அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
26 மார்ச், 2011
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ம.ம.க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி போட்டியிடுகின்றார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜும்மா தொழுதுவிட்டு தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் சென்னை மாநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் பாஸ்கரன் அவர்களிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வரவேற்புடன் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி இன்று பகல் 3 மணியளவில் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக