#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

20 டிசம்பர், 2010

கடலூர் அருகே வேன் மீது ஆம்னி பஸ் மோதல் : பள்ளி மாணவியர் 4 பேர் பலி: டிரைவர் கைது

கடலூர் : கடலூர் அருகே ஆம்னி பஸ், எதிரே வந்த பள்ளி மாணவ, மாணவியர் வேனில் மோதியதில், நான்கு மாணவியர்கள் பலியாகினர்; 30 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கு காரணமான ஆம்னி பஸ் டிரைவர், கைது செய்யப்பட்டார்.


கடலூர் அடுத்த பெரியப்பட்டு மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 19 மாணவ, மாணவியரை ஏற்றிய, தனியார் வேன் (டி என் 31 9788), நேற்று காலை, கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. செம்மங்குப்பத்தை சேர்ந்த மணிவேல் (23) வேனை ஓட்டினார். கடலூர் - சிதம்பரம் சாலையில் செம்மங்குப்பம் ஐயனார் கோவில் அருகே, காலை 7.35 மணிக்கு வேன் வந்தது. கடலூரில் இருந்து நாகார்ஜூனா ஆயில் கம்பெனி ஊழியர்கள் 15 பேரை ஏற்றி (டி என் 21 ஏ வி 0046) ஆம்னி பஸ், பெரியக்குப்பம் சென்று கொண்டிருந்தது. செம்மங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நின்ற அரசு பஸ்சை முந்தி சென்று, திடீரென இடது பக்கமாக திரும்பிய போது, முன்னால் சைக்கிளில் சென்ற செம்மங்குப்பம் சிவலிங்கம் (60) மீது மோதியது. இதையடுத்து, ஆம்னி பஸ் டிரைவர் அருள்முருகன் (30), பஸ்சை வலதுபுறமாக திருப்ப முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் வலதுபுறம் தாறுமாறாக ஓடியது. இதை பார்த்த பள்ளி வேன் டிரைவர், வேனை ஓரமாக நிறுத்தினார். இருப்பினும் ஆம்னி பஸ், வேன் மீது பயங்கர சத்தத்துடன் மோதி, சாலையில் உருண்டது. ஆம்னி பஸ் மோதிய வேகத்தில் வேனின் வலதுபுறம் பெயர்ந்து, 20 மீட்டர் தூரத்தில் விழுந்தது. வேன் இருக்கையுடன் மாணவ, மாணவியர் 10 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தூக்கி எறியப்பட்டு, சாலையோர பள்ளத்தில் விழுந்தனர்.


இந்த கோர விபத்தில், கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மாணவியரான திருச்சோபுரம் பெருமாள் மகள்கள் அபிராமி (15), அகிலாண்டேஸ்வரி (12), பெரியக்குப்பம் ராமச்சந்திரன் மகள் பவித்ரா (14) சம்பவ இடத்திலேயே இறந்தனர். இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் நாகார்ஜூனா கம்பெனி ஊழியர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு, அவ்வழியே வந்த தனியார் மற்றும் அரசு பஸ்கள் மூலம், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திவ்யா (15), நிஷா (17), தரணி (11), சாந்தநேசன் (7), கனிஷ்கா (9), முகிலன் (4), சங்கவி (14), ஜெயசுதா ஆகியோர், மேல் சிகிச்சைக்காக கடலூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவித்ராவின் சகோதரி திவ்யா (15) இறந்தார். கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன் மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.


விபத்து குறித்து, கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, விழுப்புரம் மாவட்டம் மைலம் அடுத்த குன்னம் கிராமத்தை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் அருள்முருகனை கைது செய்தனர். இவர் கிரேன் இயக்குபவர் என்றும், வழக்கமான டிரைவர் வராததால், ஆம்னி பஸ்சை ஓட்டிச் சென்றதாக விசாரணையில் தெரிந்தது .

விபத்தில் இறந்த பள்ளி மாணவிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார். கடலூர் அருகே வேன் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் நாகார்ஜூனா கம்பெனி ஊழியர்களை சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், கடலூர் சேர்மன் தங்கராசு, துணை சேர்மன் தாமரைச்செல்வன், மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த மாணவிகளின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், "காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு உதவிகளை செய்யும். அடிக்கடி பள்ளி வேன்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க வாகனங்களுக்கு மஞ்சள் நிற பெயின்ட் அடிக்க வேண்டும் என ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பள்ளி வாகனங்கள் கடைபிடிக்கிறதா என்று தெரியவில்லை. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது கவனமாக இருக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு அரசு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா என கண்காணிக்கப்படும். விபத்தில் இறந்த பள்ளி மாணவிகளுக்கு, முதல்வரிடம் எடுத்துக் கூறி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

நன்றி.தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக