#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

31 மார்ச், 2011

கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி




புதுதில்லி,மார்ச் 31: தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக - தேமுதிக - கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும் என்று இந்தியா டுடே - ஹெட்லைன்ஸ் டுடே - மெயில் டுடே - ஓஆர்ஜி ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பும் அவுட் லுக் வார இதழும் எம்டிஆர்ஏ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பும் தெரிவிக்கின்றன

இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடி: வெளியானது கணக்கெடுப்பு முடிவுகள்

 
புதுடில்லி: இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. உலக மக்கள்தொகையில் இது 17.5 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 18 கோடி அதிகரித்துள்ளது.

புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமீபத்தில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டது. இதில், அனைத்துவிதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை முன்னிலையில், இந்திய சென்சஸ் கமிஷனர் சி.சந்திர மவுலி நேற்று வெளியிட்டார்.

திமுக நபரால் சென்னை பாரி முனை பள்ளி இடிப்பு!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

சென்னை பாரி முனையில் இமேஜ் ஆப்டிகல் என்ற கட்டிடத்தின் மேல் பல வருடங்களாக அப்பகுதி வியபாரிகளுக்காக    தொழுகைப் பள்ளி ஒன்று நடை பெற்று வருகிறது!   அதை அந்த கட்டிட உரிமையாளர் பள்ளிக்கென வக்பு செய்து ,விற்றாலோ  அவரது வாரிசுகளோ உரிமை கொண்டாடக் கூடாது என சொல்லி தான் அந்த சொத்தை விற்றுள்ளார். ஆனால் வாங்கிய திமுக வடச்சென்னை  மாவட்ட செயலாளர் பாபுவின் அண்ணன் மகனாகிய சென்னை மாநகராட்சியின் கவுன்சிலர்  சீனிவாசன் எனும் தி.மு.க நபர் அதை மதிக்காமல் இரவோடு இரவாக தொழுகை பாய் ,  குரான்    போன்றவற்றை தூக்கி எறிந்து பள்ளியை இடிக்க துவங்கியுள்ளனர். மறுநாள் காலை பள்ளிக்கு வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து அனைவருக்கம் தகவல் தர 
 விஷயமறிந்த த.மு.மு.க  த.த.ஜ  INTJ  SDPI  .சகோதரர்கள் அனைவரும் வர

28 மார்ச், 2011

அதிமுக கூட்டணி தேர்தலில் வெல்லும்-144 சீட் கிடைக்கும்-கருத்துக் கணிப்பு



டெல்லி: லென்ஸ்ஆன்நியூஸ் என்ற இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லென்ஸ்ஆன்நியூஸ் இணையதளம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். இது தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

12 தொகுதிகளைத் தேர்வு செய்து அதில் 3000 பேரிடம் கருத்துக் கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்த இணையதளம்.

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது. இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் எம்.தமிமுன் அன்சாரி அவர்களும், ஆம்பூர் தொகுதியில் ஏ.அஸ்லம் பாஷா அவர்களும் போட்டியிடுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களை இன்று (28.03.2011) பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரிகள் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...


இந்நிலையில் இராமநாதபுரத்திலும், ஆம்பூரிலும் இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி தொகுதிக்கு புதன்கிழமை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

27 மார்ச், 2011

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி அணைத்துக்கட்சி ஊழியர்கள் கூட்டம்


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் மமக வேட்பாளர் எம்.தமிமுன் அன்சாரியை ஆதரித்து கூட்டணிக்கட்சிகளின் ஊழியர் கூட்டம் நடைப்பெற்றது.

அதில் அதிமுக, தேமுதிக மாவட்ட நிர்வாகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னனி கழகம் உள்ளிட்டகட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுனர். இதில் தேர்தல் பிரச்சார வியூகம்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. தொகுதி முழுவதும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு வெற்றிக்காக உழைப்பது என முடிவேடுக்கப்பட்டது.

மதுரை முஸ்லிம்கள் தேர்தல் புறக்கணிப்பு.


மார்ச் 26, கடந்த 1.03.2011 அன்று மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கடந்த 08.03.2011 முதல் அப்பாவி முஸ்லிம்களை சட்டவிரோத காவலில் வைத்தனர்.

4 நாட்கள் கடுமையான சித்திரவதை செய்து மாட்டுத்தலையை போட்டது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளுமாறு அடித்து துன்புறுத்தி வாக்குமூலங்களை பொய்யாக தாங்களே எழுதி, கத்திகளை சந்தையில் வாங்கி, ஆதாரங்களை போலியாக தயாரித்து பொய் வழக்கு புனைந்து அப்பாவி முஸ்லிம்கள் 5 நபர்களை சிறையிலடைத்தனர்.

இந்த இலவசங்கள் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா...

ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்க உள்ளன. பிற எந்த மாநிலத்தையும் விடவும், தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் தான் இலவசங்கள் பொங்கி வழிகின்றன. பிற மாநில அரசியல் கட்சிகள், தமிழக கட்சிகளின் தேர்தல் அறிக்கையை பார்த்து சிரிப்பாய் சிரிக்கக்கூடும். 

தமிழகத்தை விட பின்தங்கிய மே.வங்காளத்தில் எந்த கட்சியும் தம் தேர்தல் அறிக்கையில் -

26 மார்ச், 2011

தி.மு.க. ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மணல் கொள்ளை: ஜவாஹிருல்லா

ராமநாதபுரம், மார்ச் 24: கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மணல் கொள்ளை நடந்திருப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், ராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லா வியாழக்கிழமை தெரிவித்தார்.  

        ராமநாதபுரத்தில் அதிமுக-வின் கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சி சார்பில் அக் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். ராமநாதபுரத்தில் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்குப் பின்னர் அவர் மேலும் பேசியதாவது:

தி.மு.க., - மனிதநேய மக்கள் கட்சி கடும் போட்டி:சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

சென்னை:தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., - மனிதநேய மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுவதால் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி வரலாறு:மொத்தமுள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுவது, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பாடல் பெற்றதுமான பார்த்தசாரதி கோவில், பாரதியார் இறுதி காலத்தை கழித்தது, நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் வாழ்ந்தது, கடற்கரையை ஒட்டியது, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து மேல்நிலைப்பள்ளி, தென்னிந்தியாவின் பழமை வாய்ந்த மசூதிகள்கொண்டது என, பல்வேறு சிறப்பு பெற்ற இடங்கள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.புதிய, பழைய தலைமை செயலகங்கள், சென்னை பல்கலைக்கழகம், பழமை வாய்ந்த கல்லூரிகள், சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம், மத்திய ஆய்வு கூடம் ஆகியன இங்குள்ளன.

இதுவரை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் என தனித்தனி தொகுதிகளாக இருந்த தொகுதிகள்தற்போது இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என தொகுதிக்கு பெயரிடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின், 79, 81 முதல், 93, 95 முதல், 111 ஆகிய, வார்டுகள் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.இத்தொகுதிகளில் இதுவரை வென்றவர்கள்: சேப்பாக்கம் தொகுதியில், 1977, 80, 84 ஆகிய மூன்று தேர்தல்களில், தி.மு.க.,வின் ரகுமான்கான், 89ல், தேசிய லீக்கின் அப்துல் லத்தீப், 1991ல், காங்கிரசின் ஜீனத் ஷெரிப்தீன், பின்னர், 1996, 2001, 2006 ஆகிய மூன்று தேர்தல்களில், தி.மு.க., தலைவர் கருணாநிதியும் வெற்றி பெற்றனர்.

திருவல்லிக்கேணி தொகுதியில், 1952ல், காங்கிரசின் சம்பந்தம், 57ல், காங்கிரசின் ஹாஜா ஷெரீப், 1962, 67, 71ல், தி.மு.க.,வின் நெடுஞ்செழியன், 77ல், தி.மு.க.,வின் ரங்கநாதன், 80ல், காங்கிரசின் ஹாஜா ஷெரீப், 84ல், முஸ்லிம் லீக்கின் அப்துல் சமது, 89ல், தி.மு.க.,வின் நாஞ்சில் மனோகரன், 91ல், அ.தி.மு.க.,வின் முகமது ஆசீப், 96ல், தி.மு.க.,வின் நாஞ்சில் மனோகரன், 2001ல், தி.மு.க.,வின் உசைன், 2006ல், அ.தி.மு.க.,வின் பதர்சயீத்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தற்போதைய நிலவரம்: சேப்பாக்கம் தொகுதியில் கடந்த மூன்று முறை முதல்வர் கருணாநிதி வென்றிருந்தாலும், கழிவு நீர் பிரச்னை, இட நெருக்கடி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே இருந்து வருகின்றன.

புதிய தலைமை செயலகம் இட மாற்றத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மரங்கள் அழிப்பு போன்றவையும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. வி.ஐ.பி., தொகுதி என்பது மட்டுமே அவர்களின் சந்தோஷமாக இருந்தது.
கடந்த முறை இத்தொகுதியில் வென்ற கருணாநிதி இம்முறை திருவாரூரிலும், திருவல்லிக்கேணியில் வென்ற பதர்சயீத் வாய்ப்பு இல்லாததாலும் புது முகங்கள் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். தி.மு.க., சார்பில் இத்தொகுதியில், மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., கூட்டணியில் இத்தொகுதி மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில், மாநில துணைப் பொதுச் செயலர் தமீம் அன்சாரி போட்டியிடுகிறார்.பா.ஜ., கூட்டணி சார்பில், ஜனதா கட்சி வேட்பாளர் இத்தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அக்கட்சி சார்பில், எஸ்.வெங்கட்ராமன் போட்டியிடுகிறார்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு:இத்தொகுதியில் கணிசமான அளவிற்கு முஸ்லிம் ஓட்டுகளும், பிராமணர்கள் ஓட்டுகளும் உள்ளன.அ.தி.மு.க., கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுவதால், கணிசமான முஸ்லீம் ஓட்டுகளை அக்கட்சியும், பா.ஜ., கூட்டணி சார்பில் வெங்கட்ராமன் போட்டியிடுவதால், கணிசமான பிராமணர் ஓட்டுகளை அவரும் அறுவடை செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஏழைகளும், நடுத்தர மக்களும் இத்தொகுதியில் கணிசமான அளவில் உள்ளனர். அதனால், தி.மு.க.,விற்கு அக்கட்சி செய்த நலத்திட்ட உதவிகள் பெரும் உதவியாக இருக்கும். கடந்த தேர்தல் முடிவுகளை கூட்டி கழித்து பார்க்கும் போது, இத்தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற பிரகாசமான
வாய்ப்புகள் உள்ளன.இருப்பினும், பிரசார வியூகம், தேர்தல் நாள் நடைமுறைகள், வாக்கு பதிவு ஆகியவையே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும்.

வாக்காளர்கள்
ஆண் வாக்காளர்கள் -89 ஆயிரத்து 688
பெண்கள் - 89 ஆயிரத்து 815
திருநங்கைகள் - 7
மொத்தம் - 1 லட்சத்து 79 ஆயிரத்து 510
வாக்கு சாவடிகள் - 184
தேர்தல் அதிகாரி - சென்னை குடிநீர் வாரியபொது மேலாளர் பாஸ்கரன். போன்: 78450 20000.

நன்றி. தினமலர்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ம.ம.க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்


சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி போட்டியிடுகின்றார்.  சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜும்மா தொழுதுவிட்டு தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் சென்னை மாநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் பாஸ்கரன் அவர்களிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வரவேற்புடன் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி இன்று பகல் 3 மணியளவில் மனு தாக்கல் செய்தார்.

25 மார்ச், 2011

இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: ஜெ., புது வாக்குறுதி


திருச்சி: ""கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்கள் இடம்பெறாத வகையில் திருத்தியமைக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தி அறிவிக்கப்படும். இஸ்லாமியர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசினார்.

23 மார்ச், 2011

ஜப்பான் புத்துயிர் பெற 5 ஆண்டுகள் ஆகும்:உலக வங்கி கணக்கீடு!


சுனாமியால் சின்னாபின்னமாகிப்பேனா ஜப்பான் மீண்டும் புத்துயிர்பெற 5 ஆண்டுகள் ஆகும் என உலகவங்கி தெரிவி்துள்ளது.
ஜப்பானில் சென்டாய், புகூஷிமா ஆகிய மாகாணங்களில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தினால் சுனாமி தாக்கியது. 4-க்கும் மேற்பட்ட அணுஉலைகள் வெடித்து சிதறின. இந்த
‌கோரசம்பவத்தால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் சுனாமி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த உலகவங்கி ,ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியில் 0.5 அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏராளமான கட்டங்கள் மற்றும் சாலைகள்,
அணுஉலைகள் சேதமடைந்துள்ளதால் இவற்றின் மதிப்பு 235 பில்லியன் டாலர்கள் ஆகும். இவற்றினை சீரமைத்து உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள 5 ஆண்டுகள் ஆகும்.
ஏற்கனவே 33 மில்லியன் டாலர் அளவுக்கு தனியார் அமைப்பு வாயிலாகவும், ஜப்பானின் பட்ஜெட்டில் 12 மில்லியன் டாலர் அளவுக்கு நித ஒதுக்கீடு செய்து காப்பீடு (இன்சூரன்ஸ்)
செய்யப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பால் மின்சாதன மற்றம் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தான் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இவற்‌றை மீண்டும் செயல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க ஜப்பான் அரசு தீவிரம் காட்டிவருகிறது.
முன்னதாக உலகப்‌போரின் போது ஏற்பட்ட பாதிப்பை இந்த சுனாமி தாக்கியுள்ளதாக பிரதமர் நெட்டோ கான் குறிப்பிட்டிருந்தார். அந்தளவுக்கு பாதிப்பு கடுமையாக உள்ளதால் இவற்றை புனரமைக்க 5
ஆண்டுகள் வரை காலஅவகாசம் பிடிக்கும் என உலகவங்கி தெரிவித்துள்ளது.

கோடீஸ்வரனான ஐந்து வயது இந்திய சிறுவன்


துபாய் : துபாய் அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் சிறு சேமிப்பு திட்டத்தின் குலுக்கலில் ஐந்து வயது இந்திய சிறுவனுக்கு மில்லியன் திர்ஹம்கள் (சுமார் ஒன்றே கால் கோடி இந்திய ரூபாய்கள்) கிடைத்துள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் சில வருடங்களுக்கு முன் மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை பிரபலப்படுத்த அரசாங்க ஆதரவுடன் சில நிறுவனங்கள் நேஷனல் பாண்ட்ஸ் எனும் திட்டத்தை ஆரம்பித்தன. இதில் சிறு தொகை கூட யார் வேண்டுமானாலும் மாதந்தோறும் கட்டலாம். இத்தொகை முஸ்லீம்களின் மதமான இஸ்லாம் அனுமதித்த தொழில்களில் முதலீடு செய்யப்பட்டு லாபம் பகிர்ந்தளிக்கப்படும்.
மேலும் மாதந்தோறும் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மில்லியன் அமீரக திர்ஹம்கள் வழங்கப்படுவார். பிப்ரவரி 2011க்கான குலுக்கலில் இப்ராஹிம் பஹூமுதீன் ஷேக் எனும் ஐந்து வயது இந்திய சிறுவனுக்கு பரிசு கிடைத்துள்ளது. முதலில் இப்பரிசு குறித்து தொலைபேசியில் செய்தி கிடைத்த போது இப்ராஹிமின் தந்தை ஏதோ சில நிறுவனங்கள் பணம் பறிக்க செய்யும் உபாயம் என்று நினைத்தார். பின் தான் உண்மையிலேயே நேஷனல் பாண்ட்ஸ் சேர்மனுடன் பேசுகிறோம் என்பதை உணர்ந்தார்.
பரிசு பணமான கோடி ரூபாயை கொண்டு தான் கேண்டியும் இனிப்பும் வாங்குவேன் என்றும் தன் தந்தை போல் பணத்தை சேமிப்பேன் என்றும் ஐந்து வயது இப்ராஹீம் தெரிவித்தான். இது வரை இக்குலுக்கலில் கோடீஸ்வரர்களாக ஆனவர்களில் 63 சதவிகிதம் நபர்கள் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ம.ம.க. வேட்பாளர்கள் விவரக் குறிப்புகள்

பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் (வயது 51)

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக இராமநாதபுரம் சட்டமன்ற வேட்பாளராக பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.பி.ஏ. எம்.பில் படித்து வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் 25 ஆண்டுகாலம் பேராசிரியராகப் பணியாற்றிய ஜவாஹிருல்லாஹ் வட்டியில்லா வங்கி குறித்த ஆய்விற்காக சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பிறந்த பேராசிரியர் மாணவர் பருவம் முதல் பொதுப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

22 மார்ச், 2011

தி.மு.க.,வின் இலவசங்களால் மக்கள் நிலை மாறவில்லை:ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

சென்னை:""தி.மு.க., அரசு கொடுத்த இலவசங்களால் தமிழக மக்களின் நிலை மாறவில்லை,'' என, ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதற்காக ம.ம.க., பாடுபடும். ம.ம.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்று, மக்களுக்காக உழைக்கும் எம்.எல்.ஏ.,க்களாக செயல்படுவர்.கடந்த காலங்களில், தி.மு.க., அரசு கொடுத்த இலவசங்களால் மக்களின் நிலை எந்த விதத்திலும் மாறவில்லை.
ஐந்து ஆண்டு தி.மு.க., ஆட்சியில் மக்களை சுரண்டி ஏமாற்றி விட்டனர். இனி அவர்கள் ஆட்சி வந்தால் மன்னராட்சியாக மாறிவிடும். இலங்கையிலும், இங்கும் இருக்கும் தமிழர்களை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை.அரசு கேபிள் "டிவி'யை, 100 கோடியில் துவக்கி, இன்று அதன் நிலை என்னவென்றே தெரியவில்லை. நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொடர் மின்வெட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெட்டி கொல்லப்பட்டார்.இந்த பிரச்னைகளை முன்வைத்து பிரசாரம் செய்வோம். ஜெயலலிதாவும், விஜயகாந்தும் எங்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்வர். எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்று தொகுதிகளிலேயே தங்கியிருந்து மக்களுக்கு பணியாற்றுவர்.இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

21 மார்ச், 2011

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு


சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அந்தக் கட்சி நேற்று அறிவித்தது."ராமநாதபுரம் தொகுதியில் ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் ம.ம.க., துணை பொதுச்செயலர் தமீமுன் அன்சாரி, ஆம்பூரில் வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்லாம் பாஷா போட்டியிடுவர்' என, த.மு.மு.க., பொதுச்செயலர் ஹைதர் அலி அறிவித்தார். பின், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.ராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு வயது 50, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பிறந்தவர்; சென்னையில் வசிக்கிறார். பி.காம்., எம்.பி.ஏ., எம்.பில்., பி.எச்.டி., பட்டங்கள் பெற்றவர்.
வட்டியில்லா வங்கி தொடர்பாக ஆய்வு செய்து சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 25 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார். இந்திய சிறுபான்மை மக்கள் சார்பில் 2002ல் ஜெனிவாவில் உள்ள, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் ஆய்வறிக்கை சமர்பித்தவர். த.மு.மு.க., மற்றும் ம.ம.க., தலைவர். கடந்த லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறையில் ம.ம.க., சார்பில் போட்டியிட்டார். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வேட்பாளர் தமீமுன் அன்சாரிக்கு வயது 34. நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர். சென்னை திருவல்லிக்கேணியில் பல ஆண்டுகளாக வசிக்கிறார். சென்னை புதுக்கல்லூரியில் பி.ஏ., கார்ப்பரேட் பட்டம் பெற்றார். புதுக் கல்லூரி மாணவர் சங்க தலைவராக இருந்துள்ளார். ம.ம.க., மாநில துணை பொதுச் செயலராக உள்ளார். தமிழ், ஆங்கில மொழி தெரிந்தவர்.ஆம்பூர் வேட்பாளர் அஸ்லாம் பாஷாவுக்கு வயது 42. ஆம்பூர் அருகே புதூர் கிராமத்தை சொந்த ஊராக கொண்டவர். பி.ஏ., பட்டதாரி. தமிழ், ஆங்கிலம், உருது மொழி தெரிந்தவர். ம.ம.க.,வில் வேலூர் மேற்கு மாவட்ட செயலராக உள்ளார்.

20 மார்ச், 2011

மதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி, இடதுசாரிகள்


சென்னை, மார்ச் 20: மதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: 

 காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், திமுக தலைமையிலான மாநில அரசும் கடைபிடித்து வரும் தவறான பொருளாதாரக் கொள்கையினால் விலைவாசி உயர்வு, விவசாயத்தில் சரிவு, மின்வெட்டு, தொழில் நலிவு, வேலையின்மை என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
 நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஊழல் கூட்டணியான திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவது என்பது, மக்கள் முன்னுள்ள முக்கியமான கடமையாக உள்ளது. இத்தகைய போராட்டத்தில் அதிமுக தலைமையில் தேமுதிக, மாக்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஃபார்வர்டு பிளாக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன.

 மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் மதிமுகவின் பங்களிப்பு முக்கியமானது. இத்தகைய சூழலில் மதிமுக, தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று எடுத்துள்ள முடிவு வேதனையளிக்கிறது. மதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.

 இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுவந்த மதிமுக இப்போது தேர்தலை புறக்கணிப்போம் என்று முடிவு எடுத்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

 இந்த முடிவை மதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிமுக பொதுச் செயலாளரும் இதற்கான சுமூகத் தீர்வை உருவாக்கித்தர வேண்டும் எனக் கூறியுள்ளார். 

 ஜவாஹிருல்லாஹ்: தேர்தல் புறக்கணிப்பு முடிவை மதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கூறியுள்ளார்.


 நன்றி.தினமணி

அ.தி.மு.க.,வுடன் கொள்கை கூட்டணி இல்லை:த.மு.மு.க., மாநில செயலர் அறிவிப்பு

ஊட்டி:""அ.தி.மு.க.,வுடன், தேர்தல் கூட்டணி மட்டுமே; கொள்கை கூட்டணி இல்லை,'' என, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலர் கூறினார்.த.மு.மு.க., மாநில செயலர் உமர் ஹாஜி, ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:அ.தி.மு.க., கூட்டணியில், மனித நேய மக்கள் கட்சி, ராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கத்தில் போட்டியிடுகிறது.
இந்த தொகுதிகள் மட்டுமல்லாமல், 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற, கட்சித் தொண்டர்கள் பாடுபடுவர். தி.மு.க., ஆட்சியால், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரசாரம் செய்வோம்.அ.தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி, சிறிது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது; கூட்டணியில், ம.தி.மு.க., இடம் பெறாதது துரதிஷ்டவசமானது. முஸ்லிம் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை, 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்; அமல்படுத்துவதை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஏராளமான இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; இத்திட்டங்கள், மனிதனை சோம்பேறியாக்கி விடும்; மேலும், கடத்தலுக்கு வழிவகுக்கும். இலவச திட்டங்களால், தமிழகத்தின் கடன், ஒரு லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அ.தி.மு.க., உடனான கூட்டணி, தேர்தல் கூட்டணி மட்டுமே; கொள்கை கூட்டணியில்லை.இவ்வாறு, உமர் ஹாஜி கூறினார்.

    நன்றி.தினமலர்   

அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு



டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் பழுதடைந்துள்ள உலைகள் மூடப்பட்டு விடும் என்று, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பலியானோர் மற்றும் மாயமானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொட்டு விட்டது.
புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் தற்போது, 1 மற்றும் 2ம் உலைகளில், மின்சார கேபிள்கள் இணைப்புப் பணி முடிந்து, 2ம் உலையில், மின்சாரம் மூலம் நீரை உலைக்குள் செலுத்தும் பணி துவங்கி விட்டது.

தமுமுக தலைமையகத்திற்கு சரத்குமார் வருகை


தமுமுக தலைமையகத்திற்கு இன்று (19-03-2011) மாலை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் வருகை புரிந்தனர். அவர்களை தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். இச்சந்திப்பின் போது அதிமுக தலைமையிலான கூட்டணியின் தேர்தல் வியூகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.

19 மார்ச், 2011

முஸ்லிம் அமைப்புகளுடன் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு சட்டமன்றத் தேர்தலுக்கு ஆதரவு திரட்டினர்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன்...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன்...
சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அதிமுக கூட்டணிக்கும் ஆதரவு கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் ஆகியோர் சந்தித்து வருகிறார்கள்.
ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் நிர்வாகிகளுடன்...
ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் நிர்வாகிகளுடன்...


கடந்த 4.3.2011 அன்று பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். 5.3.2011 அன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் ஆகிய அமைப்புகளின் தலைவர்களை ம.ம.க. தலைமை நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டினர்.

18 மார்ச், 2011

பேச்சுவார்த்தையில் சிக்கல் தீர்ந்தது; கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜெயலலிதா சந்திப்பு

 
மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆம்பூர், ராமநாதபுரம், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
கூட்டணி கட்சி தலைவர்களை ஜெயலலிதா நேற்று சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து கூட்டணியில் உருவாகி இருந்த சிக்கல் தீர்ந்தது. இந்திய கம்யூனிஸ்டு உள்பட 7 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் உடன்பாடு ஏற்பட்டது.
 
கட்சிகள் அதிர்ச்சி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட்டது. இதில், ம.தி.மு.க.வை தவிர, மற்ற அனைத்து கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டது.

குழந்தைகளை பாராட்டுங்கள்!

ஒரு வயது கூட நிரம்பியிருக்காது அக்குழந்தைக்கு. அதன் தாய் அந்தக் குழந்தை விளையாடுவதற்காக சில ப்ளாஸ்டிக் டப்பாக்களை எடுத்து வருகிறார். குழந்தைக்கு முன்னே அமர்ந்து கொண்டு அவைகளை எப்படி அடுக்கிட வேண்டும் என்று செய்து காட்டுகிறார். குழந்தை அந்த டப்பாக்களை எடுத்து வைத்துக் கொண்டு அடுக்கத் தொடங்குகிறது. ஒரு டப்பா உருண்டோடுகிறது. அம்மா அதனை எடுத்து மீண்டும் குழந்தையிடம் கொடுக்கிறார். குழந்தை அம்மாவைப் பார்த்து சிரித்த படி மீண்டும் முயற்சி செய்கிறது. இதோ அடுக்கியும் விட்டது. கண்கள் பளிச்சிட அம்மாவை கவனிக்கிறது. அதன் பொருள் என்ன? 'அம்மா, எப்படி என் சாதனை?' அம்மாவும் கை கொட்டி சிரிக்கிறார். அப்படியே தன் குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறார். குழந்தை தன் தாயின் பாராட்டு மழையில் அப்படியே நனைகின்றது.

திருக்குரானும் அறிவியல் உண்மையும்!!!

திருக்குர்ஆன் விளக்கம்(419)வான் மழையின் இரகசியம் இவ்வசனத்தில் (24:43) 'வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது' என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது. பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தி யிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். இம்மேகங்களின் பிரமாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்கவில்லை. மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடொன்றாக இழுத்து இணைக்கப்பட்டு ஆலங்கட்டி (பனிக் கட்டி) தொகுப்புகளாக மாற்றப்படுகிறது.

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு


அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

2) ஆம்பூர்

3) இராமநாதபுரம்

16 மார்ச், 2011

சாதிக் பாட்சா மர்ம மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் நியமிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழ-ல் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பரும் அவரது பினாமி என்று சொல்லப்பட்டவருமான சாதிக் பாட்சா மர்ம மரணம் அடைந்திருப்பது தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இது தற்கொலை என்று கூறப்படுவதை நாட்டு மக்கள் யாரும் நம்பமாட்டார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் முதல் குற்றவாளியான ஆ.ராசாவும், தமிழக முதல்வரின் குடும்பத்தினரும் விசாரணையை எதிர்கொண்டு சமாளித்துக் கொண்டிருக்கும் போது, பினாமியான சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இந்த மரணத்தில் பயங்கரமான பின்னணியும், உண்மைகளை சாகடிக்கும் முயற்சியும் இருக்கிறதோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
எனவே, சாதிக் பாட்சாவின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோருகிறது.
 

15 மார்ச், 2011

தேர்தலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு!


அல்லாஹ்வின் பேரருளால், இன்று (15.03.2011) சென்னை இம்பிரியல் ஹோட்டலில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு மிக உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவரின் ஏகோபித்த முடிவின்படி கீழ்கண்ட தீர்மானத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் முடிவு எடுத்தது. அல்ஹம்துலில்லாஹ்.

அ.தி.மு.க., வெற்றிக்கு பாடுபட மனித நேய மக்கள் கட்சி முடிவு

புவனகிரி : புவனகிரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவது என மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் புவனகிரியில் நடந்தது. மாவட்டத் தலைவர் மெஹராஜூதீன் தலைமை தாங்கினார். செயலர் அமானுல்லா முன்னிலை வகித்தார். துணைச் செயலர் அல்தாப் உசேன் வரவேற்றார். கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் புவனகிரி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது, நகரின் மைய பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக இருந்து வரும் டாஸ்மாக் கடைகளை நகருக்கு வெளியே மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    
நன்றி.தினமலர் 

கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு Part-01

1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15, இந்தியா விடுதலை பெற்றதும், பிரிவினையின்  மூலம் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது.அதனைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பிரிவினைக்கு காரணமான சங்பரிவார பாசிச சக்திகளின் சதி திட்டங்களை மறைத்து, முஸ்லிம்களே காரணம் என்றும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியான “முஸ்லிம் லீக்” தான் காரணம் என்றும் நாடு முழுவதும் முஸ்லிம் லீக்கை துடைத்தெறிய அப்போதைய பாசிச சிந்தனை ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலால் முஸ்லிம்களின் அரசியல் சக்தி சிதைக்கப்பட்டது. லீக்கின் தலைவர்கள் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தனர். வட மாநிலங்களில் பல முக்கியத் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.

ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முதலிடம்


:உலகில் அதிக அளவு ஆயுதங்களை இறக்குமதிச் செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. சீனாவை முந்திய இந்தியா ஆயுத இறக்குமதியில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஸ்டாக்ஹோம் இண்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஆய்வில் இந்தியாவை ஆயுத இறக்குமதியில் முதலிடத்திலிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

2006-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டுவரை ஒன்பது சதவீதம் அனைத்து சர்வதேச ஆயுதங்களையும் இந்தியா இறக்குமதிச் செய்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதேவேளையில், சீனா ஆறு சதவீதம் மட்டுமே சர்வதேச அளவில் ஆயுதங்களை இறக்குமதிச் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சீனா

2030 ஆம் ஆண்டில் மணமகள் கிடைப்பது கடினம்

டொரான்டோ,மார்ச்.15:இந்தியா,சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் கருக்கலைப்பின் காரணமாக 2030 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு திருமணம் முடிக்க மணப்பெண் கிடைப்பது அரிதாகும் என கனேடியன் மெடிக்கல் அசோசியேசன் ஜெர்னலில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.

20 சதவீதம் ஆண்களுக்கு மணப்பெண் கிடைக்கமாட்டார்கள் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேற்கண்ட நாடுகளில் 105 ஆண் குழந்தைகள் பிறக்கும் பொழுது 100 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றனர். இது சில கொரிய நகரங்களில் 125 வரை எட்டியுள்ளது.

கர்ப்பத்திலிருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என்பதுக் குறித்து பரிசோதனைச் செய்யும் ஸ்கேனிங் செண்டர்கள் கட்டுப்பாடுகளில்லாமல் செயல்படுவதால் பெண் சிசுக்கொலை அதிகரிப்பதற்கு காரணமாகும்.

செய்தி:மாத்யமம்

13 மார்ச், 2011

10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டி!!

சென்னை,மார்ச்.13: சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டிடப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி தனித்துப் போட்டியிடும் தொகுதிகளில் முதல்கட்டமாக ஆறு தொகுதிகளை எஸ்.டி.பி.ஐ. அறிவித்துள்ளது.

முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்புவாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி எஸ்.டி.பி.ஐ. 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது.

மேலும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியை பொறுத்தவரைக்கும் வெற்றி தோல்வியை குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துக்கள் மற்றும் பழங்குடியினர் இவர்களுடைய அரசியல் அதிகாரத்தின் நலனை கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக் கூடிய அரசியல் கட்சி" என்றார்.

1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்)
2.இராமநாதபுரம்
3.பூம்புகார் (நாகை மாவட்டம்)
4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்)
5.துறைமுகம் (சென்னை) ஆகிய ஐந்து தொகுதிகளும்
6.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் ஆகிய தொகுதியும் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை...



தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் தேர்தல் களம் இன்னும் சூடு பிடித்ததாக தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகள் யார் என்றே முடிவு செய்யப்படவில்லை. அம்மாவின் தரிசனத்திற்காக வைகோவும் காம்ரேட்களும் தவமாய் தவமிருந்தும்.........

நெல்லிக்காய் அதன் மருத்துவகுணம் !!!


ஆமலகம் என்று கூறப்படும் நெல்லியின் மருத்துவ குணங்களைப் பற்றிதெரிந்துகொள்வோம். கருநெல்லி (கிடைப்பது அரிது), அருநெல்லி (எளிதில் கிடைக்கும்) என இரு வகைப்படும். நெல்லிக்காய் பசுமை நிறமாகவும், நெல்லிப்பழம் வெண்மஞ்சள் நிறமாகவும் காணப்படும். நெல்லிப்பழம் உலர்ந்த பின்னர் கருப்பாக இருக்கும். இதற்கு நெல்லிமுள்ளி என்று பெயர். இதனை நெல்லி வற்றல் என்றும் அழைப்பர். நெல்லி முச்சுவை உடையது; முதல் சுவை புளிப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். நெல்லியை சுவைத்த பின்னர் தண்ணீர் அருந்தியவுடன், இனிப்புச் சுவையான நீர்போல் சுவைப்பதன் காரணம் இதுதான்.

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.

அதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள் :

12 மார்ச், 2011

மேலப்பாளையத்தில் காதியானிகளுக்கு எதிராக அனைத்து ஜமாஅத் ஆலோசனைக்கூட்டம்!

ஒரு முஸ்லிமின் ஈமானில் இறைவனை  ஏகனாக கருதுவதும், முஹம்மது (ஸல்) அவர்களை இறுதி நபியாக ஏற்பதும், அவர்களுக்கு பின்பு எந்த நபியும் இல்லை என முற்றிலுமாக நம்புவதே ஈமானாகும்.

ஆனால் தனது நாவன்மையால் சதி செய்த  நாசகரன் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி, தன்னை நபி என அறிவித்ததுடன் அதற்கு என ஒரு கூட்டத்தை உருவாக்கினான்.

அவனது நச்சு வார்த்தைகளில் மயங்கிய ஒரு கூட்டம், இவனது வார்த்தைகள் உண்மையனாது என நம்பி முஸ்லிம் சமுதாயத்தை வழி கெடுத்துக் கொண்டு இருக்கிறது.

இந்த கூட்டம்  முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் மேலப்பாளையத்திற்குள் மெல்ல மெல்ல ஊடுருவி தனது நச்சை கலந்து வருகிறது. இவர்களின் நச்சு கருத்தை அறியாமல் சுமார் 300 குடும்பங்கள் காதியானிகளாக மாறி விட்டனர். (அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத்தை வழங்கி திரும்ப  இஸ்லாத்திற்குள் நுழைய துஆ செய்வோம்)  இவர்களும் முஸ்லிம்கள் என்ற உணர்வுடன் நம் சமுதாய மக்கள் பழகி வருகின்றனர்.

இவர்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் முகமாக நாளை (13.03.2011) ஞாயிறு அன்று மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாஅத்தினரும் ஒன்று கூடும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர், முஹம்மது முனீர், தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் மவ்லவி அப்துர் ரஹ்மான், PFI, ஷரியத் பாதுகாப்பு பேரவை, தேசியலீக் உள்ளிட்டவைகள் கலந்து கொள்ள இருக்கின்றன.

 

சிறுபான்மையினரின் காவலனா தி.மு.க.?-சீறுகிறார் ஜவாஹிருல்லா -ஜீனியர் விகடனில் பிரசுரமான பேட்டி



'2009    மக்களவைத் தேர்தலில் தி.மு.க.அணியில், இரண்டு எம்.பி. ஸீட் தரவில்லை’ என த.மு.மு.க-வின் மனித நேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டனர். இந்த முறை அ.தி.மு.க. அணியில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே பெற்று த.மு.மு.க-வின் 'ம.ம.க.’ போட்டியிடுகிறது. ஏன் இந்த மனமாற்றம்? தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்டோம்.

''அ.தி.மு.க. அணியில் லட்சியம் 12, நிச்சயம் 6 பெறு​வோம் என சொன்னீர்கள். கடைசியில் மூன்று தொகுதிகள்தானே பெற முடிந்தது?''

தொகுதி - ஓர் அறிமுகம்! - காட்டுமன்னார்கோவில் (தனி)


தொகுதி பெயர் : காட்டுமன்னார்கோவில் (தனி)

தொகுதி எண் : 159
அறிமுகம் :

காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி, கிழக்கு, தெற்கே நாகை மாவட்டமும், மேற்கே அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களையும், வடக்கே புவனகிரி தொகுதியையும் எல்லையாக கொண்டு அமைந்துள்ளது.
தனித்தன்மை :

சீரமைக்கப்பட்ட இத்தொகுதியில் சிதம்பரம் தொகுதியிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியிலிருந்து அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 4 ஊராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது...........

11 மார்ச், 2011

தேர்தல் புகார் கொடுக்கணுமா?-7598700298 எண்ணில் தொடர்பு கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுரை



சென்னை: தமிழகத்திற்கு வந்துள்ள தேர்தல் பார்வையாளர் வீடியோ காமிராவுடன் கண்காணிப்பில் ஈடுபடுவார். மேலும், அவரை பொது மக்களும், அரசியல் கட்சியினரும் தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை சந்தித்து புகார் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை கண்காணிப்பதற்காக வெளிமாநில ஐ.ஜி.க்கள் 4 பேர் நேற்று தமிழகம் வந்துள்ளனர். இதில் ஹைதராபாத் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஜிதேந்தர் வட மாவட்டங்களின் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்..........

தி.மு.க. ஆட்சியை அகற்றும் வல்லமை அ.தி.மு.க. கூட்டணிக்கு உள்ளது


திருச்சியில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளிக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், த.மு.மு.க. மாநிலத் தலைவருமான எம்.எச
திருச்சி, மார்ச் 11: தி.மு.க. ஆட்சியை அகற்றும் வல்லமை அ.தி.மு.க. கூட்டணிக்கு உள்ளது என்றார் த.மு.மு.க. மாநிலத் தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான எம்.எச். ஜவாஹிருல்லா.திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:மனிதநேய மக்கள் கட்சி முதன்முதலாக சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3 தொகுதிகளிலும் நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்ற கருத்துக்கு அ.தி.மு.க. எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.இரட்டை மெழுகுவர்த்தி அல்லது தராசு சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் அனைத்து அம்சங்களிலும் மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.கடந்த ஐந்தாண்டுகளில் காவல் நிலையங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் 46 பேர் இறந்துள்ளனர். மோதல் கொலைகள் மூலம் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.ஆண்டுக்கு ரூ.11,900 கோடி வீதம் கடந்த ஐந்தாண்டுகளில் ஏறத்தாழ ரூ.59,500 கோடி அளவுக்கு மணல் வளம் ஆளுங்கட்சியினரால் சுரண்டப்பட்டுள்ளது. மணல் அள்ளப்படுவதால் நீர்வளமும், நில வளமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.இலவச கான்கிரீட் வீடு வழங்கும் திட்டம் மக்களை வஞ்சிக்கும் திட்டமாக உள்ளது. இந்தத் திட்டத்தில் வீடு கிடைக்கும் என நினைத்தவர்கள் தற்போது தங்களது வீடுகளை இழந்து நிற்கின்றனர்.கடந்த ஐந்தாண்டுகளாக மக்களை வஞ்சித்து வரும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வல்லமை அ.தி.மு.க. கூட்டணிக்கு உள்ளது என்றார் அவர்.
 
நன்றி.தினமணி   

ஜப்பானைத் தாக்கிய சுனாமியால் இந்திய கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்தில்லை

Japan Tsunamiஜப்பானை இன்று காலை 8.9 ரிக்டர் அளவிலான பயங்க பூகம்பம் தாக்கியது. இதையடுத்து அங்கு சுனாமி அலைகள் தாக்கின. இதில் பெரும் சீரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த சுனாமியைத் தொடர்ந்து, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஹவாய் தீவுகள், மெக்சிகோ, தைவான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்திய கடலோரப் பகுதிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அங்கு சுனாமி அலைகள் தாக்க வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 மார்ச், 2011

.தினமலரின் நேர்காணல்

 
ஜவாஹிருல்லா தலைவர், மனிதநேய மக்கள் கட்சி:தி.மு.க.,வை முஸ்லிம்கள் ஆதரிப்பது ஒரு மாயை""இஸ்லாமியர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.,வுக்கு இல்லை. தற்போது கூட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கி, ஒரு தொகுதியை பிடுங்கிவிட்டார் கருணாநிதி!'மற்ற முஸ்லிம் கட்சிகள் தி.மு.க.,வை ஆதரிக்கும் போது நீங்கள் மட்டும் இதில் மாறுபட்டது ஏன்?இது தவறான கருத்து. மக்கள் ஆதரவு உள்ள பல முஸ்லிம் அமைப்புகள், ஜமாத்துக்கள், அ.தி.மு.க.,வை தான் ஆதரிக்கின்றன. சிறுபான்மை அணியை சேர்ந்த சில, "லெட்டர் பேடு' அமைப்புக்களை அறிவாலயத்திற்கு அழைத்து, துணை முதல்வருக்கு மாலை, சால்வை அணிவித்து, போட்டோ எடுத்துக் கொண்டு, முஸ்லிம்கள் தி.மு.க.,வை ஆதரிப்பதாக ஒரு மாயையை உருவாக்கியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தினரின் கோரிக்கையை தி.மு.க.,............

ஓர் வஃபாத் செய்தி

நமதூர் பெரிய பள்ளிவாசல் தெருவில் இருக்கும் (மர்ஹும்) மொவ்லவி இனாயத்துல்லாஹ் மகளும் இக்பால்&அய்யுப் இவர்களின் சகோதரி ராபியத்துபஷரியா     அவர்கள் இன்று 11.02.2012 காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை     தந்தருளவேண்டும் என.  கொள்ளுமேடு அல்ஹைராத்
 இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.






09 மார்ச், 2011

“செக்ஸ்” புகாரில் சிக்கிய இந்து மத சாமியாருக்கு 14 ஆண்டு ஜெயில்; அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு

 
 
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி (82). இந்துமத சாமியாரான இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென்மேற்கு ஆஸ்டின் நகரில் 200 ஏக்கரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரை “சுவாமிஜி” என்று பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர். இவர் மீது 2 பெண்கள் செக்ஸ் புகார் கூறி இருந்தனர்.
 
அவர்கள் இருவரும் ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள்.   “டீன்ஏஜ்” பருவத்தில் இருந்தபோது, அதாவது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாமியார் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி இவர்களுடன் “செக்ஸ்” உறவில் ஈடுபட்டதாக புகார் செய்தனர்.   கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணை ஹீல்டன் மாவட்ட கோர்ட்டில் நடந்தது.   வழக்கை விசாரித்த நீதிபதி சார்லஸ் ராம்சே குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி சுவாமிக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ.90 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
 
நன்றி.மாலைமலர்

தி.மு.க., க்கு முஸ்லிம் லீக் எதிர்ப்பு

கீழக்கரை:தி.மு.க., சார்பாக முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றை மீண்டும் தி.மு.க.,திரும்ப பெற்றுக் கொண்டதால் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு கூட்டணிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை மண்டல அமைப்பு செயலாளர் ஜஹாங்கீர் அரூஸி கூறியதாவதுஸ்பெக்ட்ரம் ஊழல்,விலைவாசி உயர்வு,மின்வெட்டு,ஒரு குடும்ப ஆட்சி முறைகளால் தி.மு.க.,மீதும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீதும் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக மக்கள் கருதுகின்றனர்.ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றை தி.மு.க.,திரும்ப பெற்றுக் கொண்டதை தொண்டர்கள் ஏற்று கொள்ளவில்லை. மக்களின் வெறுப்புக்குரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை. இந்த கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை முஸ்லிம் லீக் தலைமை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

நன்றி.தினமலர்

குடோன்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கல்: மனித நேய மக்கள் கட்சி தலைவர் "பகீர்'

 

சென்னை: ""தமிழகம் முழுவதும் குடோன்களில், தி.மு.க.,வினர் பல ஆயிரம்
கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளனர். இவற்றை தேர்தல் கமிஷன் கண்டறிந்து முடக்கினால் மட்டுமே இந்த தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறும்,'' என, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார்.

இது குறித்து, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியதாவது: தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரின் நடவடிக்கைகள், பேச்சுக்கள், சட்டசபை தேர்தலை நடுநிலையாக நடத்த வேண்டும் என்று அவர் விரும்புவதை காட்டுகிறது. சமீபத்தில், குண்டல்பட்டியில் கூட அதிரடி வாகன சோதனைகள் நடத்தி, பல லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றியிருக்கின்றனர். தேர்தலை நடுநிலையாக நடத்த, தேர்தல் அதிகாரிகளின் பேச்சுக்கள், செயல் வடிவம் பெற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள குடோன்களில், தி.மு.க.,வினர் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இது, மத்திய, மாநில உளவுத் துறைகளுக்கு நன்றாகவே தெரியும். இந்த பணத்தைக் கொடுத்து வாக்காளர்களைக் கவர, தி.மு.க., நினைக்கிறது. தலைமை தேர்தல் கமிஷனர் இது குறித்து அதிரடி ஆய்வு நடத்தி, குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை கைப்பற்ற வேண்டும். அப்போது தான், தேர்தல் கமிஷன் நினைக்கும் வகையில் தேர்தல் நடுநிலையாக நடக்கும். இவ்வாறு பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார்.

நன்றி.தினமலர்

08 மார்ச், 2011

உலகின் மிகச் சிறிய தாய்'

 




பெண்ணிற்கு பெருமை தாய்மை அடைதல் என்று கூறுவார்கள். ஆனால் உலகில் பிறக்கும் எல்லாப் பெண்களும் தாய் ஸ்தானத்தை அடைவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உயரமும் இங்கு செல்வாக்குச் செலுத்துகிறது.



அமெரிக்காவைச் சேர்ந்த Stacey Herald உலகின் மிகச் சிறிய தாய் என்ற சாதனையை படைத்துள்ளார். 37 வயதான இவர் 2 அடி 4 அங்குலம் உயரத்தை கொண்டுள்ளார். 2005 ஆம் ஆண்டில் இவருக்கு திருமணமாகியுள்ளது. இவரது கணவணின் வயது 28. சாதாரணமாக உயரம் குறைந்த பெண்களுக்கு பிள்ளைகள் இல்லை அல்லது குறைவு என்றே சொல்ல வேண்டும் ஆனால் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.இதற்கு உலகின் மிகச்சிறிய தாய் என்ற கின்னஸ் சாதனையை Cristianne Ray பெற்றார். இவர் 2 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவராவார்.

  .

07 மார்ச், 2011

பக்தி என்ற பெயரிலே புரோகிதம் வளர்க்கும் தினமலர்!!


 
மார்ச்:5, நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து வந்த முத்தம்மாள், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார். பதமாக வெந்த அப்பத்தையும் கையாலேயே எடுத்தார். இவ்வாறு 25 பெட்டி நிறைய அப்பம் சுட்டார். இதை பார்க்க ராஜபாளையம், சிவகாசி பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். பின் இந்த அப்பங்கள் அம்மனுக்கு படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இதற்காக மடத்துப்பட்டி முத்தம்மாள், மூன்று மாதம் விரதமிருந்தார்.( செய்திகள்: தினமலர்).

சிந்திக்கவும்: எங்கே இந்த நாடு உருப்பிட போகுது. இந்த புரோகித பார்ப்பன தினமலரின் மூட நம்பிக்கையை பாருங்கள். இதை ஒரு செய்தியாக பெரிய படத்துடன் போட்டுள்ளது. இந்த நூற்றாண்டில் இப்படியும் மக்களா? அடபாவிகளா! "பாட்டி வடை சுட்டாள் காக்காய் தூக்கிட்டு போயிட்டு" என்று எத்தனை நாளுக்கு கதை சொல்வீர்கள். பக்தி என்கிறபெயரில் இப்படி ஒரு கிறுக்குத்தனம் அதற்க்கு வக்கலாத்து வாங்கும் பார்பன வந்தேறி கூட்டம். இந்த அப்பம் சுட மூன்று மாதம் விரதம் வேறு. அட முட்டாள்களா? செட்லைட்டும், 3 ஜியும், விடியோ கான்பிரன்ஸ் என்று உலகம் எங்கோ போயிகிட்டு இருக்கு இவர்கள் என்னவென்றால்? இன்னும் கற்காலத்தில் இருகிறார்கள்.

தீ மிதிப்பது முதல் லிங்கம் எடுப்பதுவரை, அழகு குத்துவது முதல் திருநீறு வரவழைப்பது வரை எல்லா வித்தைகளையும் திக காரர்கள் செய்து காட்டிவிட்டார்கள், இருத்தும் நீங்கள் திருந்தமாட்டீன்களா? இதை ஒரு அற்புதம் மாதிரி இந்த தினமலர் மோடிவித்தைகாரர்கள் செய்திபோட்டு ஹிந்துத்துவா வை வளர்கிரார்களாம். ஏன்? எல்லா சாமியாரும், பூசாரியும், திருநீறும், லிங்கமும், தீசட்டியும் இப்படி பழசையே செய்கிறார்கள். அமெரிக்காகாரன் ராகெட் உட்டான் என்றால்? உங்கள் பார்பன புரோகிதர்கள் அட்லீஸ்ட் ஒரு தட்டையாவது பறக்க விடட்டுமே. என்னங்கடா மாய்மாலம் பண்றீன்கள். இதை தினமலரின் பார்பன புரோகித வளர்ப்பு சித்தாந்தமாகவே நம்மால் பார்க்க முடிகிறது.

அன்புடன்: ஆசிரியர் புதியதென்றல்

06 மார்ச், 2011

சீனாவில் பிடிபட்ட மிகபெரியா சுறா மீன்

சீனாவில் பிடிபட்ட மிகபெரியா சுறா மீன் இந்த மீனானது சுமார் 7mm நீளமும் 4 ஆயிரம் கிலோ இடை இருக்கும் இந்த மீனின் உடையா படங்கள் கீழே இணைக்கபட்டு உள்ளது.

31 விரல்களுடன் 6 வயது சிறுவன் – படங்கள் இணைப்பு

  
சீனாவில் பிறந்த இந்த ஆறு வயது சிறுவன் 31- விரல்களுடன் உள்ளான்.
கைகளில் 5 அதிகமான விரல்களும்,கால்களில் 6 விரல்களும் உள்ளன .
ஒரு கையில் ஏழு விரல்களும் , மறுகையில் எட்டு விரல்களும் உள்ளன.
இரண்டு கால்களிலும் அதிகமாக மூன்று விரல்கள் உள்ளன.
மருத்துவர்கள் இவ்வகையான நோயை “polydactyl ” என்று அழைக்குறார்கள்.
மிகவிரைவில் இந்த சிறுவன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளான்.
31fin
31fin