நீச்சல் குளம் இருக்கிறது. 25 ஆயிரம் சதுர அடியில் உள்விளையாட்டு அரங்கம் இருக்கி றது. நானூறு மீட்டர் ஓடு தளம் இருக்கிறது. என்றெல்லாம் விளம்பரம் வெளியாகிறது. இது வெல்லாம் எந்த வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு என்று தெரியுமா? மழலையர் பள்ளியில் இருந்து 5ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு வியாபாரப் போட்டியில் தனியார் பள்ளிகளின் விளம்பரம் 5 நட்சத்திர சொகுசு விடுதிகளுக்கு இணையான வசதிகளை நாங்கள் செய்திருக் கிறோம். எங்கள் பள்ளியில் மாணவர்களை சேருங்கள் என அழைப்பு மேல் அழைப்பு வந்த வண்ணமிருக்கிறது.
கல்வி என்பது அறிவுநுட்பத்திற்கான அடித் தளமாக இருந்து, எதிர்காலத்தை வழிநடத்திட ஏதுவாக இருக்க வேண்டும். அதுதான் சிறந்த கல்வியாக இருக்கும் என்ற கோட்பாடு இன்று தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறது. கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் சூத்திர மாக மாற்றப்பட்டுள்ளது. எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ அந்த அளவிற்கு அந்த கல்விச் சூத்திரத்தின் விலையும் உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் கல்வி என்பது பொருளீட் டுகிற முதலீடாக முன்நிறுத்தப்படுகிறது. அதற் கேற்றவாறு ஆசிரியர்களும் விற்கிறவர்களாக மாற்றப்பட்டு இருக்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் இந்த அவலத்தை அரங்கேற்ற எல்லாவிதமான அடித்தளத்தையும் அமைத்து சீராட்டி பாராட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியே புற்றீசல்களாய் தனியார் கல்வி நிறுவனங்கள் புறப்பட்டுள்ளன. திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்களெல்லாம் இன்று கல்வி நிறுவனங்களை அமைத்துக்கடைவிரித்து உட் கார்ந்திருக்கின்றனர். அமைச்சர்கள் முதல் சாராய வியாபாரிகள் வரை கூட்டுச் சேர்ந்து ‘லாபம்’ வற்றாத ஜீவநதிகளாக கல்வி வாணி பத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.
ஆனால் நமது அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியை இலவசமாகவும் தரமாகவும் தரவேண்டும் என்று சொல்கிறது. ஆனால் அந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கட்டுப்படாத உலகமயம் இந்தியாவிற்குள் புகுந்து கல்வியை கடைச்சரக்காக மாற்றியிருக் கிறது. கல்வியை விலைக்கு வாங்க ரூபாய் நோட்டுகள் வரிசையில் நிற்கின்றன. கந்தல் பையோடு வரும் காசில்லாதவனுக்கு ஏக்கப் பெருமூச்சே மிஞ்சுகிறது.
தனியார்மயம்தான் வளர்ச்சியின் தாரக மந்திரம் என பாடம் எடுக்கும் அமெரிக்காவில் கூட 15 சதவிகிதம் கல்வி மட்டுமே தனியார் கையில் உள்ளது. ஆனால் இந்தியாவிலோ 96 சதவிகிதம் தனியாருக்குத்தான் அனுமதி. இருக்கும் கதவை அகலத்திறந்து விட்டு, மத்திய அரசு அவர்களுக்கு கை கட்டி காவலுக்கு நிற்கிறது. அனைவருக்கும் பேதமின்றி சமமான கல்வி கிடைத்திட உலகமயக் கொள்கைகளை அடியோடு அகற்றிட வேண்டும். அப்போதுதான் எட்டா உயரத்தில் இருக்கும் கல்வி, சாதாரண மக்களின் கைகளுக்கு எட்டும் நிலை வரும்.
நன்றி.தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக