#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

09 ஏப்ரல், 2011

இஸ்லாமியர்கள் இதயத்தில் இடம் பிடித்தது யார்?


எஸ்.எம்.பாக்கர், தேசிய தலைவர், தவ்ஹீத் ஜமாஅத் கட்சி. : நான் தான் முஸ்லிம்களின் முதல் நண்பன் என்றும், சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்றும் சொல்லிக்கொள்ளும் கருணாநிதியால் நேரடியாக முஸ்லிம்களுக்கு சென்றடையும் திட்டம் ஏதுமில்லை. உலமாக்களுக்கு முதலில் எம்.ஜி.ஆர்., தான் பென்ஷன் வழங்கினார். வக்பு போர்டுக்கு கட்டடம் கட்ட எம்.ஜி.ஆர்., தான் நிலம் கொடுத்து உதவினார். ஜெயலலிதா கட்டடம் கட்டிக் கொடுத்தார்.



முஸ்லிம்களுக்கு ஜீவாதார பிரச்னை இட ஒதுக்கீடு குறித்து, 1997ம் ஆண்டு லத்தீப், சட்டசபையில் கருணாநிதியிடம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டதற்கு, "லத்தீப் பாய்! என்னை குழப்ப பார்க்கிறீர்கள். முடியாது என்று உங்களுக்கு தெரியாதா' என்று கேட்டவர் தான் கருணாநிதி.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 2006ம் ஆண்டு சிறுபான்மை நல பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் புதுப்பிக்கப்பட்டு, அதில் திருத்தம் கொண்டு வர, ஓராண்டு காலம் நிர்ணயம் செய்யப்பட்டது. கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது, ஆணையத்தை கலைத்துவிட்டு, சிறுபான்மை மக்கள் நல ஆணையம் அமைத்து, வரைமுறைகளை ஏற்படுத்த இரண்டு ஆண்டு அவகாசம் அளித்தார். ஆணையத்தில் முஸ்லிம்கள் யாரும் இடம்பெறவில்லை.

"நாங்கள், 156 ஜாதியில் ஒரு ஜாதியாக இருக்கிறோம். அதிலிருந்து எங்களை தனியாக பிரித்துவிடுங்கள்' என்று கேட்டதற்கு, முடியாது என்று கருணாநிதி சொல்லிவிட்டார். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடை 7 சதவீதம் ஆக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தினோம். பயன் ஏதுமில்லை. தி.மு.க., அரசில், முஸ்லிம்கள் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்று வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை. தேர்தல் நெருங்கியதும், 5 சதவீத இட ஒதுக்கீடு தருகிறேன் என்கிறார். இது முஸ்லிம்களை ஏமாற்றும் வேலை.

வக்பு போர்டுக்கு சொந்தமான ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அன்னியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று வக்பு போர்டு தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். திருச்சியில், தி.மு.க., அறிவாலயம் கட்டியுள்ள இடத்தில் வாகன நிறுத்தம் உள்ள இடம், வக்பு வாரியத்திற்கு சொந்தமானது. அதை, அந்த இடத்தை வைத்திருந்தவரிடம் எழுதி வாங்கியுள்ளனர்.

ஜெயலலிதா, சிறுபான்மையினரை அடக்கி ஆள நினைக்கவில்லை. ஆனால், தி.மு.க.,வின் சிறுபான்மை பிரிவாக முஸ்லிம் லீக் மாற்றப்பட்டுள்ளது. தி.மு.க., அரசின் மிகப்பெரிய சாதனை, முஸ்லிம்களை தீவிரவாதி என 1996ம் ஆண்டு கருணாநிதி சொன்னது தான். 1996ம் ஆண்டு கோவையில் நடந்த கலவரத்தில் 19 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பங்களுக்கு கருணாநிதி வந்து ஆறுதல் சொல்லவில்லை. 1998ம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடந்தது.

கருணாநிதி வந்து ஆறுதல் சொல்லியிருந்தால் அனைவரிடமும் சமாதானம் நிலவியிருக்கும். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 164 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 12 பேரை தவிர மற்றவர்கள், 14 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் சிறையில் எத்தனை துன்பங்களை அனுபவித்திருப்பர் என்று கருணாநிதிக்கு தெரியாதது இல்லை.

எஸ்.எம்.இதயத்துல்லா, தமிழக அமைப்புச் செயலர், அகில இந்திய காங்கிரஸ். : தி.மு.க., ஆட்சியில் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பல்வேறு சலுகைகள் கிடைத்துள்ளன. சென்னை காயிதே மில்லத் கல்லூரிக்கும், மதுரை வக்பு போர்டு கல்லூரிக்கும் 50 ஏக்கர் நிலம் வழங்கி, கல்லூரி கட்டிக் கொடுக்கப்பட்டது. ஷேக் மற்றும் சையது போன்ற இனங்களைத் தவிர, உருது முஸ்லிம் உள்ளிட்ட அனைவரும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவித்து, உலமாக்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கி நல வாரியம் அமைக்கப்பட்டது. இலவச சைக்கிள் வழங்கப்பட்டது; சிறுபான்மை கமிஷன் அமைத்தது; அதற்கு அரசு அதிகாரம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முஸ்லிம் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை அமைத்து, கடன் உதவி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்து, மூன்றே மாதங்களில் அரசாணை வெளியிடப்பட்டது. இட ஒதுக்கீட்டில் வந்த ரோஸ்டர் பிரச்னை சரி செய்யப்பட்டது. முஸ்லிம் பெண்கள் உதவிச் சங்கம் அமைத்து மாவட்டந்தோறும் 10 லட்சம் ரூபாய் மானியத்தை தி.மு.க., அரசு வழங்கியது.

பிற மாநிலங்களில் வழங்கப்படாத சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகையை முதல்வர் கருணாநிதி வழங்கினார். அதற்காக மாநில அரசின் 25 சதவீதத்தை தி.மு.க., அரசு வழங்கியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் உருவான திருமண பதிவு சட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு திருத்தம் வழங்கப்பட்டது.கிறிஸ்தவ, முஸ்லிம் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் வேலை செய்யும் 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தி.மு.க., அரசு சம்பளம் வழங்கியது. சமச்சீர் கல்வி முறையில் அரபி, உருது போன்ற சிறுபான்மை மொழிகளுக்கு இருந்த பிரச்னையையும் தி.மு.க.,வே தீர்த்து வைத்துள்ளது.

பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களுக்கு தேவைப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ளாட்சித் துறையே அதிகாரம் வழங்கலாம் என, சமீபத்திய தேர்தல் அறிக்கை மூலம் தி.மு.க., தெளிவுபடுத்தியுள்ளது. இரண்டு முஸ்லிம்கள், இரண்டு கிறிஸ்தவர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கி முஸ்லிம்களை முதல்வர் கருணாநிதி பெருமைப்படுத்தினார். ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், மற்ற கட்சிகளை விட கூடுதல் எம்.எல்.ஏ., சீட்டுகள் வழங்கி பரிவு காட்டி வருகிறார்.

இட ஒதுக்கீடு மூலம் நான்கு மடங்கு பொறியியல் கல்லூரி இடங்களும், மூன்று மடங்கு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தன. எனது கோரிக்கையை ஏற்று, 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்குவேன் என வாக்குறுதி அளித்துள்ளார் முதல்வர்.

ஆனால், அ.தி.மு.க., அரசு சிறுபான்மையினரை தண்டிக்கும் வகையில் மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. முஸ்லிம்களின் பாரம்பரிய தொகுதியான வாணியம்பாடி இடைத்தேர்தலில், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு சீட் வழங்கவில்லை. ஆந்திராவில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா எதிர்த்தார். நான்கு ஆண்டுகளாக, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் இல்லாமல் அ.தி.மு.க.,வின் முந்தைய ஆட்சி நடந்தது.
 
நன்றி.தினமலர்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக