#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

26 மார்ச், 2011

தி.மு.க., - மனிதநேய மக்கள் கட்சி கடும் போட்டி:சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

சென்னை:தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., - மனிதநேய மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுவதால் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி வரலாறு:மொத்தமுள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுவது, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பாடல் பெற்றதுமான பார்த்தசாரதி கோவில், பாரதியார் இறுதி காலத்தை கழித்தது, நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் வாழ்ந்தது, கடற்கரையை ஒட்டியது, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து மேல்நிலைப்பள்ளி, தென்னிந்தியாவின் பழமை வாய்ந்த மசூதிகள்கொண்டது என, பல்வேறு சிறப்பு பெற்ற இடங்கள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.புதிய, பழைய தலைமை செயலகங்கள், சென்னை பல்கலைக்கழகம், பழமை வாய்ந்த கல்லூரிகள், சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம், மத்திய ஆய்வு கூடம் ஆகியன இங்குள்ளன.

இதுவரை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் என தனித்தனி தொகுதிகளாக இருந்த தொகுதிகள்தற்போது இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என தொகுதிக்கு பெயரிடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின், 79, 81 முதல், 93, 95 முதல், 111 ஆகிய, வார்டுகள் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.இத்தொகுதிகளில் இதுவரை வென்றவர்கள்: சேப்பாக்கம் தொகுதியில், 1977, 80, 84 ஆகிய மூன்று தேர்தல்களில், தி.மு.க.,வின் ரகுமான்கான், 89ல், தேசிய லீக்கின் அப்துல் லத்தீப், 1991ல், காங்கிரசின் ஜீனத் ஷெரிப்தீன், பின்னர், 1996, 2001, 2006 ஆகிய மூன்று தேர்தல்களில், தி.மு.க., தலைவர் கருணாநிதியும் வெற்றி பெற்றனர்.

திருவல்லிக்கேணி தொகுதியில், 1952ல், காங்கிரசின் சம்பந்தம், 57ல், காங்கிரசின் ஹாஜா ஷெரீப், 1962, 67, 71ல், தி.மு.க.,வின் நெடுஞ்செழியன், 77ல், தி.மு.க.,வின் ரங்கநாதன், 80ல், காங்கிரசின் ஹாஜா ஷெரீப், 84ல், முஸ்லிம் லீக்கின் அப்துல் சமது, 89ல், தி.மு.க.,வின் நாஞ்சில் மனோகரன், 91ல், அ.தி.மு.க.,வின் முகமது ஆசீப், 96ல், தி.மு.க.,வின் நாஞ்சில் மனோகரன், 2001ல், தி.மு.க.,வின் உசைன், 2006ல், அ.தி.மு.க.,வின் பதர்சயீத்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தற்போதைய நிலவரம்: சேப்பாக்கம் தொகுதியில் கடந்த மூன்று முறை முதல்வர் கருணாநிதி வென்றிருந்தாலும், கழிவு நீர் பிரச்னை, இட நெருக்கடி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே இருந்து வருகின்றன.

புதிய தலைமை செயலகம் இட மாற்றத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மரங்கள் அழிப்பு போன்றவையும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. வி.ஐ.பி., தொகுதி என்பது மட்டுமே அவர்களின் சந்தோஷமாக இருந்தது.
கடந்த முறை இத்தொகுதியில் வென்ற கருணாநிதி இம்முறை திருவாரூரிலும், திருவல்லிக்கேணியில் வென்ற பதர்சயீத் வாய்ப்பு இல்லாததாலும் புது முகங்கள் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். தி.மு.க., சார்பில் இத்தொகுதியில், மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., கூட்டணியில் இத்தொகுதி மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில், மாநில துணைப் பொதுச் செயலர் தமீம் அன்சாரி போட்டியிடுகிறார்.பா.ஜ., கூட்டணி சார்பில், ஜனதா கட்சி வேட்பாளர் இத்தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அக்கட்சி சார்பில், எஸ்.வெங்கட்ராமன் போட்டியிடுகிறார்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு:இத்தொகுதியில் கணிசமான அளவிற்கு முஸ்லிம் ஓட்டுகளும், பிராமணர்கள் ஓட்டுகளும் உள்ளன.அ.தி.மு.க., கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுவதால், கணிசமான முஸ்லீம் ஓட்டுகளை அக்கட்சியும், பா.ஜ., கூட்டணி சார்பில் வெங்கட்ராமன் போட்டியிடுவதால், கணிசமான பிராமணர் ஓட்டுகளை அவரும் அறுவடை செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஏழைகளும், நடுத்தர மக்களும் இத்தொகுதியில் கணிசமான அளவில் உள்ளனர். அதனால், தி.மு.க.,விற்கு அக்கட்சி செய்த நலத்திட்ட உதவிகள் பெரும் உதவியாக இருக்கும். கடந்த தேர்தல் முடிவுகளை கூட்டி கழித்து பார்க்கும் போது, இத்தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற பிரகாசமான
வாய்ப்புகள் உள்ளன.இருப்பினும், பிரசார வியூகம், தேர்தல் நாள் நடைமுறைகள், வாக்கு பதிவு ஆகியவையே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும்.

வாக்காளர்கள்
ஆண் வாக்காளர்கள் -89 ஆயிரத்து 688
பெண்கள் - 89 ஆயிரத்து 815
திருநங்கைகள் - 7
மொத்தம் - 1 லட்சத்து 79 ஆயிரத்து 510
வாக்கு சாவடிகள் - 184
தேர்தல் அதிகாரி - சென்னை குடிநீர் வாரியபொது மேலாளர் பாஸ்கரன். போன்: 78450 20000.

நன்றி. தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக