
அப்போது வீடுவீடாக சென்று இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். புதுமடத்தில் அவர் பேசியதாவது:-
மீனவர்கள் பிரச்சி னையை தீர்ப்பதே எனது முதல் பணி. மீனவர்கள் பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய-மாநில அரசுகள் அக்கறை காட்ட வில்லை. தொடர்ந்து புறக் கணித்து வருகின்றன. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கச்சத்தீவை கைப்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடல் அட்டைகள் மீதான தடையை நீக்க முயற்சி எடுப்பேன். கார்ப்ரேட் நிறுவனங்கள் கடல் அட்டையை பிடித்துச் செல்ல அனுமதி வழங்கும் அரசு, அப்பாவி ஏழை மீனவர்கள் பிடித்தால் வழக்கு போடுகிறது.
இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பேன். அவருடன் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா,மாவட்ட அவைத்தலைவர் சேகர்,மாவட்டதுணை செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் தங்க மரைக்காயர், மீனவரணி செயலாளர் தர்வேஸ், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், மாவட்ட சிறு பான்மை பிரிவு துணை செயலாளர் நூர்முகம்மது, இணைசெயலாளர் புதுமடம் ஜலீல்,மானாங்குடி ஊராட்சி தலைவர் நளவழுதி,ஒன்றிய ஜெயலலிதா பேரவை சந்தி ரன்,ஒன்றிய மாணவரணி துணைத்தலைவர் நாகாச்சி நாகநாதன் மற்றும் அ.தி.மு. க. வினர், கூட்டணிகட்சியினர் வாக்குகள் சேகரித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக