* இறைவன் கூறுகின்றான்: (நீதி செலுத்துங்கள்) நீதி உங்களுக்கோ, உங்களின் பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே... எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது.
(திருக்குர்ஆன் 4:135, 5:)
* நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்:
* நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். அவர்களில் ஒரு வகையினர் சுவனத்திற்கும், இருவகையினர் நரகத்திற்கும் செல்வர். உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்கியவர் கவனம் செல்வார். உண்மையை அறிந்திருந்தும் அநீதியாக தீர்ப்பு வழங்கியவரும், உண்மையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவரும் நரகம் புகுவர்.
* கடினமாக உழைத்து நீதியாக தீர்ப்பு வழங்கும் நீதிபதிக்கு இரண்டு நன்மைகளும், கடினமாக உழைத்தும் தவறிழைத்துவிடும் நீதிபதிக்கு ஒரு நன்மையும் கிட்டும்.
* லஞ்சம் கொடுப்பவரையும், லஞ்சம் பெறும் நீதிபதிகளையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
* கோபமாக இருக்கும் நிலையில் தீர்ப்பு வழங்க வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக