#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

02 ஏப்ரல், 2012

மறைமுகமாக மதவெறி முஸ்லிம் குழந்தைகள் புறக்கணிப்பு





இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் குழந்தைகளை நர்சரியில் சேர்க்க மறுக்கின்றனர் என்ற ஆய்வுக் கட்டுரையை தி ஹிந்து நாளிதழ் 19.03.2012 அன்று பிரசுரித்துள்ளது. டெல்லியில் உள்ள மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் மட்டும் 25 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பள்ளிக்கூட மாணவர் சேர்க்கையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி உட்பட 92 பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை சம்பந்தமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.

இருபது பள்ளிக்கூடங்களில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் ஒரு முஸ்லிம் குழந்தை கூட அனுமதிக்கப்படவில்லை. மற்ற பதினேழு பள்ளிக்கூடங்களில் நடைபெற்ற ஆய்வில் தலா ஒரு குழந்தை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லியிலுள்ள பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் முஸ்லிம்கள் சேர்க்கை சம்பந்தமாக தகவல்களைத் தர மறுக்கின்றனர். காரணம் முஸ்லிம் குழந்தைகளை நர்சரியில் பள்ளிக்கூட நிர்வாகம் சேர்க்கவில்லை என்பதேயாகும்.
முஸ்லிம் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சேர எத்தனைப் பேர் விண்ணப்பித்துள்ளனர், அதில் எத்தனை பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை வெளிப்படுத்திய பள்ளிக்கூடங்களின் தகவலைப் பார்க்கும்போது முஸ்லிம் சமுதாயம் இரண்டாந்தர குடிமக்களை விடவும் மோசமாக நடத்தப்படுகின்றனர் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு,
பூசா சாலையிலுள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளிக்கூடத்தில் 170 நர்சரி மாணவர் சேர்க்கைக்காக 2443 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 155 முஸ்லிம் குழந்தைகளும் அடங்குவர். ஆனால் வெறும் இரண்டு முஸ்லிம் குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதுவும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவின் கீழ் அவ்விரு குழந்தைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு கைலாசில் டெல்லி அரசு பள்ளிக்கூடம் உள்ளது. அந்த பள்ளிக்கூடத்தைச் சுற்றிலும் வாழுகின்ற மக்களில் பெரும்பாலும் முஸ்லிம்களே. முஸ்லிம் பகுதியிலுள்ள டெல்லி அரசு பள்ளிக்கூடத்தில் 269 மாணவர் சேர்க்கைக்காக 2997 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 260 முஸ்லிம் குழந்தைகளும் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஐந்து முஸ்லிம் குழந்தைகள் மட்டும்தான் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். டெல்லி முதலமைச்சருக்கு கடிதம் சமூக ஆர்வலர் அப்துல் காலிக், டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்துக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், டெல்லியிலுள்ள பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் குழந்தைகளை சேர்ப்பதில்லை. முஸ்லிம்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில்லை. டெல்லி மக்கள் தொகையில் அரசின் கணக்கெடுப்பின்படி 15 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் 0.5 சதவீத முஸ்லிம்களை மட்டுமே பள்ளிக்கூடங்கள் சேர்க்கின்றன. டெல்லி கீர்த்தி நகர் கிளையிலுள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளிக்கூடத்தில் ஒரு முஸ்லிம் குழந்தை கூட சேர்க்கப்படவில்லை.

டவ்லாகுவான் கிளையிலுள்ள பள்ளிக்கூடத்தில் ஒரு முஸ்லிம் குழந்தை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. லாஜ்பத் நகரிலுள்ள புளு பெல்ஸ் பள்ளிக்கூடத்தில் 150 நர்ஸரி மாணவர் சேர்க்கையில் வெறும் இரண்டு முஸ்லிம் குழந்தைகளை மட்டுமே சேர்த்துள்ளனர். அதுபோன்று சாதிக் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் 120 பேரில் மூன்று முஸ்லிம் குழந்தைகளை மட்டுமே நர்ஸரியில் சேர்த்துள்ளனர். மேற்கூறப்பட்ட அனைத்து பள்ளிக்கூடங்களும் முஸ்லிம்கள் முழுமையாக உள்ள பகுதியாகும் என்று சமூக ஆர்வலர் அப்துல் காலிக் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தின் நகலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலுக்கும் அனுப்பியுள்ளார். இதுசம்பந்தமாக தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் வஜஹத் ஹபீபுல்லாஹ் குறிப்பிடுகையில், சிறுபான்மை சமுதாயத்தினருக்கு அரசு வழங்கும் எந்த சலுகைகளும், நலத்திட்டங்களும் வந்து சேருவதில்லை என்று குறிப்பிட்டார். முஸ்லிம் குழந்தைகள் பள்ளிக்கூட சேர்க்கையில் புறக்கணிப்பு சம்பந்தமாக தி ஹிந்து பத்திரிகையில் வந்த ஆய்வை எடுத்துக்காட்டி லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கேள்வி எழுப்பினார். இந்தப் பிரச்சனையை பாஸ்வான் மாநிலங்களவையில் எழுப்பியவுடன் பாஜக உறுப்பினர் பல்பீர் புன்ஜ் கடுமையாக எதிர்த்தார். மதரஸாவில் முஸ்லிம்களை சேர்ப்பதை நிறுத்த வேண்டுமென கொக்கரித்தார். மதரீதியான பிரச்சனைகளை எழுப்பக்கூடாது என்றார். உடனே பாஸ்வான் பேசுகையில், முஸ்லிம்கள் இந்திய நாட்டின் பிரஜைகள் இல்லையா? எனக் கேட்டார்.

கல்விக்கூடங்களில் முஸ்லிம்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்க்க மறுக்கின்றனர். இதற்கு உடனடியான தீர்வுகளை அரசு ஏற்படுத்த வேண்டுமென பாஸ்வான் வலியுறுத்தினார். இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். குறைவான எண்ணிக்கையில் சேர்க்கப்பட்ட முஸ்லிம் குழந்தைகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின் கீழ்தான் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாமல் அரசுப் பள்ளிக்கூடங்களிலும் முஸ்லிம் குழந்தைகளை சேர்க்க மறுக்கின்றனர்.

கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரத்திலும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டுமென்று போராட்டம் நடத்தும்போது சங்பரிவார அமைப்புகள் மதரீதியான இடஒதுக்கீடு கூடாது என விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர். முஸ்லிம்கள் நிராகரிக்கப்படுவது மதரீதியாகத்தானே தவிர பொருளாதார ரீதியாக இல்லை என்பது மேற்கூறப்பட்ட தகவலில் நிரூபணமாகிறது. இதுசம்பந்தமாக டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் கூறுகையில், அரசு நடத்தும் பள்ளிக்கூடங்களில் 16 சதவீதம் முஸ்லிம் குழந்தைகளை சேர்த்திருக்கிறோம் என்றார். இந்த ஆய்வறிக்கையைப் பற்றி பத்திரிக்கையாளர் கேட்டபோது, இதுசம்பந்தமான அனைத்து தகவலையும் நாளைக்கு சொல்கிறேன் என்று கூறி நழுவினார். இன்றைய நாள்வரை முஸ்லிம்களை பள்ளிக்கூடத்தில் சேர்க்க மறுப்பது சம்பந்தமாக ஷீலா தீட்சித் எதுவுமே கூறவில்லை. அடுத்த மாதம் வரக்கூடிய டெல்லி உள்ளாட்சிமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் உத்தரபிரதேசத்தில் செய்தது போன்று காங்கிரசுக்கு பாடம் புகட்டுவார்கள்.

முஸ்லிம் குழந்தைகளை கல்விக்கூடங்களில் புறக்கணிப்பது என்பது டெல்லியில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலும் பல பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் குழந்தைகளை நர்சரியில் சேர்க்க பள்ளி நிர்வாகங்கள் மறுக்கின்றன. தரம் மிக்க கல்வியை அனைத்து சமுதாயத்திற்கும் வழங்கினால் மட்டுமே இந்தியா முன்னேற்றம் அடைய முடியும். அனைவருக்கும் கல்வி, சமத்துவம் என்ற அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். செயல்பட வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய முஸ்லிம்கள் நாடாளுமன்றத்தில் சமுதாயக் கட்சிகள் சார்பில் எண்ணிக்கை வெற்றி பெற்று சென்றால்தான் இது போன்ற பிரச்சனைகளை உலுக்கி எடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக