
புதுடெல்லி:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் மிரட்டல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஈரானுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஈரானுடன் வர்த்தக உறவு சில துறைகளில் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்பது இம்முயற்சிக்கு தூண்டுதலாகும். இதன் ஒருபகுதியாக இந்திய வர்த்தக பிரதிநிதிகுழு விரைவில் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு செல்ல உள்ளது. இம்மாதம் இறுதியில் இந்திய பிரதிநிதி குழு ஈரானுக்கு செல்லும் என வர்த்தக அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதேவேளையில் எத்தகைய வாய்ப்புகளை ஈரானிடம் இருந்து இந்தியா எதிர்பார்க்கிறது என்பதை வர்த்தக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை.
தேயிலை, அரிசி, கோதுமை, மருந்துகள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு போதுமான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள அடிப்படை வசதிகள் வளர்ச்சி நிறுவனங்களுக்கும் ஈரானில் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக