அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
14 ஏப்ரல், 2012
இரான்-உலக வல்லரசுகள் இடையிலான பேச்சுவார்த்தை
இரான்-உலக வல்லரசுகள் சந்திப்பு
இரானின் அணுத்திட்டம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இரானுக்கும் ஆறு முக்கிய வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை துருக்கியில் நடைபெறுகின்றது. பிராந்தியத்தில் அதிகரித்துவரும் குழப்பநிலைமையை கட்டுப்படுத்த இந்த சந்திப்பு உதவும் என்று அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ்,ரஷ்யா மற்றும் ஜேர்மனியின் பிரதிநிதிகள் நம்புகின்றனர்.
தனது அணுத்திட்டம் சிவில் தேவைக்கானது என்று இரான் வாதிட்டு வருகின்றது; ஆனால் அந்நாடு அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிப்பதாக மற்றபல நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன. இரானின் நடவடிக்கையை தடுப்பதற்காக அந்நாட்டின் மீது தாக்குதல்களைத் தொடுக்கப் போவதாக அச்சுறுத்தும் வகையில் இஸ்ரேலும் அண்மைக் காலங்களில் கருத்துக்களை வெளியிட்டுவந்தது. கடந்த 15 மாதங்களில் முதற்தடவையாக, உலகின் முக்கிய சக்திகளுக்கும் இரானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இரான் எந்தளவுக்கு ஆர்வத்துடன் ஈடுபடுகிறது என்பதன் அடிப்படையிலேயே, அடுத்தக்கட்டமாக இன்னும் சில வாரங்களில் அடுத்தச் சுற்றுப்பேச்சுக்கள் நடக்கும் வாய்ப்பு இருக்கின்றது என இஸ்தான்புல்லில் இருக்கின்ற பிபிசி செய்தியாளர் கூறுகிறார். ஆனால் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் குழப்பத்தை சற்று தணிக்க இப்போதைக்கு இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என்று சந்திப்பில் கலந்துகொள்ளும் நாடுகள் எதிர்பார்க்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக