

பிற்பகல் 2.45 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு எழுச்சிப் பேரணி துவங்கியது. பேரணியை எஸ்.டி.பி.ஐ.யின் அகில இந்தியத் தலைவர் இ. அபுபக்கர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


One Part of Massive Rally
One Part of Massive Rally
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக இறுதியில் 4.30 மணிக்கு மாநாட்டு திடலை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

சரியாக மாலை 5 மணியளவில் எஸ்.டி.பி.ஐ. யின் கொள்கைப் பாடலுடன் தொடங்கிய பொதுக்கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ.யின் பொதுச் செயலாளர் முபாரக் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
அகில இந்திய மீனவர் சங்க தலைவர் அண்டன் கோமஸ், எஸ்.டி.பி.ஐ. கர்நாடக மாநில துணைத் தலைவர் பேரா. நாஸ்னி பேகம், நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்டின் துணைத் தலைவர் பாத்திமா ஆலிமா, தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கத்தின் தலைவர் அருள்தாஸ், எஸ்.டி.பி.ஐ.யின் தேசிய தலைவர் இ. அபுபக்கர், பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ்நாடு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயீல், எஸ்.டி.பி.ஐ.யின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம். ரஃபீக் அஹமது ஆகியோர் உரையாற்றினர். எஸ்.டி.பி.ஐ.யின் மாநில செயலாளர் அப்துல் சத்தார் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தார். எஸ்.டி.பி.ஐ.யின் மாநில பொருளார் அம்ஜத் பாஷா நன்றியுரையாற்றினார்.



மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.1. நாடு முழுவதும் 2003 முதல் தொடர்ந்து நடந்த 10க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட பயங்கரவகள் யார் என்பது தற்போது அம்பலமயுள்ளது. குண்டுவெடிப்பு வழக்குகளை துரிதப்படுத்தியும் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் உடனே கைது செய்யப்பட வேண்டும். மேலும் முன்னதாக கைது செய்யப்பட்ட அப்பாவி (மக்களை) உடனே விடுதலை செய்ய வேண்டும்.
2. சமீபத்தில் வெளியாகிய ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவ்ர்கள் மீது எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை போல், காமன்வெல்த் ஊழல் புகழ் கல்மாடி, ஆதர்ஸ் ஊழல் அசோக் சவான், நில மோசடி ஊழல் கர்நாடக எடியூரப்பா போன்றவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். நீதி செலுத்தும் விஷயத்தில் எந்தப் பாகுபாடும் காட்டாமல் குற்றவாளிகள் உடனே தண்டிக்கப்பட வேண்டும்.
3. தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீதமான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தருவதை தன்னுடைய தேர்தல் வாக்குறுதியாக அரசியல் கட்சிகள் வரும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று செயல்படுத்த வேண்டும்.
4. வக்ஃப் சொத்துக்கள் பல இடங்களில் சமூக விரோத சக்திகளால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அரசு தலையிட்டு அத்தனை வக்ஃப் சொத்துக்களையும் மீட்டெடுத்து நல்ல விஷயங்களுக்கு பயன்பட ஆவன செய்ய வேண்டும்.
5. தமிழக மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்தும், சிறைப்பிடித்தும் வரும் இலங்கை ராணுவத்தினரின் அராஜகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்காமல் உடனே தலையிட்டு தமிழக மீனவர்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்.
6. சமீப காலமாக தொடரும் தேர்தல் கால பணப் பட்டுவாடா நிலைகளும், ஓட்டுக்குப் பணம் என்கிற மோசமான செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு சரி செய்ய வேண்டும். ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தி அனைத்து சமூக மக்களின் வாக்குரிமையை நிலை நிறுத்த தேர்தல் ஆணையம் ஆவண செய்ய வேண்டும்.
7. முஸ்லிம்களுக்கும், ஹிந்துக்களுக்கும் மத துவேஷத்தை ஏற்படுத்தும் விதத்தில் ரத யாத்திரை நடத்தி வரும் பா.ஜ.க.வை வன்மையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே, மத்திய, மாநில அரசு நிதி உதவியில் அதிகமா கல்வி கற்பவர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின - பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள். ஹிந்து சமூக மாணவர்களே அதிகம் சலுகைகளைப் பெற்று வருகின்றார்கள். இச்சூழலில் மாணவர்கள் மத்தியில் மத துவேஷத்தை ஏற்படுத்திட பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரை மற்றும் பொது நிகழ்ச்சிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
8. வரும் காலங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்ப குறைந்த பட்சம் 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எஸ்.டி.பி.ஐ. வேண்டுகோள் விடுக்கிறது.
9. சமூகத்தைப் பிளவுபடுத்தி வரும் சமூக விவாத கும்பல்களோடு சமீபத்தில் கடையநல்லூர், ஏர்வாடி பகுதி காவல்துறையினரும் கைகோர்த்து நடத்தி வரும் அராஜகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். எஸ்.டி.பி.ஐ. நெல்லை மாவட்ட பொது செயலாளர் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மீதும், பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்த சமூக விரோத கும்பல் மீதும் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்துகிறது.
10. நலிந்து வரும் உருது மொழியை பாதுகாத்திடாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தின் மூலம் உருது மொழியை தமிழக அரசு மேலும் நலிவடையச் செய்திருக்கிறது. இந்நிலையை மாற்றி உருது மொழியை பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கேட்டுக் கொள்கிறது.
11. நலிவடைந்த நிலையில் வாழ்ந்து வரும் மீனவர்களின் வாழ்க்கை நிலையை கேள்விக்குறியாக்கும் கடல் அட்டை மீன் மீதான தடையை மத்திய அரசு விலக்கக் கோரியும் மீனவர்கள் மீது தொடரப்படும் வழக்குகளை மறுபரிசீலனை செய்து அவர்கள் வாழ்க்கைக்கு உதவிட மத்திய அரசை எஸ்.டி.பி.ஐ. கேட்டுக் கொள்கிறது.

லால்பேட்டை வெற்றிலை கொடிக்காலில் முதலை பிடிபட்டது



காட்டுமன்னார்கோவில் : லால்பேட்டை வெற்றிலை கொடிக்காலில் புகுந்த முதலையை, தீயணைப்புத் துறையினர் பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹாலிது. இவருக்குச் சொந்தமான வெற்றிலை கொடிக்கால் வீராணம் ஏரிக்கரையையொட்டி உள்ளது. வழக்கம்போல் நேற்று காலை கொடிக்காலுக்குச் சென்ற   ஹாலிது, அங்கு முதலை இருந்தது கண்டு திடுக்கிட்டார். தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் கஜபதி ராவ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கொடிக்காலில் பதுங்கியிருந்த முதலையை, 4 மணி நேரம் போராடி பிடித்து, வனவர் சரவணகுமாரிடம் ஒப்படைத்தனர். 10 அடி நீளமும் 500 கிலோ எடையும் கொண்ட முதலை, சிதம்பரம் அடுத்த வக்காரமாரி குளத்தில் விடப்பட்டது.

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்


சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.



இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர்  கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி  தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது.



மேலும் புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா உறுதி அளித்தார்.
 

18 பிப்ரவரி, 2011

குஜராத் முஸ்லிம்களை புறக்கணிக்கும் மோடி!

Modi is idolised by Sangh loyalists. Drawing sword is a norm but drawing this ceremonial sword (that is used for beheadings) is something bizarre but that goes with well Modi, coz he's the butcher by nature.

குஜராத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடியின் சிறப்பான நிர்வாக திறனால் அம்மாநிலம் அபார வளர்ச்சியை எட்டிபிடித்து வருவதாக பல்வேறு தரப்பினரும் புகழ்ந்து கொண்டிருக்கையில், சத்தமில்லாமல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அம்மாநிலத்தின் ஒரு அங்கமான இஸ்லாமிய மக்களின் பொருளாதார மற்றும் வாழ்க்கை தரம் வெகுவாக பின்தங்கி கிடப்பதாக தெரியவந்துள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம், முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை கிளப்பியிருந்தன.

மேலும் அவரது அரசியல் வாழ்வில்,குஜராத் கலவரம் ஒரு கரும் புள்ளியாகவே அமைந்தது.

இந்நிலையில் குஜராத் கலவர சர்ச்சை ஓய்ந்து, மீண்டும் ஆட்சியை பிடித்த மோடி,தம் மீதான கலவர கொலை களங்கத்திற்கு ஈடுகட்டும் விதமாக நிர்வாகத்தில் வெகுவாக கவனம் செலுத்தினார்.

சாதுரியமாக பேசியும்,செயல்பட்டும் குஜராத்திற்குள் முதலீட்டாளர்களையும்,தொழிலதிபர்களையும் கொண்டு வந்ததால் இன்று அம்மாநிலம் பொருளாதாரத்தில் மட்டுமின்றி பல துறைகளிலும் அபார வளர்ச்சியை எட்டி பிடித்துள்ளது.

ஆனால் இந்த அபார வளர்ச்சியால், அம்மாநில மக்கள் தொகையில் கணிசமாக உள்ள வறுமையில் வாடும் நலிந்த பிரிவு மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இவர்களுக்கும்,இதர பெரும்பான்மை இந்துக்களுக்கும் இடையே வருவாய் விடயத்தில் மிகப்பெரிய அளவிலான இடைவெளியும், ஏற்ற இறக்கமும் - அதாவது வருவாய் சமத்துவின்மை- காணப்படுவதாக சமீபத்தில் நடத்தப்பட ஆய்வில் தெரியவந்துள்ளது.

'குஜராத்தின் வளர்ச்சியும், சமூக-மத வேறுபாடுகளும்' என்ற தலைப்பில் பிரபல பொருளாதார வல்லுனர் அபுலேஷ் ஷரீப், இந்த ஆய்வை நடத்தியுள்ளார்.

இஸ்லாமியர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைகளை விளக்கும் சச்சார் கமிட்டி அறிக்கை, தேசிய பொருளாதார ஆய்வு செயல்முறை குழு (National Council for Applied Economic Research -NCAER) மற்றும் தேசிய மாதிரி ஆய்வு மையம் (National Sample Survey Organisation -NSSO)
போன்றவற்றின் அறிக்கைகளின் துணை கொண்டு இந்த ஆய்வை நடத்திய அவர், குஜராத் முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை பட்டியலிட்டுள்ளார்.

17 பிப்ரவரி, 2011

இலங்கைத் தூதரகம் முற்றுகை: மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழக மீனவர் சமுதாயம் உயிரிழப்புகளையும், படுகாயங்களையும் எதிர்கொள்வது தொடர்கதையாகி வரும் நிலையில், நாகையைச் சேர்ந்த 106 மீனவர்கள் 15.02.2011 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் நேற்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொடுமைப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 22.02.2011 அன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முற்றுகையிடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

16 பிப்ரவரி, 2011

நாம் தமிழர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் படுகொலை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் அவர்கள் கடைத்தெருவில் பழங்கள் வாங்கிக் கொண்டிருக்கும் போது பொதுமக்கள் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம். படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை உடனே கைது செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.



திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்க்குலைந்துள்ளதால் தமிழகத்தில் சமீப காலமாக கொலைகளும், வன்முறைகளும் அதிகரித்து வருகிறது. போலீஸார் இருக்கின்றார்களா-? சட்டம் செயல்படுகிறதா? என்பது குறித்து பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, முதல்வர் அவர்கள் காவல்துறையை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தொழுகைக்கும் வெற்றிக்கும் என்ன சம்பந்தம்?

தொழுகையை விட்டவன் மறுப்பாளன்!

தொழுகை சொர்க்கத்தின் திறவுகோள்!

தொழுகை முதலில் கேட்கப்படும் கேள்வி!


தொழுகையின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்! - இது நாம் தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பொலியில் கேட்கக் கூடிய வாசகங்கள் தான். தொழுகைக்கும் வெற்றிக்கும் என்ன சம்பந்தம்? நமது தோல்விகளுக்கு நாம் தொழாமல் இருப்பது தான் காரணமா?

யார் தொழுகையை நிலை நிறுத்துகிறாரோ அவர் தீனை நிலை நிறுத்தியவராவார். யார் தொழுகையை விட்டு விடுகிறாரோ, அவர் தீனைத் தகர்த்தவர் ஆவார். (சரி பார்க்க) தீன் என்பது என்ன? மார்க்கம் அல்லவா? அது ஒரு முழுமையான வாழ்கை நெறி அல்லவா? அப்படியானால் - தொழுகைக்கும் வாழ்க்கைக்கும் அப்படியென்ன நெருக்கம்?

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்முடைய ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் அழுதினார்கள்: உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! எவன் தன் தொழுகையைப் பேணுகின்றானோ அதனைக் கண்காணித்த வண்ணம் இருப்பானோ அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவனாகவே இருப்பான். (மிஷ்காத்)

அது ஏன் அப்படி?

இஸ்லாத்தில் - தொழுகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?


ஏனெனில் அல்லாஹு தஆலா நமது வாழ்க்கையோடு தொழுகையை அந்த அளவு பின்னிப் பிணைத்திருக்கின்றான். எப்படி என்கிறீர்களா?

சான்றாக - தொழுகையுடன் சுத்தம் இணைந்துள்ளது. உளூ இல்லாமல் தொழ முடியாது. இடம் சுத்தம், உடை சுத்தம், உடல் சுத்தம் அவசியம். சுத்தம் வெற்றி தருமா தராதா?

தொழுகை - நேரத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. நேரத்தைப் பேணுபவர்கள் வெற்றி பெறுவார்களா மாட்டார்களா?

தொழுகை - நல்லொழுக்கத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இந்த நல்லொழுக்கம் வெற்றியைத் தருமா தராதா?

தொழுகை - பொறுமையுடன் இணைக்கப் பட்டுள்ளது. பொறுமையாளர்கள் வெற்றி பெறுவார்களா? மாட்டார்களா?

தொழுகை - ஜகாத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. தர்மம் நமக்கு வெற்றியைத் தருமா தராதா?

தொழுகை - ஒற்றுமையைக் கற்றுத்தருகிறது. வெற்றிக்கு - ஒற்றுமை அவசியமா? இல்லையா?

தொழுகை - தலைமைக்குக் கட்டுப் படுவதன் அவசியத்தைக் கற்றுத்தருகிறது. வெற்றிக்கு - தலைமைக்குக் கட்டுப் படுவது அவசியமா? இல்லையா?

நன்றி.

இதய நோயை கட்டுப்படுத்தும் தக்காளி!









http://2.imimg.com/data2/JH/DN/HELLOTD-1951675/tomato1-250x250.gif
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய இது தொடர்பான ஆய்வை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது:
அசைவ உணவை காட்டிலும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. தக்காளியில் உள்ள ‘லைக்கோபென்’ சத்து பெண்களின் இதய நோயை கட்டுப்படுத்தும். காய்கறிகளில் முக்கிய சத்துகளாக பொட்டாசியம், பீட்டா கரோட்டின், மக்னீசியம், கால்சியம், இரும்பு, போலேட் (பி வைட்டமின்), வைட்டமின் சி, இ, கே, நார்சத்து ஆகியவை உள்ளன.அதிக உடல் எடை ‘டைப் 2’ சர்க்கரை நோய்க்கு அழைத்து செல்லும். இது பின்னர் இதய நோய், கிட்னி செயலிழப்பு, விரைவில் இறப்பு போன்றவற்றுக்கு காரணங்கள் ஆகின்றன. காய்கறிகள் வயிற்றை நிரப்பி, பசியை குறைக்கின்றன. காய்கறிகளில் உள்ள நார்சத்து இதய நோய்க்கு காரணமாகும் கொழுப்பை குறைக்கிறது. மலச்சிக்கலை போக்கும்.
தக்காளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் காய்ந்த பீன்ஸ், இனிப்பு உருளைக் கிழங்கு, கீரைகளில் உள்ள சத்து உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோய்க்கும், ‘ஸ்ட்ரோக்’ ஏற்படவும் முக்கிய காரணம் உயர் ரத்த அழுத்தம். கீரையில் உள்ள சத்துக்கள் கண் பார்வைக்கு நல்லது.தக்காளியில் உள்ள லைக்கோபென் சுரப்பி புற்று நோய்க்கான வாய்ப்பை குறைக்கும். பெண்களுக்கு இத்துடன் தொடர்புடைய இதய நோயையும் குறைக்கும்.

15 பிப்ரவரி, 2011

விலைவாசி உயர்வுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு


கடந்த பிப்ரவரி 8 அன்று அதிமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற விலைவாசி உயர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் உற்சாகமாக நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் அதிகளவில் பங்கேற்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மமகவினர் தமிழகமெங்கும் பெருந்திரளாக பங்கேற்றது குறித்து அதிமுகவும் கூட்டணிக் கட்சியினரும் வியந்து பாராட்டினர்.
 

14 பிப்ரவரி, 2011

என்கிரிப்ட் விவகாரம்: பிளாக்பெர்ரி சேவையை நிறுத்தக மத்திய அரசு உத்தரவு


இமெயில், குறுஞ்செய்தி போன்ற தொழில்நுட்ப வசதிகளை மத்திய அரசு கண்காணிக்க அனுமதிக்காத பிளாக்பெர்ரி போன்கள் இணைப்பை துண்டிக்குமாறு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் மட்டும் 4,00,000 வாடிக்கையாளர்களுக்கும் அதிகமானோர் பிளாக்பெர்ரி செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் அதிமானோர் பிளாக்பெர்ரி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கனடாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் இணையதள சேவை, இமெயில், குறுஞ்செய்தி, சமூக வலைதள சேவை போன்ற ஏராளமான வசதிகளை தனது செல்போனில் வழங்குகிறது.
இந்தியாவில் செயல்படும் மற்ற செல்போன் நிறுவனங்கள் தங்களது சேவை- செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளைச் செய்து கொடுத்துள்ளன. ஆனால் இத்தகைய கண்காணிப்பு வசதிகள் பிளாக்பெர்ரி மொபைலில் இல்லை.
இதில் ஒருவர் அனுப்பும் எஸ்எம்எஸை அவர் யாருக்கு அனுப்பினாரோ அவரைத் தவிர மற்றவர்களால் இடைமறித்துப் பார்க்க முடியாது. இந்தத எஸ்எம்எஸ் 'என்க்ரிப்ட்' செய்யப்பட்டே அனுப்பப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் சர்வர்கள் கனடாவில் தான் உள்ளன. இதனால் பிளாக்பெர்ரியில் அனுப்பப்படும் எஸ்எம்எஸ், மெயில் போன்றவற்றை இந்திய உளவுப் பிரிவினரால் இடைமறிக்கவோ, படிக்கவோ முடியாது.
இதன் காரணமாக, பயங்கரவாதிகள் பிளாக்பெர்ரி மொபைல் போன் மூலம் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்றக்கூடும் என்பதால் நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி பிளாக்பெர்ரி கார்ப்ரேட் இமெயில் உள்ளிட்ட தகவல் சேவைகளை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதற்காக ஜனவரி 31-ம் தேதி வரை கெடு விதித்திருந்தது.
இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது,
காலக்கெடு நீட்டிக்கப்படவும் இல்லை. அதே நேரத்தில் சேவையை முற்றிலுமாக ரத்து செய்யவும் இல்லை. இந்த விவகாரத்தில் அரசுக்கும், பிளாக்பெர்ரி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
தொலை தொடர்பு நிறவனங்களுக்கு உரிமம் அளிக்கும்போதே அதில் செல்போன் வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் தேவைப்பட்டால் அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறது. ஆகையால் தேவைப்படுகையில் வாடிக்கையாளர்களின் கார்ப்ரேட் இமெயில் உள்ளிட்ட தகவல் பரிமாற்றங்களை பிளாக்பெரி பகிர்ந்து கொள்ள மறுத்தால் அதன் சேவையை துண்டிக்க வேண்டும் என செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

ஆர்.எஸ்.எஸ். காரர்களே!! நாங்க ரெடி நீங்க ரெடியா?


 

















தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸை வலுப்படுத்த 20 ஆயிரம் தொண்டர்கள் களத்தில் இறங்கப் போகிறார்களாம். இவர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வார்களாம். இதற்காக 16 பக்க கையேடு ஒன்று தயாரிக்கப் பட்டுள்ளதாம். ஆர்.எஸ்.எஸின் தோற்றம், ஆர்.எஸ்.எஸ். பற்றி தேசிய தலைவர்களின் கருத்துகள் இடம் பெறுமாம். பயங்கரவாத ஆர்.எஸ்.எஸைக் கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் இராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான விமர்சனங்களும் முன் வைக்கப்படுமாம்.

பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வீட்டுக்கு வீடு கையேடுகளையும், துண்டு அறிக்கைகளையும் வழங்குவார்களாம்! வரட்டும் அதைத் தான் நாமும் எதிர்பார்க் கிறோம். 1925ஆம் ஆண்டில்தான் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் துவக்கப்பட்டன. சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை அமைப்புகளும் அதே ஆண்டில்தான் தொடங்கப்பட்டுள்ளன. இத்தனை ஆண்டுகாலமாக எவ்வளவோ முயற்சி எடுத்துப் பார்த்தும் தமிழ்நாட்டில் அவர்களின் பருப்பு வேகவில்லை. அதற்குக் காரணம் தந்தை பெரியார்.

ஆர்.எஸ்.எஸ். என்பது இந்து மதத்தினைப் பலப்படுத்துகிறோம் என்று கூறி பார்ப்பனர் ஆதிக்கத்தை மேலாண்மையைக் கெட்டிப்படுத்தும் ஒரு வெறிபிடித்த கூட்டம் ஆகும்.
பார்ப்பனர் ஆதிக்கம் என்றால் பிறப்பில் அவர்கள் தான் முதன்மையானவர்கள். பிரம்மா இந்த உலகத்தைப் படைத்ததே கூட பிராமணர்களுக்காகத்தான். அவர்கள் பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தொண்டூழியம் செய்து கிடக்க வேண்டியவர்கள் என்ற நிலைப்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் உழைக்கும் மக்கள் பஞ்சமர்கள் என்று ஆக்கப்பட்டார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை இந்து மத பார்ப்பன மதத்தில் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டப்பட்டது.

துயரப்படும் மக்கள் உண்மையை உணரும் அளவில் அவர்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற உணர்வு உச்ச கட்டத்திற்குச் சென்றது. பார்ப்பனர்கள் திறந்த மேனியில் தங்களின் உயர் ஜாதி ஆணவச் சின்னமான பூணூல் அணிந்து வருதல், உச்சிக்குடுமி வைத்துக் கொண்டு நடமாடுதல் என்பது எல்லாம் அறவே நிற்கும் நிலை உருவாக்கப்பட்டது. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்கார் பார்ப்பனருக்கு மூன்றுகொம்பு என்று கோலி விளையாடும் சிறுவன் கூட கேலி பேசும் நிலை உருவாக்கப்பட்டது.

தமிழ் மண்ணில் பார்ப்பன எதிர்ப்பு என்பது கட்சிகளைக் கடந்து நிற்கக் கூடியதாகும்; ஜாதி, மதங்களைத் தாண்டி இது செங்குத்தாக நிற்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில்கூட ஜெயலலிதாவைச் சேர்த்து இரண்டே இரண்டு பார்ப்பனர்கள்தான் உறுப்பினர்கள். நூற்றுக்கு மூன்று கொடுத்துத் தொலையலாம் என்று நாம் நினைத்தால் கூட அதனைக்கூடக் கொடுக்க தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளோ, பொது மக்களோ தயாராக இல்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து நின்ற பா.ஜ.க. அத்தனைத் தொகுதிகளிலும் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை டெபாசிட் காலியாயிற்று.
இடையில் திராவிட கட்சிகளின் துணையால் கொஞ்சம் துளிர்க்கப் பார்த்தது. அதுவும் நீடிக்க வில்லை. தனி மரமாக நின்று ஒப்பாரி வைக்கும் நிலை தான்.

வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரங்கள் வரட்டும், வீட்டுக்கு வீடு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விரும்புகிறோம். முதல் கேள்வி பிறப்பின் அடிப்படையில் ஜாதி - உயர்வு, தாழ்வை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆம் என்றால், அத்தோடு அவர்களின் பிரச்சாரம் அஸ்தமனம்தான். ஏற்கவில்லை என்றால், அவற்றை வலியுறுத்தும் இந்துமத வேதங்கள், ஸ்மிருதிகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை பகிரங்க மாகக் கொளுத்தத் தயார்தானா? என்ற கேள்வி எழும். சங்கர மடத்தில் அடுத்த சங்கராச்சாரி யார்? என்ற வினாவும் வெடிக்கும்.

சம்பளம் கொடுத்து அனுப்பப்படும் இந்தப் பேர் வழிகள் என்ன செய்வார்கள்? முடிவைச் சொல்லவோ, முடிவு எடுக்கக் கூடிய இடத்திலோ இவர்கள் இல்லையே! என்ன செய்வார்கள்? கைபிசைந்து நிற்பார்கள். கழக இளைஞர்கள், மாணவர்கள், இனவுணர் வாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஒருங்கிணைந்து ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கத் தயாராக இருக்க வேண்டும். இது பெரியார் பிறந்த மண் என்பதை நிரூபிக்க வேண்டும். நாங்கள் தயார்! தயார்!! நீங்கள் தயார்தானா? என்று கேட்கும் நிலை உருவாகட்டும்! உருவாகட்டும்!!

நன்றி :விடுதலை தலையங்கம்,12-02-2011

நீர்த்தேக்கம் விசயத்தில் அமெரிக்காவிடம் பாடம் படிக்குமா? இந்தியா!!














கும்பகோணம்: வெள்ள பாதிப்புகளை தடுக்கும் விதமாக ரூ. 608 கோடியில் கொள்ளிட கரை பலப்படுத்தும் பணி நடக்கவுள்ளதாக பொதுப்பணித்துறை செயலாளர் தனவேல் தெரிவித்தார். வீராணம் மற்றும் பொன்னேரியிலிருந்து மண் கொண்டு வரப்பட்டு கொள்ளிடக்கரைகளை பலப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். மேலும் கரையோரம் புதிய சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.


சிந்திக்கவும்: இந்த 608 கோடியில் இருந்து எத்தனை பிரசன்ட் கொள்ளை அடிப்பார்களோ தெரியவில்லை. இந்த சாக்கடை அரசியல் வாதிகள் கொண்டு வரும் நலம் திட்டங்கள் எல்லாம் மக்கள் வரி பணத்தை கொள்ளை அடிக்கத்தானே!! இந்தியாவில் இருக்கும் நீர்வளங்களை முறைப்படி சேமித்தால் போதும் நமது நாடு விவசாயம் மற்றும் குடிநீர் மற்றும் இயற்க்கை வளங்களில் சிறந்து விளங்கும். அமெரிக்காவிடம் இருந்து பாடம் படியுங்கள் இது போன்ற விசயங்களில். அவர்கள் தண்ணீரை எப்படி சேமித்து வைகிறார்கள் என்று மேலே உள்ள படம் அமெரிக்காவின் கலிபோர்னிய மாகணத்தில் ரேட்டிங் என்ற இடத்தில அமைந்த மிக பெரிய அணைக்கட்டு. 

13 பிப்ரவரி, 2011

கொள்ளிடக்கரையை பலப்படுத்த வீராணம் ஏரியில் தூர்வாரும் பணி தீவிரம்

 
 
கடலூர் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரியை ஆழப்படுத்தி அதிக தண்ணீரை தேக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே கொள் ளிடக் கரையை பலப்படுத்த அரசு சுமார் ரூ.108? கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
 
அதன் மூலம் வீராணம் ஏரி, பொன்னேரி, நாரைக் கால் ஏரி ஆகிய ஏரிகளில் தூர் வாரி அந்த மண்ணை கொண்டு கொள்ளிடக் கரையை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கருணா கரநல்லூர் பகுதியில் வீராணம் ஏரியில் தூர் வாரும் பணி தீவிரமாக நடந்தது.
 
பொக்லைன், டிப்பர் லாரி உதவியுடன் மண் அள்ளப்பட்டது. இந்த பணிக்கு வசதியாக கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி அல்லல்படும் மக்கள்


சிதம்பரம் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு தண்ணீர் வசதி இல்லாததால் பூட்டிக்கிடக்கும் கழிப்பறை.
சிதம்பரம்,  பிப். 13:  சிதம்பரம் ரயில் நிலையத்தில் கழிப்பறை, குடிநீர் வசதியின்றி பயணிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ. தொலைவுக்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் டிசம்பர் 2006-ல் தொடங்கியது.இப்பணி ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் கழித்து முடிவுற்று 2010-ம் ஆண்டு ஏப்ரல்  23-ம் தேதி முதல் பயணிகள் ரயில் ஓடத் தொடங்கியது.அகல ரயில்பாதை அமைப்பதற்கு முன்னதாகவே 2003-ம் ஆண்டு ரூ.55 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த பணியும் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது.சிமென்ட், இரும்பு போன்ற கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தால் போதிய தொகை கிடைக்காததால் ஒப்பந்தக்காரர்கள் கட்டுமானப் பணிகளை பாதியிலேயே விட்டு விட்டு சென்று விட்டனர். அதன் பின்னர் ரயில்வே நிர்வாகமே கூடுதல் நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு சில மாதங்கள் முன்பு கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.ஆனால் கட்டடப் பணிகள் முழுமையுறாமல் உள்ளது. மேலும் ரயில் நிலையத்தில் புதிய கழிப்பறை கட்டப்பட்டு திறக்கப்படாமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. அதுபோன்று குடிநீர் வசதி கிடையாது. இதனால் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.குறிப்பாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். ரயில் நிலையத்தில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.எனவே ரயில்வே நிர்வாகம் புதிய போர்வெல் அமைத்து குடிநீர் மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து பூட்டிக் கிடக்கும் கழிப்பறையை திறக்க வேண்டும் என்பதே பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் கோரிக்கையாகும்.

12 பிப்ரவரி, 2011

லால்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சியின் தொகுதி எழுச்சி பொதுக்கூட்டம்

லால்பேட்டையில் நடந்த மனித நேய மக்கள் கட்சியின்காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி எழுச்சி
பொதுக்கூட்டம் மிகபெரிய எழுச்சியுடன் நடைப்பெற்றது
புகழ் அனைத்தும் இறைவனுக்கே
பொதுக்கூட்டம் புகைப்படங்கள்...

லால்பேட்டை 06/02/2011: லால்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சியின் காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி பொதுக்கூட்டம் முனவ்வர் ஹுசைன் நினைவரங்கம் ஸ்கூல் தெருவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு A.M.முஹம்மது அய்யூப் B.A.,M.Cஅவர்கள்
மாவட்ட பொருளாளர் த.மு.மு.க & ம.ம.க) தலைமை தாங்கினார், A.I.இர்பானுல்லாஹ் BE (நகர பொருளாளர் த.மு.மு.க&ம.ம.க.) கிராஅத் ஓதினார், S.A.முஹம்மது ஹாரிஸ் (நகர தலைவர் த.மு.மு.க &ம.ம.க) வரவேற்புரை நிகழ்த்தினார்.

A.யாசர் அரபாத் .B.B.A.,MC (மாவட்ட செயலாளர் ம.ம.க.)
N.அமானுல்லாஹ் (ஊராட்சி மன்ற தலைவர் &மாவட்ட செயலாளர் த.மு.மு.க ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மௌலவி J.S ரிபாய் அவர்கள், மாநில துணை பொது செயலாளர் த.மு.மு.க.

S.S ஹாருன் ரஷீது அவர்கள், மாநில பொருளாளர் ம.ம.க.

R.M குணங்குடி ஹனிபா அவர்கள், மாநில நிர்வாககுழு உறுப்பினர் த.மு.மு.க.& ம.ம.க.
S.M ஜின்னா அவர்கள் மாநில துணை செயலாளர் த.மு.மு.க.
M.H மெஹராஜுதீன் அவர்கள் மாவட்ட தலைவர் த.மு.மு.க.&ம.ம.க
கலந்து கொண்டு சிறப்பு எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக நன்றிவுரை V.M முஹம்மது ஆஷிக் நூர் (நகர செயலாளர் ம.ம.க) அவர்கள் வழங்கினார்.

முபாரக் விலகல் - இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்பு!


எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சியைத் தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து ஹோஸ்னி முபாரக் விலகி உள்ளதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

முபாரக்கின் பதவி விலகல் ஜனநாயகத்தை நோக்கிய எகிப்தின் பயணத்தின் தொடக்கம்தான். இது முடிவல்ல என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

எகிப்திய மக்கள் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தினார்கள். அவர்களின் கோரிக்கைகள் செவிமடுக்கப்பட்டுள்ளன. இனி எகிப்து பழைய எகிப்தாக இருக்காது என்றும்

வருகிறது, அனைத்து வகை செல் போனுக்கும் ஒரே சார்ஜர்
























அனைத்து வகையான செல் போனுக்கும் ஒரே சார்ஜர் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தபடுகிறது. உலகின் புகழ்பெற்ற செல் நிறுவனங்களான நோகியா, ஆப்பிள், மோட்டோரோலா, எல்ஜி, சாம்சங் உட்பட சுமார் 19 நிறுவனங்கள் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதன்படி, இந்த வருட இறுதிக்குள் அனைத்து நிறுவனங்களும் ஒரே வகையான சார்ஜர்களை தான் தயாரித்து விற்பனை செய்யும். இது குறித்த தேவையான நடவடிக்கையை ஐரோப்பிய ஆணையம் முன்னின்று செய்து வருகிறது. இந்த ஒரே சார்ஜர் மூலம், மின் கழிவைக் குறைக்க முடியும் என்றும், செல் போன் உபயோகிப்பாளர்களுக்கும் வசதியாக இருக்கும் என கூறியுள்ளது.



 

11 பிப்ரவரி, 2011

மக்கள் தொகை கணக்கெடுப்பு: இஸ்லாம் - முஸ்லிம் ஒரு முக்கிய திருத்தம்

தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மதம் என்ற அட்டவணையில் கீழ் இஸ்லாம் என்பதற்கு பதிலாக முஸ்லிம் என குறிப்பிடப்பட்டிருப்பதாக  அனைத்திந்திய அளவில் சில முஸ்லிம அமைப்புகள் நமக்கு தகவல் அளித்தன. இந்த தகவல் அடிப்படையில் மதம் என்றே கேள்விக்கு இஸ்லாம் என்பதற்கு பதிலாக முஸ்லிம் என்று கணக்கெடுப்பு படிவத்தில் அச்சிடப்பட்டிருந்ததால் முஸ்லிம் என்றே பதில் தருமாறு தமுமுக சார்பில் கேட்டுக் கொண்டோம்.
இந்நிலையில்   தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில்  மதம் என்ற அட்டவணையின் கீழ் இஸ்லாம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.  எனவே தமிழக முஸ்லிம்கள் அனைவரும், மதம் என்ற கேள்விக்கு இஸ்லாம்   என்றே குறிப்பிடவும்.

தமுமுக-மமக மாவட்ட நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும், ஜமாஅத்
நிர்வாகிகளும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கணக்கெடுப்பாளர்களுடன் உடனிருந்து விபரம் அறியாத முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். முன்னதாக நாளைய ஜும்ஆ தினத்தில் ஜும்ஆ உரைக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் சமுதாய மக்களுக்கு அறிவிப்பு செய்யுமாறு ஜமாஅத் நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழ் படிவம் டவுன்லோட் செய்ய இந்த சுட்டியை அழுத்துக

http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/Tamil_HH_Side_A_NT.pdf
http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/Tamil_HH_Side_B_NT.pdf

இந்த படிவத்தில் உள்ள மதம் என்ற 7வது  அட்டவணையில் இஸ்லாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளளது.

ஆங்கில படிவம் டவுன்லோட் செய்ய பின் வரும் சுட்டியை அழுத்துக

http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/English_HH_Side_A_NT.pdf
http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/English_HH_Side_B_NT.pdf
இதில் religion என்ற 7வது  அட்டவணையின் கீழ் முஸ்லிம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்க